Sunday, September 29, 2019

பள்ளி புற மதிப்பீட்டு குழு - DIET PRINCIPAL, LECTURER, APO, ADPC, BEO பணிகள் என்னென்ன - பதிவேடுகள்,

பள்ளி புற மதிப்பீட்டு குழு - DIET PRINCIPAL, LECTURER, APO, ADPC, BEO பணிகள் என்னென்ன - பதிவேடுகள்,

Saturday, September 28, 2019

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2019- 2020 கல்வி ஆண்டிற்கு படிப்பு உதவித்தொகை

பட்டயப்படிப்பு/பட்டப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2019- 2020 கல்வி ஆண்டிற்கு படிப்பு உதவித்தொகை வழங்குதல் - விண்ணப்பம் கோருதல் சார்பு

                Click Here

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நாள்குறிப்பேடு: பள்ளிக் கல்வித்துறை திட்டம்



தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நாள்குறிப்பேடு("டைரி') வழங்கும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை செயல்படுத்தவுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்கள், சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி உள்பட பல்வேறு வகையான விலையில்லா பொருள்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகின்றன.



கடந்த கல்வியாண்டு

Friday, September 27, 2019

குரூப் 2 தேர்வு முறையில் மாற்றம்! பொதுத்தமிழ் பாடம் நீக்கம்..


டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் வினாத்தாள் அமைப்பு மற்றும் தேர்வுக்குரிய

அரசு ஊழியர்- ஆசிரியர் விளையாட்டுப் போட்டிகள்..

ஆசிரிய,ஆசிரியைகளுக்கான விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது....


உடலை
பேணிக் காக்க உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுபடுவோம்.. மாணவர்களும்,நமது குழந்தைகளும் நம்மை முன்மாதிரியாக பின்பற்ற உழைத்திடுவோம்..

School Annual Inspection New Format

பள்ளி ஆண்டாய்வு புதிய படிவம் - தொடக்கக் கல்வி

வட்டாரக் கல்வி அலுவலரின்  அறிக்கை புதிய படிவம்


.

ஆதாருடன் 'பான்' இணைக்க ...

ஆதாருடன் 'பான்' இணைக்க செப் 30ம் தேதி கடைசி நாள்

                    நாட்டில் உள்ள அனைவருக்கும், 12 இலக்க எண்களை கொண்ட, ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையுடன், வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பயன்படும், பான் எண்ணை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது.இதற்கான கால அவகாசம், பலமுறை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், இம்மாதம், 30 உடன், முடிவுக்கு வருகிறது. அதற்குப் பிறகும், ஆதாருடன், பான் எண் இணைக்கப்படவில்ல எனில், அந்த குறிப்பிட்ட பான் அட்டை, பயனற்றதாகி விடும் என, மத்திய நிதி துறை எச்சரித்துள்ளது.

750 pp தணிக்கை தடை

750 pp தணிக்கை தடையையின் மீது முத்தரப்பு கூட்டு கூட்டம் ( joint sitting) வழியாக நடவடிக்கைகள் எடுத்து ஆணை

Thursday, September 26, 2019

பள்ளி காலை வழிபாட்டுக் குழுவின் சிறப்பு நிகழ்வு - 25.09.19

அனைத்து ஆசிரியர்களும் தினமும் காலையில் தங்கள் அலைபேசியில் அதிகம் தேடும் செய்தி எங்களின் காலை வழிபாடு செயல்பாடுகள். இதனை

Tuesday, September 24, 2019

Sunday, September 22, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.09.19

திருக்குறள்


அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:286

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

விளக்கம்:

பிறர் பொருளைக்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு! அமைச்சர் அறிவிப்பு

கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பு தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க செப்.25 வரை அவகாசம்

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம்

Saturday, September 21, 2019

பிளஸ் 2 பாடப் புத்தகம் வழங்குவதில் தாமதம்

தமிழகத்தில், பிளஸ் 1க்கு, 2018ம் ஆண்டும்; பிளஸ் 2க்கு, இந்த ஆண்டும்,

Friday, September 20, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.09.19

திருக்குறள்


அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:285

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

விளக்கம்:

மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

பழமொழி

Get a thief to catch a thief.

 முள்ளை முள்ளால் எடு.

இரண்டொழுக்க பண்புகள்

1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்

பொன்மொழி

உண்மை இந்த வார்த்தை அனைத்து மனரீதியான தாக்கத்திற்கும் கருவாக அமைகிறது. மனம் நலம் பெற உண்மையே சிறந்த மருந்து என்பதை அனைவரும் உணரவேண்டும் ....

நீதியரசர் ஏ.ஆர் .எல்

பொது அறிவு

செப்டம்பர் 21 -இன்று சர்வதேச அமைதி தினம்

1. அமைதிக்காக இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருது எது ?

பன்னாட்டு காந்தி அமைதிப் பரிசு.

2. உலக அளவில் வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு ,இந்தியாவின் பாரத ரத்னா விருது ஆகிய இரண்டையும் பெற்ற ஒரே பெண்மணி யார்?

அன்னை தெரசா

English words & meanings

* Ulcer - A sore that develops on the lining of the small intestine. குடல்புண்
சரியற்ற உணவுப் பழக்கம் மற்றும் வாழ்வியல் முறையையு அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனை அல்சர்.

* Understand - perceive the intend meaning
புரிந்து கொள்ளுதல்

ஆரோக்ய வாழ்வு

மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் கிடைக்கும் .

Some important  abbreviations for students

*  AR - Arunachal Pradesh

*  AS - Assam

நீதிக்கதை

வாய்மையே வெல்லும்

ஒரு ஊரில் கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சமாக செலவு செய்வான். யாருக்கும் உதவி செய்யாதவன், அவனுக்கு ஒரு நாள் அவன் வீட்டுத் தோட்டத்தில் உள்ள வேப்பமரத்திற்கு அடியில் புதையல் இருப்பது போல கனவு வந்தது.

தூக்கத்திலிருந்து கஞ்சன் எழுந்து புதையலை எடுக்க நினைத்தான். பகலில் சென்றால் பிறருக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து இரவில் புதையலை எடுக்க சென்றான். அப்போது, அங்கிருந்த நல்ல பாம்பு ஒன்று அவனைக் கடித்துவிட்டது. விஷம் ஏறியது. விஷக்கடி மந்திரவாதியிடம் ஓடினான் கஞ்சன். அவர் தன்னிடம் வரும் நோயாளிக்கு மந்திரம் சொல்லியே நோயைக் குணமாக்குவார்.

