Wednesday, June 30, 2021

தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கணக்கிடுவதில் மாற்றம் தேவை..

 தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண்கணக்கிடும் முறையில் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்காத வகையில் மாற்றம் வேண்டும்” என கல்வியாளர் காயத்ரி தெரிவித்தார்.அவர் கூறியதாவது:


கொரோனாவால் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் 50 சதவீதம், பிளஸ் 1ல் (எழுத்து தேர்வில் மட்டும்) 20 சதவீதம், பிளஸ் 2 செய்முறை தேர்வுக்கு 30 சதவீதம் என கணக்கிட்டு மதிப்பெண் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் 30 சதவீதம், பிளஸ் 1ல் 30 சதவீதம், பிளஸ் 2ல் 40 சதவீதம் என்ற முறையில் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விரண்டு மதிப்பீடும் மாறுபட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 எழுதிய 9 லட்சம் மாணவர்களில் 50 சதவீதம் பேர் அரசு பள்ளி மாணவர்கள். மாநில மாணவர்களுக்கு பிளஸ் 1ல் மிக குறைவாக 20 சதவீதம் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சி.பி.எஸ்.இ.,யில் அது 30 சதவீதமாக உள்ளது.

மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பங்களிப்பு 50 சதவீதம் என்பதை குறைத்து அதற்கு பதில் பிளஸ் 1க்கு கூடுதல் சதவீதம் ஒதுக்க வேண்டும். இதன் மூலம் அரசு கல்லுாரி, பல்கலைகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இடங்கள் கிடைப்பதில் ஏற்படும் சிரமம் தவிர்க்கப்படும்.

மேலும் மதிப்பெண்ணில்'உடன்பாடு இல்லையென்றால் சிறப்பு தேர்வு எழுதலாம்' என்ற அறிவிப்பும் குழப்பமாக உள்ளது. தேர்வு எழுதும் நிலையில் எந்த மதிப்பெண் கணக்கில் எடுக்கப்படும் என்ற மாணவர்களின் சந்தேகத்திற்கும் அரசிடம் பதில் இல்லை.

எனவே ஏற்கெனவே 'இம்ரூவ்மென்ட்' என்ற தேர்வில் இருந்த நடைமுறையான எந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் உள்ளதோ அதை கணக்கிடும் வகையில், மதிப்பெண் மதிப்பீட்டு முறையில் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்தால் அரசு பள்ளி மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் என்றார்.

Source: http://www.asiriyar.net/2021/06/2_30.html

700 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் ஆன்லைனில் விற்பனை..

 லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் தகவல்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

லிங்க்ட்இன் பயனர்கள் 700 மில்லியனுக்கும் அதிகமானவர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கரால் திருடப்பட்டு ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது, லிங்க்ட்இன் தளத்தில் 756 மில்லியன் பயனர்கள் இருப்பதால்,அதில் சுமார் 92 சதவீத லிங்க்ட்இன் பயனர்களின் தரவு ஹேக் செய்யப்படுள்ளதாகவும், அதில் அவர்களின் தொலைபேசி எண்கள்,முகவரிகள், இருப்பிடம் மற்றும் ஊகிக்கப்பட்ட சம்பளம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் தரவுகள் உள்ளன என்றும்,

கடந்த ஜூன் 22 அன்று,ஒரு மில்லியன் பயனர்களின் தரவுகளின் மாதிரியை ஆன்லைனில் ஹேக்கர் ஒருவர் விற்பனைக்கு வெளியிட்டுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,இதற்கு மறுப்பு தெரிவித்து லிங்க்ட்இன் தனது அறிக்கையில் கூறியதாவது:


"விற்பனைக்கு வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சென்டர் தரவுகளின் தொகுப்பை எங்கள் குழுக்கள் விசாரித்தன.இது தரவு மீறல் அல்ல,மேலும், தனிப்பட்ட பயனர்களின் தரவு எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவாக கூற விரும்புகிறோம்.எங்கள் ஆரம்ப விசாரணையில் இந்தத் தரவு லிங்க்ட்இன் மற்றும் பிற பல்வேறு வலைத்தளங்களிலிருந்து ஸ்கிராப் செய்யப்பட்டது மற்றும் கடந்த ஏப்ரல் 2021 ஸ்கிராப்பிங் புதுப்பிப்பில் தெரிவிக்கப்பட்ட அதே தரவை இது உள்ளடக்கியது என்று கண்டறியப்பட்டுள்ளது.ஸ்கிராப்பிங் என்பது வலைத்தளங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுத்து அதனை நகலெடுக்க பயன்படுத்தும் முறையாகும்.

யாராவது பயனர்களின் தரவை எடுத்து தனிப்பட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முயற்சிக்கும்போது, லிங்க்ட்இன் மற்றும் எங்கள் உறுப்பினர்கள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை என்றால்,அதனைத் தடுத்து சம்மந்தப்பட்டவர்கள் அவற்றை பொறுப்பேற்க நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்",என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : தினச்சுவடு

பாலிடெக்னிக் சேர்க்கை நடத்திக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியீடு.!

மாணவர்கள் சேர்க்கை 2021

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 9-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியீடு.!




ESR update work..

 IFHRMS SR Digitization update 

செய்யும் முன் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களும் கண்டிப்பாக இந்த 14 பக்க PDF படித்து இதில் உள்ளமாதிரி நீங்கள் UPDATE  செய்தால் மிகவும் எளிமையாக இந்த WORK செய்து முடிக்க முடியும்.

இதன் மூலம் SR DIGITIZATION UPDATE எளிமையாக செய்யமுடியும்.

உங்களுக்கு இந்த WORKசெய்ய தெரியவில்லை என்றால் இதனை படியுங்கள் மிகவும்  எளிதாக செய்வீர்கள்.

ஒவ்வொரு விவரமும் எளிமையாக விளக்கங்களுடன் உள்ளது.

மிக விரைவாக ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்க 14 பக்க PDF FREE.

thanks to Kalvikural

ESR TIPS PDF DOWNLOAD CLICK HERE.