பூரான் கடிக்கு - 5 ரூபாய், தேள் கடிக்கு - 10 ரூபாய், பாம்பு கடிக்கு - 25 ரூபாய்

உனக்கு என்ன கடித்தது என்றார் மந்திரவாதி. அந்த நேரத்தில் கஞ்சன் எந்த கடியானாலும் ஒரே மந்திரம் தானே சொல்லப் போகிறார் என்று நினைத்து பாம்பு கடித்தது என்று சொல்லி அதிக காசு கொடுக்க வேண்டும் என்று கஞ்சமாக யோசித்து பூரான் கடித்து விட்டது என்று பொய் கூறினான்.

மந்திரவாதி பூரான்கடி மந்திரத்தை சொல்ல, பயன் இல்லை. மீண்டும் வைத்தியரே எனக்கு தேள் கடித்து விட்டது என்றான். மந்திரவாதி தேள்கடி மந்திரத்தை சொன்னார், இப்போதும் எந்த பயனும் இல்லை.

பயந்து போன கஞ்சன் மெதுவாக, பா, பா பாம்பு கடித்தது என்றான். அவன் சொல்லி முடிப்பதற்குள் விஷம் தலைக்கு ஏறி இறந்து விட்டான்.

நீதி :
அளவுக்கு மீறின கஞ்சம் உயிரினை எடுக்கும்.

இன்றைய செய்திகள்

21.09.2019

* உலக புகழ் பெற்ற பல்கலையோடு கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு நடத்த திட்டம்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு.

* கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்படும் அண்ணா நூற்றறாண்டு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில், ஐ.ஏ.எஸ். தோ்வுக்கு உதவித் தொகையுடன் கூடிய 6 மாத இலவசப் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

* தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை தொடரும்: 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

* உலக மல்யுத்த போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

* உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பாங்கல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

Today's Headlines

🌸. Aligned with the world famous University  plans to conduct next phase of research in kizhadi  announced Minister Mafa Pandiyarajan

 🌸Coimbatore: In the Bharathiyar University at Coimbatore campus The Director of the IAS coaching Center said that the trainee people will be given IAS coaching for 6 months with free of cost and with a subsidy in  Anna centennial IAS training centre

 🌸Heavy rains to be continue for 3 days in Tamil Nadu also the meteorological centre announced that there will be heavy rain in 14 districts today

 🌸Bajrang Punia won the bronze medal in 65kg category in  World Wrestling Championship

🌸 Indian boxer Amit Pangal has advanced to the final of the World Boxing Tournament.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2OeBLPi

கி.மு., 600ம் ஆண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்

தமிழகத்தில் கி.மு. 600ம் ஆண்டிலேயே எழுதத் தெரிந்த நகர மக்கள்

TEACHERS' FORM

படிவங்கள்


1.தற்செயல்விடுப்பு தலைமையாசிரியர் அனுமதிபடிவம்
 
2.தற்செயல்விடுப்பு A.E.E.O. அனுமதி படிவம்
C.P.S APPLICATION FOR ADMISSION 

3.ஈட்டியவிடுப்பு ஒப்

நிலாவில் கடும் குளிர் காலம் ஆரம்பம்.. உயிர்த்தெழ முடியாமல்... இன்றுடன் விடைபெறுகிறது விக்ரம் லேண்டர்

சந்திரனில் கடும் குளிர்காலம் நாளை முதல் ஆரம்பம் ஆவதால் சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிகிறது. உறை பணியில் விக்ரம் லேண்டரால் வேலை செய்ய முடியாது.



நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக

Thursday, September 19, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.09.19

திருக்குறள்


அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

விளக்கம்:

அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

பழமொழி

Haste is a fool's choice.

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு.

இரண்டொழுக்க பண்புகள்

1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்

பொன்மொழி

விவேகத்துடன் செயல்லாற்றுபவர் எந்த தடைகளையும் தாண்டிவருவார்.குறித்த இலக்கை அடையும் வரை அயராது உழைக்க வேண்டும்.

--------அப்துல் கலாம்

பொது அறிவு

* விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி யார்?

வாலண்டினா தெரஸ்கோவா

* விண்வெளியில் நடந்து சென்ற முதல் பெண்மணி யார்?

ஸ்விட்லானா இவ்கின்யெவ்னா சவிட்ஸ்கையா

English words & meanings

• thermometer -
an instrument used for measuring temperature
வெப்பமானி - வெப்ப அளவை அளக்க உதவும் கருவி.
மனித உடலின் வெப்பநிலை அளக்க உதவுவது மருத்துவ வெப்பநிலை மானி ஆகும்.
மூன்று வகை உண்டு.
மருத்துவ, ஆய்வக மற்றும் கால நிலை வெப்ப மானிகள்.

* textures - the feeling when you touch a cloth or something
இழை நயம்.

ஆரோக்ய வாழ்வு

பெருங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் நுரையீரல், சுவாசமண்டலம் வழியாக மார்புச்சளியை இருமல் மூலம் வெளியேற்றுகிறது .உயர் ரத்த அழுத்தத்தினை குறைத்து ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது .

Some important  abbreviations for students

* AN  -  Andaman and Nicobar Islands

* AP  -   Andhra Pradesh 

நீதிக்கதை

குறையா? நிறையா?

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை வாழ்ந்து வந்தான். அவன் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவான். தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, பானையில் பாதியளவு நீரே இருக்கும். குறையில்லாத பானை குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்துகொண்டே இருக்கும். இப்படியே இரண்டு வருடங்கள் ஆனது. கேலியைப் பொறுக்கமுடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்து ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். என் குறையை நீங்கள் சரிசெய்யுங்களேன் என்றது.

பானையே! நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? என்று அதன் எஜமானன் கேட்டான். உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுவில் பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். இறைவனுக்குப் பூஜை செய்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன் என்று கூறினான். இதைக் கேட்ட பானை அதன் வருத்ததை நிறுத்திவிட்டது. அடுத்தவர் பேச்சைப்பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத்தொடங்கியது.

நீதி :
மற்றவர்கள் பேசுவதை நினைத்துக்கொண்டு இருந்தால் நாம் நிம்மதியாக வாழமுடியாது.

இன்றைய செய்திகள்

19.09.2019

* இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பள்ளிக்கல்வி இயக்குனர்கள் 3 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

* பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுப்பில், இன்ஜினியரிங் மற்றும் மருத்துவம் செல்வதற்கான முதலாம் பாடப் பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், இரண்டுக்கும் தனித்தனியே பாடங்களை பிரித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

* இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

* 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தகுதி பெற்றார். கஜகஸ்தானில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்ததை அடுத்து ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார்.



Today's Headlines

🌸 RKS Patharia has been appointed as the new Commander of the Indian Air Force.

 🌸The Government of Tamil Nadu has ordered the transfer of three school directors.

 🌸The first syllabus for Engineering and Medicine has been removed from the Plus 1 and Plus 2 course.  In response, the Tamil  Nadu government has ordered the separation of subjects  for above mentioned course. 🌸India won the second T20 match against South Africa by 7 wickets.

 🌸 Indian wrestler Bajrang Bunia qualifies for the 2020 Tokyo Olympics.  He qualified for the Olympics after entering the semifinals of the World Wrestling Championships in Kazakhstan.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2QfI4F1

Results of Departmental Examinations - May 2019 (Updated on 18th September 2019)

Results of Departmental Examinations - May 2019
(Updated on 18th September 2019)
              Check your results
                      Click here

FLASH NEWS கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம் ..

FLASH NEWS

கல்வித்துறையில் இயக்குநர்கள் மாற்றம் ..

கல்வித்துறையில் பணியாற்றி வரும் இயக்குநர்களை மாற்றம் செய்து அரசாணை வெளியீடு ...

பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநராக  பணியாற்றி வந்த திரு. சா. சேதுராமவர்மா அவர்கள் தொடக்கக் கல்வி இயக்குநராக மாற்றம் ..

தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த திரு. அ. கருப்பசாமி* அவர்கள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக மாற்றம் ...

மெட்ரிக் பள்ளிகள் இயக்குநராக பணியாற்றி வந்த திரு.வி.சி. இராமேஸ்வரமுருகன்அவர்கள் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்குநராக மாற்றம் ...

Festival Advance form

விழா முன்பணம் பெற தேவையான படிவம்.


போலீஸ் எழுத்துத்தேர்வில் 20க்கும் மேற்பட்ட வினாக்களில் குளறுபடி

தமிழகத்தில் நடந்த போலீஸ் எழுத்துத்தேர்வில் 20க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறுதலாக கேட்கப்பட்டதால் தேர்வர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தவறான வினாக்களுக்குரிய மதிப்பெண் வழங்க வேண்டும், என சீருடை பணியாளர் தேர்வாணைய குழுமத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர். ஆக.,25ல் நடந்த இத்தேர்வில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். இதில் கேட்கப்பட்ட வினாக்களில் பல எழுத்துப்பிழையாகவும், தவறுதலாகவும் இருந்தன. ஆனால் இதுகுறித்து யாரும் அப்போதைக்கு தேர்வு நடத்திய சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. இருப்பினும் தேர்வு குறித்து முறையீடு இருந்தால் செப்.,9க்குள் தெரிவிக்கலாம் என தேர்வாணையம் தெரிவித்தது.

இதைதொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கடிதம் மூலமாக ஆதாரங்களுடன் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பொது அறிவு பிரிவில் 36வது கேள்வியாக &'சார் அமைப்பின் முதல் மாநாடு நடந்த இடம்&' என கேட்கப்பட்டுள்ளது. சார்க் என்பதை தவறுதலாக &'சார்&' என கேட்டுள்ளனர். 50வது கேள்வியில் &'மதரையில் அறுவை வீதி என அழைக்கப்பட்ட வீதி&' என கேட்டுள்ளனர். மதுரையைதான் &'மதரை&' என்று குறிப்பிட்டுள்ளனர்.

வெறிநாய் கடிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்வி எண் 57,59ல் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.ஆர்.எஸ். அகர்வால் நுாலில் பக்கம் 203ல் இருந்து கேள்வி கேட்டுள்ளனர். அவர் எழுதிய பத்தியை கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் கேள்வியை உள்வாங்கி சரியான பதிலை தெரிவித்திருக்க முடியும்.கேள்வி எண் 63ல் &'ஒற்றைப்படை எண்ணை கண்டுபிடி&' என்பதற்கு பதில் &'ஒற்றைப்படை மனிதனை கண்டுபிடி&' என கேட்டுள்ளனர்.அதேபோல் &'புகையிலையில் உள்ள தீங்கு தரும் வேதிப்பொருள் எவை&' என கேட்பதற்கு பதில் &'புகையில் உள்ள&' என கேட்டுள்ளனர்.

இதுபோன்ற வினாக்கள் எங்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வை எழுதுவதில் சிரமம் ஏற்பட்டது. இப்படி உளவியல், பொது அறிவு பிரிவில் 20க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறுதலாகவும், குழப்பமாகவும் கேட்டுள்ளனர்.இதுகுறித்து தேர்வாணையத்திற்கு தெரிவித்துவிட்டோம். விரைவில் இவ்வினாக்களுக்குரிய மதிப்பெண் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இல்லாதபட்சத்தில் நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை, என்றனர்.

2019-2020 ம் நிதியாண்டிற்கு தொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியம் பகிர்ந்தளித்தல் சார்பான அறிவுரைகள்!!

எழுத்துப்பிழை இல்லாமல் தமிழ் சொல்லி தர எளிய வழிகள்:





ழுத்துப்பிழை இல்லாமல்
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு  சில விளக்கங்கள்...

 "ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
 "ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

அருமையான விளக்கம்  இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது.
தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.

சொற்குவை திட்டம்: மாணவர்களிடமிருந்து 30,000 கலைச்சொற்கள் சேகரிப்பு

சொற்குவை திட்டத்தின் கீழ் மாணவர்களிடமிருந்து 30,000 கலைச்சொற்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்றார் தமிழ்நாடு அரசுச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக இயக்குநர் தங்க. காமராசு.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் தமிழ்நாடு அரசுச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், கல்லூரி நிர்வாகம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் மேலும் தெரிவித்தது: சொற்குவை திட்டத்தைக் கல்லூரி மாணவர்களிடையே பரப்புவதற்காகச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் கல்லூரிகளில் அகராதியியல் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது.