Tuesday, June 29, 2021

கவனமா இருங்க..! ஜூலை 1 முதல்

 ஜூலை 1 முதல் இந்த வங்கியின் IFSC,MICR, செக் புக், இயங்காது.. கவனமா இருங்க..!

இந்தியாவில் பல சிறிய வங்கிகள் பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டது. இது இதனால் இணைக்கப்பட்ட சிறிய வங்கிகளின் IFSC கோடுகள் மற்றும் செக் புத்தகங்கள் செல்லாது என வங்கிகள் அறிவித்துள்ளன.


இது குறித்து வெளியான அறிவிப்பில் பெரும்பாலான வங்கிகளின் நிதி நெருக்கடியை சமாளிக்கும் விதமாக வங்கிகள் இணைக்கப்பட்டன. அந்த வகையில் கனரா வங்கி, சிண்டிகேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது.

இதனால் சிண்டிகேட் வங்கியின் ஐ எஃப் எஃப் சி கோடுகள் ஜூலை முதல் இயங்காது என கனரா வங்கி அறிவித்துள்ளது.

பரிவர்த்தனை செய்ய முடியாது

ஆக சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஜூன் 30-க்குள் தங்கள் வங்கிக் கணக்கில் IFSC குறியீடுகளை மாற்றிக் கொள்ளலாம். பழைய ஐ எஃப் எஸ் சி கோடுகளை பயன்படுத்தி ஜூலை 1 முதல் வங்கிகளில் பரிவர்த்தனை செய்ய முடியாது என அறிவித்துள்ளதுமிகப்பெரிய மாற்றம்

மேலும் ஜூலை 1 முதல் எஸ்.ஓய்.என்.ஒ.பி (SYNB) என்ற அனைத்து IFSC கோடுகளும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக CNRB எனத் தொடங்கும் IFSC கோடுகளை பயன்படுத்த வேண்டும். ஆக வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கிளைகளில் சென்று அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


IFSC கோடுகள்

அப்படி இல்லையேல் https://canarabank.com/IFSC.html என்ற இணைய பக்கத்தில் சென்று கிளிக் செய்து, உங்களது பழைய சிண்டிகேட் வங்கியின் IFSC கோடுகளை கொடுத்து, கிளிக் செய்து புதிய ஐஎப்எஸ்சி கோடினை பெற்றுக் கொள்ளலாம்.

அப்படி இல்லாவிட்டாலும் கனரா வங்கியின் வாடிக்கையாளர் சேவை மைய நம்பரான 18004250018 என்ற நம்பருக்கும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்எம்ஐசிஆர் கோடுகள்

இது தவிர ஸ்விப்ட் கோடு, எம் ஐ சி ஆர் கோடுகள் செக் புக் என அனைத்தும் செயல்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக இதனையும் சரியான நேரத்தில் அப்டேட் செய்து கொள்ளவும். ஏனெனில் ஜூலை 1க்கு இதன் மூலம் பரிவர்த்தனை செய்ய முடியாமல் போகலாம்.

Source: Google news

.

.

நாளையே கடைசி...

ஊக்கத்தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 2021-2022 ஆம் கல்வியாண்டில் 63 லட்சம் பட்டியல் இன மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது தொடர்பாக மத்திய சமூக நீதி மற்றும்



 அதிகாரமளித்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ரூ.2500 முதல் ரூ.13,500 வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்காத மாணவர்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு தகுதி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு socialjustice.nic.in என்ற இணையத்தளத்தை அணுக வேண்டும்.

Source :dailyhunt

Monday, June 28, 2021

ஊஹான் ஆய்வகம்..நடந்தது என்ன..?

 சீனாவின் ஊஹான் நகரில் 

உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய ஒரே வெளிநாட்டு விஞ்ஞானியான டேனியெலெ ஆன்டெர்சென், அங்கு பணியாற்றிய அனுபவங்களை பற்றி முதன் முறையாக பேட்டியளித்துள்ளார். அதன் விவரங்களை தற்போது பார்க்கலாம்...



சீனாவின் ஊஹான் நகரில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் இருந்து 2019இல் கொரோனா வைரஸ் முதன் முதலாக மனிதர்களுக்கு பரவியதாக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கருதுகின்றன.

இதைப் பற்றி ஆராய  உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரியில் ஊஹான் நகருக்கு அனுப்பிய நிபுணர்கள் குழுவினரால், இதற்கான ஆதாரங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஊஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் 2019 நவம்பர் வரை பணியாற்றிய ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்த வைரஸ் ஆய்வு நிபுணரான டேனியெலெ ஆன்டெர்சென், புளூம்பெர்க் என்ற புகழ்பெற்ற செய்தி நிறுவனத்திற்கு  பேட்டியளித்துள்ளார்.  

ஊஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தின் செயல்பாடுகளில் அசாதரணமாக எதுவும் தென்படவில்லை என்றும், அங்கு பணியாற்றியவர்கள் யாருக்கும் 2019 இறுதி வரை உடல் நலக் குறைவு ஏற்படவில்லை என்றும் டேனியெலெ ஆன்டெர்சென் கூறியுள்ளார்.

ஊஹான் வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு வைரஸ் நோய் தொற்றாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, உண்மைகளை கண்டறிய ஒரு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பெண் விஞ்ஞானி கேட்டுக்கொண்டுள்ளார்.
நன்றி :தினத்தந்தி.

உஷார்...ஆன்லைன் வகுப்புகள்

படுக்கையிலிருந்தே ஆன்லைன் வகுப்பை கவனிக்கும் குழந்தைகள்: விளைவுகளைத் தவிர்க்கும் வழிகள்..

கொரோனா பேரலை காரணமாக கடந்த ஒன்றரை வருடமாகவே பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கிறது. இருப்பினும் அனைத்து பள்ளியுமே இணைய வழியில் நடந்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், குழந்தைகள் ஆன்லைன் கல்வியில் எந்தளவுக்கு ஈடுப்பாட்டோடு இருக்கின்றனர் என்பது பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டன.