அப்போது, சொல் உண்டியல் அமைக்கப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் தங்களுக்குத் தெரிந்த கலைச்சொற்களை எழுதி சொல் உண்டியலில் இட்டு வருகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் சிறந்த முதல் 3 கலைச்சொற்களை எழுதும் மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. 
இதுவரை 14 கல்லூரிகளில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சொல் உண்டியலில் 30,000-க்கும் அதிகமான கலைச்சொற்களை மாணவர்கள் எழுதி போட்டுள்ளனர். குறிப்பாக, சோழ மண்டலத்தில் செப். 11-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மொத்தம் 5 கல்லூரிகளில் இக்கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது. இதில், கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் மட்டும் சொல் உண்டியலில் ஏறத்தாழ 6,000 கலைச் சொற்களை மாணவிகள் எழுதி போட்டுள்ளனர். ஐந்து கல்லூரிகளில் மொத்தம் சுமார் 10,000 கலைச் சொற்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இக்கலைச் சொற்களைத் தமிழ்க் கலைக் கழகத்தில் உள்ள அறிஞர்கள் ஆய்வு செய்வர். இதில், ஏற்புடைய சொற்களை அறிஞர்கள் குழு ஏற்பு செய்யும். பின்னர், ஏற்கப்பட்ட சொற்கள் தொடர்பாக அரசாணைப் பெற்று www.sorkuvai.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். 
இதுவரை 3,000 கலைச்சொற்களுக்கு அரசாணைப் பெறப்பட்டுள்ளது. இவற்றை இணையதளத்தில்தளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 10,000 கலைச்சொற்களுக்கு செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசாணைக் கிடைத்துவிடும். தமிழக முதல்வரின் நட்சத்திரத் திட்டங்களில் ஒன்றான இத்திட்டம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அகராதியியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடத்துவதற்காக 62 கல்லூரிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. கட்டணமில்லா அழைமையம் அமைக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை செயல்படும் இந்த மையத்தில் யார் வேண்டுமானாலும் 14469 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு சொல் சார்ந்த ஐயப்பாடுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 
இதில், அறிஞர்கள் பதில் சொல்வர். தற்போது பரிசோதனை அடிப்படையில் இயக்கப்படும் இம்மையம் அரசாணை கிடைத்த பிறகு 24 மணி நேர மையமாக மாற்றப்படும். வீரமாமுனிவர் பிறந்த நாளையொட்டி, சென்னையில் நவ. 8ஆம் தேதி அகராதியியல் திருநாள் நடத்தப்படவுள்ளது. 
மாநாடு போல நடத்தப்படவுள்ள இந்நிகழ்ச்சியில் போட்டிகள், அமர்வுகள் உள்ளிட்டவை இடம்பெறும். 
இதில், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி திருந்திய பதிப்பு வெளியிடப்படவுள்ளது. மேலும், அகராதியியலுக்காக சொல் வயல் என்ற மாத இதழ் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் தங்க. காமராசு. இக்கருத்தரங்கத்துக்குக் கல்லூரி கல்வி தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர் தி. அறிவுடைநம்பி தலைமை வகித்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரித் தலைவர் மு. இளமுருகன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகச் சிறப்பு நிலை அறுவைச் சிகிச்சைப் பேராசிரியர் சு. நரேந்திரன், கல்லூரிக் கல்வி இயக்கக முன்னாள் உதவி இயக்குநர் அ. மதிவாணன், மொழியியல் வரலாற்று ஆய்வறிஞர் ம.சோ. விக்டர், எழுத்தாளர் ஜெயபாஸ்கரன், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முதல்வர் வெ. செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Wednesday, September 18, 2019

மெட்ரிக் பள்ளிகள் இயக்ககத்தை தனியார் பள்ளிகள் இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழ் வெளியீடு நர்சரி, பிரைமரி உள்ளிட்ட அரசு உதவி பெறாத பள்ளிகள் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் வரும் - தமிழக அரசு


https://drive.google.com/open?id=1xRNUrDNZGKnl1HShdn_0sII7RzKG4ffH


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.09.19

திருக்குறள்


அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:283

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

விளக்கம்:

கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

பழமொழி

Hearty laugh  dispels disease.

 வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்

பொன்மொழி

பணம் மனதையும் பண்பையும் கறைப்படுத்தலாம். பணம் தேவைக்கு மேல் வேண்டாம.  சிறுதுளை வழியாக நீர் கசிந்து அணை உடைவது போல் பணம் என்ற சிறு பொருள் நம் வாழ்வை அழித்துவிடும் ...

---- அன்னை சாரதா தேவி

பொது அறிவு

1. இந்தியாவில் அதிக அளவில் நீர் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் நதி எது?

கங்கை நதி.

2. கங்கை நதி உருவாகும் இடம் எது?

இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி.

3. கங்கை நதி பாயும் மொத்த தூரம் எவ்வளவு?
2525 கி.மீ

English words & meanings

Spine - backbone of axial skeleton
1.அச்சு சட்டகத்தில் உள்ள முதுகெலும்பு.
2. இவ்வெலும்பு தொகுதியானது முதுகுத் தண்டு வடத்தையும் நரம்புகளின் தொகுதியையும் பாதுகாக்கும்.

Strange - unusual or surprising
அந்நியமான விசித்திரமான

ஆரோக்ய வாழ்வு

ஆஸ்துமா தொந்தரவால் மூச்சுவிட முடியாமல் அவதிப்படுகிறவர்கள் பெருங்காயப் பொடியை அனலில் போட்டு அந்தப் புகையை சுவாசித்தால் மூச்சுத் திணறல் தீரும் .

Some important  abbreviations for students

* PK = Pakistan       

* PL = Poland

நீதிக்கதை

முயற்சி செய்வோம்

ராஜாவும், மணியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. ராஜாவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மணியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் அவர்களுக்குப் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. நமக்கு ஏன் இந்த ஆசை? என்று மணி வருத்ததுடன் சொன்னான்.

ராஜா சிறிது நேரம் தீவிரமாக யோசித்தான். பின் நண்பா! உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக்கொள். எனக்கு வழியைச் சொல்லிக்கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரலாம் என்றான் ராஜா. இருவரும் மகிழ்ச்சியாக திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்.

நீதி :
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.

இன்றைய செய்திகள்

18.09.2019

* தொலைபேசியில் தொடர்பு கொண்டால் வீட்டுக்கே இயற்கை உரம் தேடி வரும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

* செப்டிக் டேங்க் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் கோவையை சேர்ந்த மேக் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பயோ டைஜஸ்டர் என்ற நவீன டேங்கை வடிவமைத்துள்ளார். இது நவீனமானதுடன், சுகாதாரமானதும், நீர் மறுசுழற்சிக்கும் உதவுவதாகவும் உள்ளது.

* வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

* உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டியில் ரீபேக்கேஜ் சுற்றில் இரண்டு வெற்றிகள் பெற்று ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளார் வினேஷ் போகத்.



* சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Today's Headlines

🌸 Chennai Corporation Commissioner Prakash said that if you contact him over  phone,  the manure will come to your home by itself

 🌸*Bio Digester*, a modern tank is designed by Manickam from  Make India, Coimbatore, to solve septic tank problems.  It is modern, hygienic and helps with water recycling.