அதில் '22 சதவிகித குழந்தைகள், படுக்கையிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கின்றனர்' என்றும்; '14 சதவிகித குழந்தைகள்தான் தரையில் அமர்ந்தபடி பாடம் கவனிக்கின்றனர்' என்றும் தெரியவந்துள்ளது. வருடக்கணக்கில் இப்படி மோசமான உடல்வாகில் அமர்ந்து வகுப்புகளை கவனிப்பதாலும் படிப்பதாலும், பல குழந்தைகள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல பாதிப்புகளுக்கு உள்ளாவது ஆய்வில் தெரியவந்துள்ளது.


இந்தியா முழுக்க 350 பள்ளிக்குழந்தைகள் மத்தியில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், 3 – 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குழந்தைகளின் பெற்றோரிடமிருந்தும் சில தகவல்கள் கேட்கப்பட்டுள்ளது. அதில், குழந்தைகள் ஒவ்வொரு நாளும் 4 முதல் 6 மணி நேரம் மொபைல் உபயோகிப்பது தெரியவந்துள்ளது. இது, பள்ளிகள் திறக்கப்பட்டிருந்த நேரத்தை விடவும் 2 – 3 மணி நேரம் அதிகமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால்தான் குழந்தைகளுக்கு பல உடல்நல பாதிப்புகள் ஏற்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளில், 52 சதவிகித குழந்தைகள், அன்றாடம் ஆன்லைன் வகுப்புகளையும், 36 சதவிகித குழந்தைகள் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமும் ஆன்லைன் வகுப்புகள் அட்டெண்ட் செய்வது உறுதியாகியுள்ளது.

ஆன்லைன் வகுப்பின் காரணமாக 41 சதவிகித குழந்தைகளுக்கு, கண் வலி ஏற்படுவதும் தெரியவந்துள்ளது. ஆய்வை மேற்கொண்ட நிறுவனத்தின் இயக்குநர் பேசுகையில், “ஆன்லைன் வகுப்புக்கு வரும் 53 % குழந்தைகள், அந்த நாளின் இறுதியில் அந்த வகுப்பினால் சோர்ந்துவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அவர்கள் கல்விகற்கும் சூழல். பெற்றோரும் ஆசிரியரும் அவற்றை மேம்படுத்த வேண்டியது, மிக மிக அவசியம்” எனக்கூறியுள்ளார்.

இதுபற்றி சென்னையை சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் வசந்த் நம்மிடையே பேசினார்.

“பள்ளி செல்லாமல் இணைய வழியில் கல்வி கற்கும் குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு, கடந்த ஓராண்டாக எவ்வித நேர வரைமுறையும் இல்லாமல் இருக்கிறது. காலை 9.30 க்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கும் என்றால், பெரும்பாலான பிள்ளைகள் 9.25 க்குதான் படுக்கையிலிருந்தே எழுகின்றனர். இரவும்கூட, நேரம் கழித்தே தூங்குகின்றனர். இடையே, உணவும் நேர வரைமுறையின்றியே எடுத்துக்கொள்கின்றனர். இந்த நேரவரைமுறை சரியாக அமையாததுதான், பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணம். இதை சரிசெய்ய, பெற்றோரால்தான் முடியும்.

எப்படி குழந்தை பள்ளி சென்றால் அவர்கள் காலை 7 மணிக்கு எழுவார்களோ, அதேபோல இப்போதும் எழவைக்கப்பட வேண்டும். எழுந்து – குளித்து – சாப்பிட்டு விட்டுதான் அவர்கள் ஆன்லைன் க்ளாஸை அட்டெண்ட் செய்ய வேண்டும். இது பெற்றோரின் கடமைதான். பிள்ளைகளை தன்வசப்படுத்தும் கலை, பெற்றோருக்குத்தான் தெரியவேண்டும்.

இதற்கு அடுத்தபடியாக, ஆன்லைன் வகுப்பில் ஒருவகுப்பு முடித்துவிட்டு, அடுத்த வகுப்புக்கு இடையிலான நேரத்தில், குழந்தைகளை ஏதாவது ஒரு வேலையில் பெற்றோர் ஈடுபட வைக்கவும். உடலும் மனமும் ஈடுபடும்படியான வேலையாக அது இருப்பது நல்லது. குறைந்தபட்சம், ஏதேனுமொரு விளையாட்டாக கூட அது இருக்கலாம். இதன்மூலம், அவர்களுக்கு அலுப்பு தெரியாமல் இருக்கும்.

இவை அனைத்தையும்விட முக்கியமாக, குழந்தைகளுக்கு வீட்டிலேயே தனியாக ஒரு நாற்காலி அமைத்துக்கொடுத்து, அங்கிருந்து மட்டும்தான் அவர்கள் ஆன்லைன் க்ளாஸ் அட்டெண்ட் செய்ய வேண்டும் என்ற வழிமுறையை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது. க்ளாஸ் முடிந்த பின்னரே, அங்கிருந்து எழ வேண்டும் என சொல்ல வேண்டும். இப்படி செய்தால், உடல் ரீதியான பாதிப்புகளை தவிர்க்கலாம்.

TET-தேவையில்லை...

JUDGEMENT DATE- 14.06.2021

Go.181/15.11.2011க்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு TET-தேவையில்லை என்பதற்கான நீதிமன்ற தீர்ப்பாணை.

JUDGEMENT DATE- 14.06.2021

Judgement copy - Click download here

Sunday, June 27, 2021

+2 மதிப்பெண் காண...

 தமிழ்நாடு அரசின் மதிப்பெண் கணக்கிடும் இணையம்..

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே இரத்து செய்யப்பட்டுள்ளன.



மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையில் எளிதாக கணக்கிட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு அரசால் இணையம் துவங்கப்பட்டுள்ளது..

இதைப் பயன்படுத்தி உங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்...

+2 Mark Calculator

நாளை முதல் பஸ்கள் ஓடும்..

  மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயங்கும்.. 

அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

 தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 9333 பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டமும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 5ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் வரும் 28ம் தேதி முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், நெல்லை,. கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூர் உள்பட மேலும் 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது.


எந்தெந்த மாவட்டங்கள் 

50 சதவீத பயணிகள்

இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று வெளியிட்டுள்ள அறவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கோவிட்-19 தொற்றின் காரணமாக அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கனை 28.6.2021 முதல் 05.07,2021 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்கள். அந்த உத்தரவில் வகை 2ல் குறிப்பிட்டுள்ளவாறு அரியலூர், கடலூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்தினை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்கள்.


27 மாவட்டங்களில் பேருந்துகள் 

28ம் தேதி முதல் பேருந்துகள்

ஏற்கனவே தமிழக முதல்வர் அவர்கள், வகை 3ல் குறிப்பிட்டுள்ளவாறு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பொதுப்போகுவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்கள் என ஆக மொத்தம் 27 மாவட்டங்களில் வரும் 28.06.2021 காலை 6 மணி முதல் 50 சதவீத இருக்கைகளுடன், மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகின்றன.



எத்தனை பேருந்துகள் 

எங்கு எவ்வளவு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள மொத்தம் 19290 பேருந்துகளில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 385 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2210 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 50 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1592 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1153 பேருந்துகள் என மொத்தம் 9323 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இயக்கப்படுகின்ற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு உத்தரவிட்ப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளான கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' இவ்வாறு போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

Saturday, June 26, 2021

ஆசிரியர்கள் திங்கள் முதல் பள்ளிக்கு செல்ல வேண்டும்...

 ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர் சேர்க்கையினை மேற்கொள்ள CEO உத்தரவு.

வரும் திங்கள் (28.06.2021) முதல் மாணவர் சேர்க்கை தொடங்கவும் உதவி ஆசிரியர்களை பள்ளிக்கு சுழற்சி முறையில் வருகை புரியவும் ஈரோடு CEO அவர்களின் செயல்முறைகள்.




BREAKING NEWS...+2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை

 பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே இரத்து செய்யப்பட்டுள்ளன.

 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் , சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் . பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது . 10 , 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன . 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு , அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

1. 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) 50%

 2. 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை ( Written ) மதிப்பெண் மட்டும்) 20 % 

3. 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு ( Practical ) / அக மதிப்பீடு ( Internal ) 12 ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு ( 20 ) மற்றும் அக மதிப்பீட்டில் ( 10 ) என மொத்தம் 30 - க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் . செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் ( 10 ) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு ( Extrapolated to 30 Marks ) முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும் .  கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ , தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில்கொண்டு , 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும் . 

11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு அக மதிப்பீடு செய்முறைத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு அக மதிப்பிடு , செய்முறைத் தேர்வு ஆகிய. தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31 ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும் - இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும் . அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும் .

தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன் . மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும் இத்தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

வெளியீடு : இயக்குநர் . செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9


மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்கள்..

வகை - 2 மற்றும் 3 - ல் உள்ள மாவட்டங்களில் அறிவிக்கப்பட் தளர்வுகள்..

வகை 2  - 23 மாவட்டங்கள்

அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்,தேனி, தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் விருதுநகர்.

வகை 3  - 4 மாவட்டங்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு.

 


  • தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் , வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் ( Housekeeping ) மற்றும்,
  • மின் பணியாளர் ( Electricians ) , பிளம்பர்கள் ( Plumbers ) , கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் ( Motor Technicians ) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ- பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர் . 

 100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்ட்டவை

  •  அனைத்து அரசு அலுவலகங்கள்
  •  வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் , தானியங்கி பணம் வழங்கும் ( ATM ) சேவைகள்
  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ( SEBI ) மற்றும் அதன் செயல்பாடுகள்
  • இதர தொழிற்சாலைகள்
  • தீப்பெட்டி தொழிற்சாலைகள்

  • தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 

  • வீட்டு வசதி நிறுவனம் ( HFCs ) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ( NBFCs ) , குறு நிதி நிறுவனங்கள் ( MFIs ) 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உடற்பயிற்சிக் கூடங்கள் , யோகா பயிற்சி நிலையங்கள் , குளிர் சாதன வசதி இல்லாமல் , ஒரே நேரத்தில் 50 % நபர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமாக செயல்படும் நேரத்தில் அனுமதிக்கப்படும் . 
  •  அருங்காட்சியகங்கள் , தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் , அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் . 
  • அனைத்து கடற்கரைகளிலும் , காலை 5 மணி முதல் காலை 9.00 மணி வரை நடை பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும் . 

  •  திருமணங்களுக்கான பயண அனுமதி , இ - பாஸ் இ- பதிவு இல்லாமல் பயணிக்கலாம் . 

  • வகை 1- ல் உள்ள மாவட்டங்களுக்கிடையேயும் , 2 , 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை 1 ல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ - பாஸ் பெற்று அனுமதிக்கப்படும் . இதற்கான இ - பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக ( https://eregister.tnega.org ) மணமகன்திருமணங்களுக்கான பயண அனுமதி, மணமகன் மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் . 

  • வகை - 1 ல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை- 2 , 3 - ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ பாஸ் பெறவேண்டும் . 

  •  திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் . 

  •  நீலகிரி மாவட்டம் , கொடைக்கானல் , ஏற்காடு , ஏலகிரி , குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக இ- பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் 

பலே...11 மாவட்டங்கள்..

 தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் 5-7- 2021 வரை நீட்டிப்பு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து , தமிழ்நாட்டில் மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பரவலின் அடிப்படையில் , மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு , நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28- 6- 2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் , தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7- 2021 காலை 6- 00 மணி வரை , நீட்டிப்பு செய்து உத்தரவு.

வகை 1 - ( 11 மாவட்டங்கள் ) 1 கோயம்புத்தூர் , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு , சேலம் , கரூர் , நாமக்கல் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை மாவட்டங்கள் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு  நேரத் தளர்வு அளிப்பதுடன் , கூடுதலாக பின்வரும் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகிறது . 

காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை

  • அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் , விளையாட்டு திடல்கள் காலை  நடை பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . 

காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை...

  • தேநீர்க் கடைகளில்  பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் .
  • சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும்.
  • அழகு நிலையங்கள் , சலூன்கள் ( Beauty Parlour , Saloons , Spas ) குளிர் சாதன வசதி இல்லாமலும் , ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும்.
காலை 6.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை...
  • விளையாட்டு பயிற்சி குழுமங்கள் பார்வையாளர்கள் இல்லாமல் , திறந்த வெளியில் போட்டிகள் நடத்தவும் , அனுமதிக்கப்படும் . 
  • இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் சேவைகள் மட்டும் .
  • மின் வணிகம் ( e commerce ) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் , உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் ( hotels , restaurants and bakeries ) பார்சல் சேவை மட்டும்.
  • இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் ( E- commerce ) அனைத்தும்.
காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை..
  • மின் பொருட்கள் , பல்புகள் , கேபிள்கள் , ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள்.
  • ஹார்டுவேர் கடைகள் 
  • கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்.
  • காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் . 
  • பாத்திரக் கடைகள் , பேன்ஸி , அழகு சாதனப் பொருட்கள் , போட்டோ / வீடியோ , சலவை , தையல் அச்சகங்கள் , ஜெராக்ஸ் கடைகள்.
  • மிக்சி , கிரைண்டர் , தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் .
  • வாகன விநியோகஸ்தர்களது விற்பனை மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் .
  • வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள்.
  • செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்
  • கணினி வன்பொருட்கள் , மென்பொருட்கள் , மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் ( Computer Hardware , Software , Electronic Appliances Spare Parts ) விற்பனை செய்யும் கடைகள்.
  • கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்.
அரசு அலுவலகங்கள் மற்றும் சில...

100 % பணியாளர்களுடன் செயல்படுவை
  • அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள்.
  • சார் பதிவாளர் அலுவலகங்கள்
  • ஏற்றுமதி நிறுவனங்கள் , ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன்.
  • இதர அரசு அலுவலகங்கள் , 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 
  • அனைத்து தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் , 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 
  • வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் , தானியங்கி பணம் வழங்கும் ( ATM ) சேவைகள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 
  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ( SEBI ) மற்றும் அதன் செயல்பாடுகள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 
  • இ- சேவை மையங்கள் வழக்கம் போல இயங்கும் . 
33 % பணியாளர்களுடன் செயல்படுபவை..
  • இதர தொழிற்சாலைகள்  அனுமதிக்கப்படும் . 
  •  வீட்டு வசதி நிறுவனம் ( HFCs ) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ( NBFCs ) , குறு நிதி நிறுவனங்கள் ( MFIs ) 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 
  • கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள்.
மேலும் சில..
  • தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 20 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் .
  • அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும் . 
  • பள்ளி , கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும்
  • திரைப்படத் தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகள் அனுமதிக்கப்படும் . 
  • திறந்த வெளியில் , திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 100 நபர்கள் மட்டும் கொரோனா RTPCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பங்கேற்கலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்படும் 
  • திரையரங்குகளில் , தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.


Friday, June 25, 2021

பணிப்பதிவேடு உங்கள் பொறுப்பு...

 பணிப்பதிவேட்டை சரிபார்ப்பு செய்தல் ஊழியர்களது பொறுப்பு..

பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும் . 



  • பெயர் 
  • புகைப்படம் 
  • முகவரி 
  • அங்க அடையாளங்கள் 
  • இனம் 
  • பிறந்த தேதி 
  • Appointment entry DEEO AND AEEO ந.க.எண் 
  • Xstd mark entry 
  • X std genuineness entry
  • Xll std mark entry 
  • XII std genuineness entry 
  • DTEd mark entry 
  • DTEd genuineness entry 
  • UG BA / BSC முன் அனுமதி 
  • UG provisional entry 
  • UG convocation entry 
  • UG genuineness entry 
  • BEd முன் அனுமதி entry 
  • BEd கற்பித்தல் பயிற்சி entry 
  • BEd provisional entry 
  • BEd convocation entry 
  • BEd genuineness entry 
  • PG MA / MSC / MPHIL 
  • PG provisional entry 
  • PG convocation entry 
  • PG genuineness entry 
  • Appointment ஊதிய நிர்ணயம் ; முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் . 
  • SPF ENTRY 
  • FBF entry  
  • பணிவரன்முறை ; ( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும் ) 
  • தகுதி காண் பருவம் ; ( ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்) 
  • மாறுதல்கள் ; ( பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் . ) 
  • பதவி உயர்வு ; ( அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல் )
  • Special allowance entry 
  • Personal pay 750 entry 
  • பதவி உயர்வு ஊதிய நிர்ணயம் ; ( அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும் . ) 
  • ஊக்க ஊதிய உயர்வு ; ( நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும் . ) 
  • மகப்பேறு விடுப்பு பதிவு 
  • பதவி உயர்வு 
  • தற்காலிக துறப்பு 
  • ஆண்டு ஊதிய உயர்வு . ( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் .
  • 4 பணிகாலம் சரிபார்ப்பு ; ( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் . ) 
  • Pay commission ; ( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் ) 
  • தேர்வு நிலை ( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் ) 
  • சிறப்பு நிலை பதிவு 
  • பணியேற்பிடை காலம் பதிவு 
  • Department exam pass entry 
  • EL வரவு ( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1 ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் ) 
  • ML பதிவு ஊதியமில்லா விடுப்பு பதிவு  
  • Details of family Nomination for death cum retirement gratuity 
  • Form of nomination 
  • SPF - cum gratuity scheme nomination மேலும் அனைத்து AEEO / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா சரிபார்த்துக் கொள்ளவும் .

Thursday, June 24, 2021

பள்ளி- கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் ! !