 🌸The Chennai Meteorological Department has warned that  a  depression may form in the Bay of Bengal, so there may be  heavy rainfall in 11 districts of Tamil Nadu in next 24 hours.

 🌸 Vinesh Bogath has confirmed his Olympic opportunity with two victories in the World Championship Wrestling Re package round.

 🌸 P V Sindhu easily won the first round of the Chinese Open badminton competition and there by advanced to the next round.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/31yiyfs

FLAH NEWS பன்னிரெண்டாம் வகுப்பிற்கு 600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்கள் நிர்ணயித்து அரசாணை வெளியீடு G.O.Ms.No.166, Dated 18.9.2019

https://drive.google.com/open?id=103eQcJCXAw0ic4fA13di7PXwoHLBBZ-f

கதைகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி









ஈரோடு: கதைகள் மூலம் மாணவர்களுக்கு நற்பண்புகளை சொல்லி 
 கொடுப்பது குறித்து, ஆசிரியர்களுக்கான பயிற்சி ஈரோட்டில் துவங்கியது.தொடக்க கல்வி துறை சார்பில், அரசு பள்ளிகளில் கதை மையங்களை ஏற்படுத்துவதன் மூலம், குழந்தைகளிடம் நற்பண்புகளை வலுப்படுத்துவது குறித்து தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, மூன்று நாள் பயிற்சி, ஈரோட்டில் நேற்று துவங்கியது. ஒரு பள்ளிக்கு ஐந்து ஆசிரியர் வீதம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 16 பேர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 14 பேர் பங்கேற்றுள்ளனர். ஐந்து கருத்தாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். தொடக்க கல்வி துறை இயக்குனர் கருப்புசாமி துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பங்கேற்றார்.*அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு, புதிய பாடப்புத்தக பயிற்சி, கோபியில் நேற்று துவங்கியது.

இரு நாட்கள் நடக்கும் பயிற்சியை, ஆசிரியர் பயிற்றுனர் கணேசன் துவக்கி வைத்தார். கருத்தாளர்கள் குணசேகரன், இளவரசி, சந்திரசேகரன் பயிற்சி அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில், 14 யூனியன்களை சேர்ந்த, 29 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

கானல் நீராகும் அரசு காப்பீட்டுத் திட்டம்


உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான - நெறிமுறைகள் GO.165 - 17.9.2019

அரசாணை எண் -165-நாள்-17.09.2019-அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான -நெறிமுறைகள்

https://drive.google.com/open?id=1-HBbDCB4Pk8amceUOgdRsh-0WdYM8Jsx

Tuesday, September 17, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 18.09.19

திருக்குறள்


அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:282

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

விளக்கம்:

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.

பழமொழி

He who sows thorns will never reap grapes.

 விதை ஒன்று போட்டால் செடி ஒன்று முளைக்குமா?

இரண்டொழுக்க பண்புகள்

1. அன்பே கடவுள் எனவே அனைவரிடமும் அன்பாக இருப்பேன்.

2. தாழ்மை என்னை மேலே உயர்த்தும் எனவே பெரியோர், பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் தாழ்மையுடன் இருப்பேன்

பொன்மொழி

அறிவியல் என்பது தோல்வியில் கிடைக்கும் புதிய பாடம் , மீண்டும் மீண்டும் சிந்தனையை தூண்டும் செயலியாகும் ..

டாக்டர். சிவன்

பொது அறிவு

 * பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் என்ன?

இம்பீரியல் வங்கி

* பிளவு பள்ளதாக்கில் பாயும் நதி எது?

தப்தி



English words & meanings

1. Radiation - a type of dangerous and powerful energy
கதிர் வீச்சு - இது ஆற்றல் மிக்கது  கண்ணுக்குத் தெரியாதது சில நேரங்களில் ஆபத்தானது. இது வெளியில் அலை வடிவத்தில் பரவக்கூடியது.

 2.Range : open land that farm animals use for grazing
பண்ணை விலங்குகள் மேயும் பறந்த திறந்த வெளி நிலம்.

ஆரோக்ய வாழ்வு

பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதை சமையலில் சேர்ப்பதால் நரம்புகளையும் ,மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகளைத் தடுக்கும்.

Some important  abbreviations for students

* NO = Norway   

* NP = Nepal

நீதிக்கதை

ஆசை

விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப்பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார்.

ஒரு ஏழையின் மகன் கலெக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும்போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலெக்டரிடம் ஒரு ஏழை விவசாயின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான்.

நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக்கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலெக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்னபோது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

நீதி :
விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

இன்றைய செய்திகள்

18.09.2019

* தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில்  விவசாயத்திற்கு வழங்கும் நகைக்கடனை மத்திய அரசு அதிரடியாக  ரத்து செய்து அறிவித்துள்ளது.

* 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில், மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலையே தொடரும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

* ஆசிய ஆண்கள்  வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியின் கால் இறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது.

* உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் 2-வது சுற்றில் இந்திய வீரர் துர்யோதன்சிங் நெஜி 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

* சீனா ஓபன் பேட்மிண்டன் போட்டியில்  கரோலினா மரின் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

🌸The Central Government has canceled the  jewellery loan for  agriculture in the nationalized banks without warning .

 🌸 Regarding 5th and 8th public examination the present situation will continue for three more years, said the Minister of School Education, K A Sengottaiyan.

 🌸Indian team  qualified for the  quarter-finals of the Asian Men's Volleyball Championship in Olympics.

 🌸In the men's 69 kg weight category of  the World Boxing Championship's  2nd round, Indian  boxer  Duryodhan Singh Neji lost by 1-4.

 🌸 Carolina Marin advanced to 2nd round in China Open Badminton.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/31tXRB3

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு: கல்வியாளர்கள் சொல்வது என்ன?


தமிழக அரசு அறிவித்துள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் இடைநிற்றலுக்குத்தான் வழிவகுக்குமே தவிர, கல்வித்தரத்தை உயர்த்தாது எனக் கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்விக் கொள்கையில் இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, கல்வி வணிகமயம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.



இதனால் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே, புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது எனக் கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கு முன்னோட்டமாகவே 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் எனத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு, கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, "மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கு முன்பே, தமிழக அரசு 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் ஓவியம், விளையாட்டு, எழுத்து என ஏதாவது ஒரு திறமை இருக்கும். அந்தத் திறமைகளைக் கண்டறிந்து பயிற்சியளிக்க வேண்டும். ஆனால், அந்தத் திறமைகளைக் கண்டறியாமல் எல்லா வகுப்புகளுக்கும் தேர்வு என்பது மாணவர்களுக்குக் கூடுதல் சுமையாகத்தான் இருக்கும். அவர்களின் திறமை வெளிப்படாது.