பள்ளி- கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் ! ! 

மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை !!



 கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க மத்திய அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது . கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன் லைன் வகுப்புகள் மூலமா கவே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன . ஸ்மார்ட்போன் மற் றும் இணைய தள வசதி ஆகியவை பெரும்பாலான மாணவ- மாணவிகளிடம் இல்லை . குறிப்பாக கிராமப்புற பகுதி களில் ஒருசில மாணவ - மாணவிகள் ஸ்மார்ட் போன் இருந்தாலும் செல்போன் சிக்னல் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள் . இதனால் பாடங்களைபடிக்க முடியவில்லை . மேலும் தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன் லைன் வகுப்பிலும் அனு மதிக்கவில்லை . இதனால் பல மாணவர்கள் முறையாக கல்வி கற்கமுடியாமல் போனது . ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர் . தற்போது இந்தியாவில் இரண்டாவது கொரோனா அலை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விரைவில் பள்ளி- கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது . இதை தொடர்ந்து பள்ளிகளுக்கு செல்லாமல் இருப்பதன் மூலம் மாணவர்களின் கல்வி யோடு , ஆளுமைத் திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர் . ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிகளுக்கு வரச் சொல்லலாம் , நேரத்தை மாற்றியமைத்து மாணவர்கள் கூட்டமாக வருவதை தவிர்க்கலாம் என பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன . இதனால் பள்ளி -  கல் லூரி திறப்பு குறித்து மத்திய அரசு விரைவில் முடி வெடுத்து அறிவிக்க உள்ளது .

செய்தி மூலம்: செய்தித்தாள்

உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டால்...

 உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்து விட்டாலோ 

நீங்கள் அரசிடம் இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்கவேண்டும் என்றால் அவற்றை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனப் பார்க்கலாம்.



தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பதாரரின் புகைப்படம்

இருப்பிடச்சான்று

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும்.

Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் பெய்து Certificate for Loss Of Educational Records Due To Disasters என்ற Option ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

தேர்வு செய்த பிறகு அங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு படித்து Proceed பட்டணை கிளிக் செய்ய வேண்டும்.

தொடர்ந்து உங்களது CAN எண்ணைக் கொடுக்கவேண்டும். CAN எண் இல்லாதவர்கள் Generate CAN என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கான CAN எண்ணை உருவாக்க வேண்டும்.

CAN எண் பதிவு செய்தபின்னர் வரும் பக்கத்தில் உங்களது விவரங்களை நிரப்பவேண்டும். பின்னர் Submit கொடுக்க வேண்டும்.

பின்னர் List of Documents பகுதியில் (Photo, Current Address Proof, Self Declaration by Applicant) Mandatory Options காட்டப்படும். அதில் கொடுக்கப்பட்டுள்ள Image (50 KB) அல்லது PDF (200 KB) அளலை அறிந்து அதற்கேற்ப Upload செய்ய வேண்டும். தொடர்ந்து ஆன்லைன் மூலம் சான்றிதழுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

பின்னர் அதிகாரிகளால் உங்களது விண்ணப்பம் சரிபார்த்த பின்பு உங்களது தொலைப்பேசிக்கு செய்தி வரும். அதன் பின் இதே லாகின் ஐடி மூலம் உள்நுழையும் போது உங்களுக்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Wednesday, June 23, 2021

Flash Emis news 23.6.2021


Today's EMIS news 23.6.2021

 அனைவருக்கும் வணக்கம், 23.6.21 அன்று ASPD அவர்கள் தலைமையில் நடைபெற்ற online Meeting ல் TC generation & Promotion சார்பாக கூறப்பட்ட தகவல்கள்



* TC generation செய்தபின் வரும் Tamil name ல் வரும் தவறுகளை சரி செய்ய EditOption இன்று மாலை முதல் வழங்கப்படும்.

* TC தயாரிக்கும் பொழுது Profile சரி செய்ய பல System ஒரே நேரத்தில் செய்யலாம் ஆனால் TC generate செய்த பின் past students list ல் இருந்து pdf ஆக Print எடுப்பதற்கு ஒரு System/ஒரு Browser மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* தமிழ்Name officeல் Tamil Font மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* Promotion பண்ணும்பொழுது தவறுதலான வகுப்பு Select ஆகி இருந்தால் BRTEs அந்த தகவலை பள்ளிகளில் இருந்து Collect செய்து DPC ல் இருந்து 22.6.21 அன்று அனுப்பப்பட்ட Google ல் Sheet ல் தொடர்ந்து போடவேண்டும். தினமும் மாலை Google Sheet தகவல் Chennaiக்கு அனுப்பி சரிசெய்யப்படும்.

* எக்காரணம் கொண்டும் 2 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் New Registration செய்யகூடாது. Common Poolல் இருந்து மட்டுமே எடுக்க வேண்டும்.

* other State ல் இருந்து வரும் மாணவர்களுக்கு பின்னர் EMIS ல் ஏற்ற வாய்ப்பு வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை ?!

மத்திய பல்கலை கழகம்

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பாக மத்திய அரசால் மாநிலத்துக்கு ஒன்றென "மத்திய பல்கலை கழகம்" என்ற பெயரிலேயே பதிமூன்று பல்கலை கழகங்கள் (சென்ட்ரல் யுனிவர்ஸிட்டிகள்) நடத்தப்பட்டு வருகின்றன. 



இது போக, அஸ்ஸாம் பல்கலைகழகம், சில்சார் அஸ்ஸாம் மாநிலம், பாபா குலாம் ஷா பாதுஷா பல்கலை கழகம் ராஜோரி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், பெங்களூரு டாக்டர் அம்பேத்கார் ஸ்கூல் ஆஃப் எக்கானமிக்ஸ் யூனிவர்ஸிட்டி, காலிக்கோட் பல்கலை கழகம் பேரம்பூர் ஒடிஸா மாநிலம் சர்தார் படேல் யூனிவர்ஸிட்டி ஆஃப் போலீஸ் செக்யூரிட்டி மற்றும் கிரிமினல் ஜஸ்டிஸ் ஜோத்பூர் என பிற ஐந்து யூனிவர்ஸிட்டிகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

இதையெல்லாம் ஏன் இப்போது சொல்ல வருகிறேன் என்று கேட்டால்...