தேர்வின் மூலம் மட்டுமே தரமான மாணவர்களை உருவாக்க முடியாது. 5-ம் வகுப்பு மாணவனால் 10-ம் வகுப்பு பாடங்களை கற்க முடியாது. ஒரே வகுப்பில் மீண்டும் மீண்டும் படிக்கும் மாணவனுக்குத் தாழ்வு மனப்பான்மை உருவாகும். அடுத்த ஆண்டு மீண்டும் அதே வகுப்பில் படிக்க மாட்டார்கள். எனவே, எல்லா வகுப்புக்குமான பொதுத்தேர்வு என்பது மாணவர்களின் இடைநிற்றலுக்குத்தான் வழிவகுக்குமே தவிர, ஒருபோதும் கல்வித்தரத்தை முன்னேற்றாது" என்றார்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலர் தே.முருகன், "புதிய கல்விக் கொள்கையிலேயே 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு பரிந்துரையில் உள்ளது. அதற்கு முன்பாகவே தமிழ்நாடு அரசு செய்கிறது. இந்தத் தேர்வு முறையால் கிராமப்புறங்களில் உள்ள பின்தங்கிய மாணவர்களே அதிகளவில் பாதிக்கப்படுவர். தற்போது கட்டாயத் தேர்ச்சியால் பெரும்பாலும் இடைநிற்றல் இல்லை. ஆனால், இந்த நிலை இனி மாறும். தேர்ச்சிபெறாத மாணவர்களை, அவர்களது பெற்றோர் வேலைக்கு அழைத்துச் சென்றுவிடுவர் அல்லது உறவினர்கள் ஏதாவது வேலைக்கு அழைத்துச் சென்றுவிடுவர். இது குலக்கல்வி திட்டத்துக்கே வழிவகுக்கும்.

தற்போது குறைந்தபட்சம் பள்ளிப் படிப்பையாவது முடித்தபின்பே, பெண்களுக்குத் திருமணம் நடத்துகின்றனர். இனி தேர்வில் தோல்வியடையும் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள். அதிகளவில் குழந்தைத் திருமணங்கள் நடக்கும். சிந்தனையற்ற சமுதாயத்தைத்தான் இந்தத் திட்டம் உருவாக்கும்" என்றார் தெளிவாக.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலர் சுந்தர், "தேர்வு மூலமாகத்தான் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்பதை எந்த ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை. இதுவரை, கட்டாயத் தேர்ச்சியால்தான் மாணவர்களின் இடைநிற்றல் வெகுவாகக் குறைந்துள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், அவர்கள் பெறும் மதிப்பெண்களும் ஒவ்வோர் ஆண்டும் உயர்ந்துகொண்டேதான் செல்கிறது. கல்வி உரிமைச் சட்டத்தில் வயதுக்கேற்ற வகுப்பு என்ற ஓர் அம்சம் உள்ளது. ஆனால் 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பால் அந்த அம்சம் காலியாகிவிடும். 7 அல்லது 8-ம் வகுப்பு படிக்க வேண்டிய 12 அல்லது 13 வயது மாணவன் 5-ம் வகுப்பே படிக்கும் நிலை ஏற்படும். தன் வயதுக்கேற்ற வகுப்பில் படிக்க முடியாது. இது கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிரான ஒன்று. சிறுவயதிலேயே மாணவர்களை வேலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுதான் இது. மாணவர்களின் பாதுகாப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

நற்பண்புகள் கொண்ட நல்ல குடிமக்களை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏதோ ஒரு நிறுவனத்துக்காகக் கூலித் தொழிலாளர்களை மட்டுமே அரசு உற்பத்தி செய்ய நினைக்கிறது. ஒரு மாணவன் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நன்றாகப் படிக்க முடியும். பின்லாந்து மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அங்கே கல்வித்தரம் சிறப்பாக உள்ளது. அங்கே சென்று வந்த அமைச்சர் தேர்வுகளை ரத்துசெய்திருந்தால் நன்றாக இருக்கும். அதற்கெதிரான முடிவை எடுத்துள்ளார். இது கல்வியில் நாம் பெற்றுள்ள வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளிவிடும். குழந்தைகளுக்கு மனஅழுத்தமே உருவாகும். அறிவியல்பூர்வமற்ற இந்த அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும்" என்றார்.
மாணவர்களின் நலன்சார்ந்து சிந்திக்கும் கல்வியாளர்கள் ஒவ்வொருவரும் பொதுத்தேர்வுக்கு எதிராகக் கருத்துக் கூற, அரசோ எந்தக் கருத்தையும் கேட்காமலேயே புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது.

சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்

திருச்சி: கனவாக கட்டிய வீட்டை, தற்காலிகமாக அரசு பள்ளி நடத்த, இலவசமாக வழங்கிய பூக்கடைக்காரருக்கு பாராட்டுகள் குவிகின்றன.திருச்சி, திருவெறும்பூர் அருகேயுள்ள, நொச்சிவயல் புதுாரில் வசிப்பவர், தியாகராஜன், 50; திருவெறும்பூரில் பூக்கடை நடத்தி வருகிறார். சொந்த ஊரில் வீடு கட்ட வேண்டும் என்பதை, கனவாக கொண்டிருந்தார்.இலவசமாகஇதற்காக, பல ஆண்டு களாக கஷ்டப்பட்டு சேர்த்து, 10 லட்சம் ரூபாய் செலவில், புதிய வீட்டை நொச்சிவயல் புதுாரில் கட்டினார்.இதற்கு கிரகப் பிரவேசமும் செய்து, நல்ல நாளில் குடிபோகலாம் என, நினைத்திருந்தார்.இதற்கிடையில், அந்த ஊரில் செயல்பட்டு வந்த யூனியன் துவக்கப் பள்ளி கட்டடம், மிகவும் சேதம் அடைந்ததால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.அதுவரை பள்ளியை எங்கு நடத்துவது என்ற கேள்வி எழுந்தது.நொச்சிவயல் புதுாரில் யாரும், தற்காலிமாக பள்ளி நடத்த இடம் தர முன்வரவில்லை.