மீண்டும் ஒரு முறை இந்தப் பதிவின் முதல் பாராவை படியுங்கள். 

பொதுவாக இந்த பல்கலைகழகங்களைப் பற்றிய விவரங்கள் தமிழ்நாட்டில் நிறைய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெரியவே இல்லை. தமிழ்நாட்டில் இந்த பல்கலைகழகம் திருவாரூர் அருகே இருக்கிறது. இந்த பல்கலைகழகம் ஒவ்வொரு வருடமும் இருநூறு மாணவர்களுக்கு இண்டக்ரேட்டட் கோர்ஸூகளுக்கானஅட்மிஷன் தருகிறது. Integrated MSc (Chemistry, Physics, Maths , Life Sciences) , Integrated MA EXONOMICS. இது போக மாஸ்டர்ஸ் டிகிரி கோர்ஸூகளும் எம்பிஏ கோர்ஸுகளும் பிஎச்டி கோர்ஸுகளும் தனித்தனியே நடத்தப்படுகின்றன. 

இங்கே படிக்கும் மாணவர்களில் பேர் பாதி பேர் கேரளாவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். மீதிப்பேரில் மற்ற மாநிலத்தவர்கள் இருக்கிறார்கள் தமிழ்நாடு உட்பட.

ஒரு செமஸ்டருக்கு பீஸ் என்று பார்த்தால் முவாயிரத்திலிருந்து எட்டாயிரத்துக்குள் வருகிறது. இது போக ஆண்கள் பெண்களுக்கு தனித்தனி ஹாஸ்டல் வசதியும் இருக்கிறது. ஹாஸ்டல் கட்டணங்களும் மிக மிக குறைவே.

ஆனால் இப்படி ஒரு கல்வி நிறுவனம் இருப்பது தமிழ்நாட்டில் நிறைய பெற்றோர்களுக்கு மாணாக்கர்களுக்கு தெரியவே இல்லை என்பது வருத்தத்துக்குறிய விசயம்.


சரி. 

எப்படி இந்த பல்கலை கழகங்களில் சேர்ந்து படிப்பது...

18 மத்திய பல்கலை கழகங்ளில் எந்த பல்கலைகழகத்திலும் வேண்டுமானாலும் சேர்ந்து படிக்க ஒட்டு மொத்தமாக ஒரே ஒரு நுழைவுத் தேர்வு தான் நடத்தப்படுகின்றது. cucetexam. 

Central University common entrance exam. 

+2 முடித்து அறுபது சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு கவுன்ஸிலிங் மூலம் மாணாக்கர்களின் விருப்பத் தேர்வுகளுக்கு தக்க அட்மிஷன் வழங்கபடுகின்றன.

நேற்று முதல் இந்த தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

www.cucetexam.nic.in 

மேலும் எல்லா விவரங்களும் இந்த தளத்தில் இருக்கின்றன. எந்தெந்த பல்கலை கழகங்களில் என்னென்ன கோர்ஸூகள் நடத்துகிறார்கள் என்பதை அறிய அந்தந்த பல்கலை கழகத்தின் இணைய தளத்தில் சென்று பார்க்கலாம். பல்கலை கழகங்களின் பெயர்களும் இணைய தள முகவரியுடன் மேற் சொன்ன தளத்திலேயே விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

Tuesday, June 22, 2021

இந்தியாவில் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது..

 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 1,167 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,99,77,861 ஆக அதிகரித்துள்ளது.



  • கடந்த 24 மணி நேரத்தில் 42,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட, 10,616 ஆயிரம் குறைவாக உள்ளது.
  • கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 2,99,77,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 1,167ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3,88,135 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 81,839 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,89,26,038 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 6,62,521 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாட்டில் இதுவரை 28,87,66,201 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  
  • நன்றி - தினச்சுவடு

இனி அதிரடி விற்பனை செய்ய முடியாது...?

 ஆன் - லைன் வர்த்தக தளங்களில் பெரும் தள்ளுபடியுடன் 

வழங்கப்படும் மோசடி விற்பனைகளை தடைசெய்யவும், இந்த நிறுவனங்களை DPIIT தளத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கவும் முன்மொழியப்பட்ட 2020 நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகளை திருத்துவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன .


இது தவிர, ஆன் லைன் வர்த்தக நிறுவனங்கள், இணையத்தில் தேடலின் போது, பயனர்களை தவறாக தொடர்ந்து படிக்க..


Monday, June 21, 2021

பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியீடு!!!

 தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளின் இணையவழி வகுப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியீடு!!!







தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது...?

 தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது..

தமிழகத்தில் கொரோனா வைரஸ்தொற்று குறைந்து வருவதை அடுத்து மேனிலை வகுப்புகளை மட்டும் ஜூலை மாதம் தொடங்கலாம் என்று தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தில் கடந்தஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவியதையடுத்து பள்ளிகள் கல்லூரிகள் அனை த்தும் மூடப்பட்டன. 


குறிப்பாக 1ம் வகுப்பு முதல் 9ம் வரை தொடங்கப்படாமல் மாணவ,மாணவியர் வீடுகளில் முடங்கியுள்ளனர். அவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகளும் நடத்த முடியாமல் போனது. அதனால் அந்த வகுப்பில் படித்து வந்த மாணவ,மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.