இதனால், பள்ளியை, 5 கி.மீ., துாரத்திற்குள் வேறு ஊருக்கு மாற்ற திட்டமிடப்பட்டது.கடைசி முயற்சியாக, பள்ளி தலைமை ஆசிரியை லதா மகேஸ்வரி, புதிதாக கட்டப்பட்டுள்ள தியாகராஜன் வீட்டில் பள்ளி நடத்த அனுமதி கேட்டார். அதற்காக, வாடகையும் தருவதாக கூறியுள்ளார்.தன் ஊரைச் சேர்ந்த, 17 சின்னஞ்சிறு குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயம் என்பதால், மனைவியுடன் ஆலோசித்து, சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் கட்டிய வீட்டில் குடிபுகாத நிலையில், பள்ளியை இலவசமாக நடத்திக் கொள்ள சம்மதித்தார்.பாராட்டுங்கள்இதன்படி, 2018 அக்டோபர் முதல், தியாகராஜனின் புதிய வீட்டில், பள்ளி நடந்து வருகிறது. இதுவரை அந்த வீட்டின் மின் கட்டணத்தையும், தியாகராஜனே செலுத்தி வருகிறார். இதையறிந்த கிராமத்தினர், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பலரும், தியாகராஜனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் சக்தி இயக்கமும், விழா நடத்தி பாராட்டு தெரிவித்துள்ளது.கே.தியாகராஜன் கூறுகையில், &'&'நம்ம ஊர் குழந்தைகள் அலைந்து திரிந்து படிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில், பள்ளியை தற்காலிகமாக நடத்த வீட்டை கொடுத்தேன். &'&'இன்னும் சில மாதங்களில், புதிய கட்டடம் ரெடியாகி விடும். அதுவரை காத்திருந்து, புதிய வீட்டில் குடியேற முடிவு செய்துள்ளேன்,&'&' என்றார். தியாகராஜனுக்கு கலைவாணி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இவரை பாராட்ட, 73738 49801 என்ற எண்ணில் அழைக்கலாம்.

COUNSELLING FLASH NEWS

COUNSELLING FLASH NEWS

கடந்த 30.08.2019 அன்று நடந்த இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு அரசாணைப்படி 217 ன்படி  நடத்தப்படாமல் விதிகளுக்கு முரணாக நடத்தியதை எதிர்த்து மதுரை கிழக்கு ஒன்றியத்தில் இருந்து ஐந்து ஆசிரியர்கள் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர் அந்த வழக்கு விசாரணைக்குவந்தது விசாரணையின் போது அரசு தரப்பில் செய்யப்பட்ட தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டன அதனை அடுத்து மதுரை உயர் நீதிமன்றம் இரண்டு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.* ‌

  (இந்த உத்தரவு வழக்கு தொடுத்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும்.)

மூன்றாண்டு விதிவிலக்கு...

5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புக்கு 3 ஆண்டுகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதிலலை. விதிவிலக்கு அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு...

'கூல் லிப்' போதைக்கு அடிமை உங்கள் வீட்டிலும் இருக்கலாம்!பெற்றோரே...இன்றே கவனியுங்க!

கோவை:'நம்ம பையனை கவனிச்சியா...இப்பல்லாம் எப்ப வர்றான், எப்ப போறான்னே தெரிய மாட்டேங்குது''ஆமாங்க...நானும் கவனிச்சேன். என்ன சொன்னாலும் கண்டுக்கறதே இல்லீங்க.




சரியா

தொடக்க கல்வி இணை இயக்குனர் ஆகியோர். CEO deo BEO ஆகியோருக்கு கூட்டம்


 13 9 2019 அன்று
வீடியோ கான்பரன்சிங் மூலம்இயக்குநர்

தொடக்க கல்வி இணை இயக்குனர் ஆகியோர். CEO deo BEO ஆகியோருக்கு கூட்டம் நடத்தினார்கள்

அதில் கீழ் கண்டவைகள் அறிவுறுத்தினார்கள்....


1.இரண்டாம் பருவம்

Monday, September 16, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.09.19

செப்டம்பர் 17

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 141-வது  பிறந்தநாள்

திருக்குறள்

அதிகாரம்:கள்ளாமை - திருக்குறள்:281

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

விளக்கம்:

ஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா?

இப்போதைய நிலையில் தமிழகத்தில் மாணவர்கள் எல்லோரும் காலாண்டு தேர்வை விறுவிறுப்பாக எழுதி கொண்டு இருப்பார்கள். பெற்றோர்கள் எப்படியாவது தங்கள் பிள்ளைகளை

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்

சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எப்போது? என்பது தொடர்பான, திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு

அதிரடியாகக் குறையும் மின்சார வாகனங்களின் விலை... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க தமிழக அரசின் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன் படி மின்சார வாகனங்களின் விலை

டிகிரி முடித்தவர்களுக்கு பொதுத் துறை வங்கியில் பணிபுரிய வாய்ப்பு!

இந்தியாவிலுள்ள பொதுத் துறை வங்கிகளில்,கிளர்க்ஸ் (Clerks) என்ற பணிகளுக்கான ஐபிபிஎஸ் (IBPS) நடத்தும் பொது தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும்,விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:

Flash News : காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை!


8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வா...



எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப் பட்டதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.


இதன்படி, பிளஸ் 1ல், பொதுத் தேர்வு

இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறையால் முப்பருவக் கல்வி சிதையும் மாணவர்கள்: இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து

சி.பிரதாப்

சென்னை

மாணவர்கள் இடைநிற்றல் அதிக ரித்து, குழந்தை தொழிலாளர்களாக மாறும் அபாயமுள்ளதால் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பை அரசு திரும்ப

கனவு ஆசிரியர் விருது 2019 - 2019

கனவு ஆசிரியர் 2018 - 2019 விருதுக்கு மாவட்டத்திற்கு 6 பேரை தேர்வு செய்யலாம் : விதிமுறைகளை வெளியிட்டு பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்டம், 2016

TAMIL NADU GOVERNMENT SERVANTS (CONDITIONSOF SERVICE) ACT, 2016
                               

                              Booklet Pdf

           

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மோசடி ...

 16 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஏமாற்றுவது நியாயம் தானா?


Sunday, September 15, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.09.19

திருக்குறள்


அதிகாரம்:கூடாவொழுக்கம்

திருக்குறள்:280

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.

பில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் பங்கஜ் அத்வானி



மண்டலே: பில்லியட்ஸ் ஆட்டத்தில் 22-வது இந்தியாவின் பங்கஜ் அத்வானி முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றார் மியான்மரின் மண்டலே நகரில் நடைபெற்ற போட்டியில் மியான்மர் வீரர் நே துவே உ-வை வீழ்த்தி பட்டம் வென்றார். 

தேர்தல் அவசரம்

*வணக்கம்....*

*இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வாக்காளர்களது தகவல்களை சரிபார்க்க பல்வேறு வழிமுறைகளை

ஓராசிரியர் பள்ளிகள் அதிகரிப்பு

தமிழகத்தில் உள்ள, அரசு பள்ளிகளில், நாளுக்கு நாள் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளில்

Flash News : காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை ரத்தா? மாநில திட்ட இயக்குநர் உத்தரவால் குழப்பம்!

காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வு விடுமுறை இந்த கல்வியாண்டு ரத்தா? - காந்தியடிகளின் 150து பிறந்தநாள்

Saturday, September 14, 2019

Water source management

பயோமெட்ரிக் வருகை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முன்விவரங்கள்







Biometric வருகைப் பதிவு ஒவ்வொரு ஆசிரியருடைய விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

Biometric வருகைப் பதிவு ஒவ்வொரு ஆசிரியருடைய விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்:

https://tndeobhavanierd.attendance.gov.in

என்ற இணையதள முகவரிக்கு முதலில் செல்ல வேண்டும்.

பின்பு இடதுபுறம்  UserRegistration என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

அதன் பின்பு

 Personal Details 

என்ற இடத்தில் ஒவ்வொரு ஆசிரியர்களுடைய பெயர், பிறந்த தேதி, பாலினம், ஆதார் நம்பர், ஈமெயில், மொபைல் நம்பர், கொடுக்க வேண்டும்.

NMMS கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் online ல் பதிவு செய்ய உத்தரவு-இயக்குநர்


பள்ளி கல்வி - திட்ட ஆண்டு 2019-20 - மத்திய அரசின் உதவித்தொகைதிட்டம் - தேசிய வருவாய் வழி திறன் தேர்வு

இனி புதிய பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை வெளியீடு

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 
இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷா ராணி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: 

சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்திய உயர் கல்வி நிறுவனங்கள்

ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில், உலக அளவில் உள்ள முன்னணி உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, &'டைம்ஸ்&' நிறுவனம்&' ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதில், 2020க்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த, 49 பல்கலைக்கழகங்கள், இப்பட்டியலில் இடம் பெற்று இருந்தன. இந்த ஆண்டு, அந்த எண்ணிக்கை, 56ஆக உயர்ந்துள்ளது.ஏமாற்றம்:ஆனால், சர்வதேச அளவில், &'டாப்&' 300 கல்வி நிறுவனங்களில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு பல்கலை கூட இடம் பெறாதது, ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி துவக்கம்

கோபி : அரசு பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, தனியாருடன் இணைந்து, அமைச்சர், செங்கோட்டையன் துவக்கி வைத்தார் .

பத்தாம் வகுப்பு: மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தாள்: தமிழக அரசு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு நிகழாண்டு முதல் ஒரே தாள் தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்துக்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. 
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப்யாதவ் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் அரசுத் தேர்வு இயக்குநரால் நடத்தப்படும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், மொழிப்பாடம் (Language) மற்றும் ஆங்கிலப் பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை இரண்டு தேர்வுகளாக எழுதுவதற்குப் பதிலாக ஒரே தேர்வாக எழுத அனுமதித்து ஆணையிடப்பட்டது.

இதன் அடிப்படையில் தற்போது அரசுத் தேர்வுகள் இயக்குநர், பத்தாம் வகுப்புத் தேர்வுகளுக்கும் மொழிப் பாடங்கள் மற்றும் ஆங்கிலப் பாடத்துக்கு இரண்டு தாள்களாக நடத்துவதை மாற்றி ஒரே தாளாக தேர்வுகள் நடத்திட வேண்டி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் முறையிட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், மேற்கண்டவாறு பத்தாம் வகுப்பு மொழிப்பாடம், ஆங்கிலப் பாடங்களில் இரண்டு தாள்களை ஒரே தாளாக மாற்றி அமைப்பதால் பின்வரும் பயன்கள் ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அதன் விவரம்:
மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் ஒவ்வொரு தேர்வின்போதும் அதிக நாள்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக செலவிடும் நிலை மாறி கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணியில் அதிக நேரம் செலவிட ஏதுவாகும். இந்தப் பாடங்களை ஒரே தாளாக தேர்வு எழுதுவதன் காரணமாக மாணவர்களின் தேர்வு காலம் குறைக்கப்படுவதால் அவர்களின் கவனச் சிதறல் மற்றும் மனஅழுத்தம் பெருமளவில் குறையும்.

மூன்று கோடி தாள்கள் சேமிக்கப்படும்: விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி நடைபெறும் நாள்கள் குறைவதால் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்க வாய்ப்பு ஏற்படும். 
ஆண்டுதோறும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் பத்து லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத்துக்கு ஒரே தாளாக தேர்வு நடத்துவதால், சுமார் இருபது லட்சம் விடைத்தாள்கள் குறையும். இதனால் அரசு மைய அச்சகத்தில் அச்சிடுவதற்காக ஓர் ஆண்டுக்கு பயன்படுத்தப்படும் சுமார் மூன்று கோடி எண்ணிக்கையிலான தாள்களும் சேமிக்கப்படும்.
அரசு தேர்வுகள் இயக்குநர் கருத்துருவினை ஏற்று, ஆசிரியர் சங்கங்கள், பொதுநல அமைப்புகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்தும் வகையிலும் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மொழிப்பாடம், ஆங்கிலப் பாடத் தேர்வுகளில் இரு தாள்களுக்கு தேர்வு நடத்துவதற்கு பதிலாக 2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடத்துவதற்கும் அவ்வாறு நடத்தும்போது, பாடங்களின் மதிப்பீடு பாதிக்காதவாறும் முதல் மற்றும் இரண்டாம் தாள்களில் உள்ள அனைத்து பாடங்களின் சாராம்சங்களையும் உள்ளடக்கியதாகவும் தேர்வுகள் நடத்திட அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதியளித்து அரசு ஆணையிடுகிறது என அதில் கூறியுள்ளார்.

Friday, September 13, 2019

பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்று*இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசாணை வெளியீடு!!

                            Download here...

ஆசிரியர்களுக்கு பயிற்சியா....?!

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடை பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை! 

 

                     மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் சார்பில் தொடக்க மற்றும் உயர் தொடக்க

மேற்பார்வையாளர் பொறுப்பு இல்லை!!

BRC/CRC நிலை,செயல்பாடுகள்

ஒவ்வொரு வட்டார வளமையத்திற்கும் ஒரு ஆசிரியர் பயிற்றுனர்

ஒவ்வொரு் குறுவட்ட மையத்திற்கும் ஒரு ஆசிரியர் பயிற்றுனர்

மேற்பார்வையாளர் பொறுப்பு இல்லை!!








 



back to top

Back To Top