தேர்தலுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் தீவிரம் அடைந்ததால் பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 50 சதவீதம் இயல்பு நிலை திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், 2021-2022ம் கல்வி ஆண்டுக்காக மாணவர்கள் சேர்க்கையும் கடந்த 14ம் தேதியில் இருந்து நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் இலவசப் பாடப்புத்தகங்கள் தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அந்த பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவியருக்கு இன்று வழங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. புத்தக வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்ததுடன் கல்வித் தொலைக்காட்சியையும் தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து, ஜூலை மாதம் பள்ளிகளை திறப்பதற்கு ஏற்ப பள்ளிகள் அனைத்து தயார்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜூலை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்து விட்டது. இருப்பினும் கொரோனா தொற்றின் 3வது அலை அடுத்து தொடங்கும் என்று சுகாதார வல்லுநர்கள் நம்புவதால், தற்போதைக்கு கீழ் வகுப்புகளை தொடங்குவதற்கு பதிலாக மேனிலை வகுப்புகளை மட்டும் ஜூலை மாதம் தொடங்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பகிர்வு: தினகரன் நாளிதழ்.

Sunday, June 20, 2021

புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது!


தமிழ்நாட்டில் நாளை முதல் ஜூன் 28 ஆம் தேதி காலை 6 மணி வரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது!


மாவட்டங்களை 3 வகையாக பிரித்து கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி உள்ளது



வகை-1 ல் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் அடங்கும்-இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும்-புதிய தளர்வுகள் இல்லை!


👇👇👇👇👇👇👇👇👇

மாவட்டங்களுக்கான தளர்வுகள் விவரங்கள்!

1️⃣ மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்பட அனுமதி!

2️⃣  11 மாவட்டங்களில் அனுமதிக்கப்பட்டு உள்ள செயல்பாடுகளுக்கு மட்டும் தொடர்ந்து அனுமதி!

புதிய தளர்வுகள் இல்லை!

3️⃣ மாவட்டங்களுக்குள் குளிர் சாதன வசதிகள் இல்லாத 50% பேருந்துகள் இயங்க அனுமதி!

சென்னையில் மெட்ரோ இரயில் இயங்க அனுமதி

4️⃣ 33% பணியாளர்கள் உடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி!

5️⃣ காலணி, கண் கண்ணாடி கடைகள் செயல்பட அனுமதி!

6️⃣ வாடகை டாக்ஸியில் 3 பேரும் ஆட்டோக்கள் 2 பேருடன் செல்ல அனுமதி!

7️⃣ சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசின் அத்தியாவசிய அலுவலகங்கள்  100% பணியாளர்கள் உடன் செயல்பட வேண்டும்!*


பிற அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்கள் உடன் செயல்பட அனுமதி!


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 100% அரசு அலுவலகங்கள் இயங்கும்! தனியார் நிறுவனங்கள் 50% பணியாளர்கள் உடன் 3 மாவட்டங்களில் மட்டுமே அனுமதி

8️⃣ உணவகங்கள், பேக்கரி, தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி!

9️⃣ வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் திறக்க அனுமதி!

🔟 செல்போன் கடைகள், TV, MIXIE, GRINDER பழுது பார்க்கும் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி!

1️⃣1️⃣ திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் களிடம் இருந்து E- registration மூலம் அனுமதி பெற வேண்டும்!


தமிழகத்தில் தற்போது நாளை முதல் ஜூன்-28 காலை 6 மணி வரை அறிவிக்கப்பட்டு உள்ள தளர்வுகள் ஏற்கனவே கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 1️⃣1️⃣ மாவட்டங்களில் கிடையாது!


1️⃣1️⃣ மாவட்ட விவரங்கள்!

கோவை, திருப்பூர்,நீலகிரி,ஈரோடு, சேலம்,நாமக்கல், கரூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்.

GOOGLE -ல் தேட வேண்டாம் .. !!

 எச்சரிக்கை :

 வாடிக்கையாளர் சேவை எண்களை GOOGLE -ல் தேட வேண்டாம் .. !! எந்த ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணையும் GOOGLE- ல் தேட வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . GOOGLE- ல் இவ்வாறு வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடும் போது , பெரும்பாலான தேடல் முடிவுகள் 


விளம்பரதாரர்களின் இணையப் பக்கங்களாகவே வருகின்றன . இதன் மூலம் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் , சமீப காலமாக இது தொடர்பான 

மேலும் படிக்க...

Saturday, June 19, 2021

சேர்க்கைக்கான விளம்பர மாதிரி பிரதி

 அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை பள்ளிகள் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக தயாரிக்கப்பட்ட விளம்பர ம(ா)டல் .



கல்வி தொலைக்காட்சி இன்று முதல் தொடக்கம்...

முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கி கல்வி தொலைக்காட்சியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.



கல்வி தொலைக்காட்சியின் பதிய அட்டவணை இதோ..



தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ..

 தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 

 நாளை மறுநாள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ குழு மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் 21ம் தேதி முதல் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மே மாதம் ஒரே நாளில் அதிகபட்சமாக கொரோனா தொற்று பரவல் 36 ஆயிரம் வரை இருந்தது.

 


 இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் படிக்க..

கரூரில் கலைஞர்...

குளித்தலை எம்எல்ஏ-வாக கலைஞர்

 கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கிருஷ்ணராயபுரம்  

வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளியில் ஆய்வு செய்து இருக்கிறார்



இந்த பள்ளியில் 1959 ஆம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏ-வாக இருந்த கலைஞர் அந்த பள்ளியை ஆய்வு செய்தபின் எழுதிய குறிப்பை டிவிட்டரில் ஆட்சியர் பகிர்ந்துள்ளார். 

பகிர்வு: புலனம்.

அட ஈரோட்டில் மெட்ரோவா..

 ஈரோட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட பாதைகள்...


1) பெருந்துறை சிப்காட் முதல் ஈரோடு வழியாக திருச்செங்கோடு வரை


2) மொடக்குறிச்சி முதல் ஈரோடு வழியாக பவானி வரை


3) வெள்ளோடு முதல் ஈரோடு வழியாக சங்ககிரி வரை..



Source: whatsapp

Friday, June 18, 2021

ஒரு கிலோ வாழைப்பழம் 3,300 ரூபாய்..

 கடும் உணவுப்பஞ்சத்தால் வாடும் வடகொரியா . !


கொரோனா சூழ்நிலை காரணமாக வடகொரியா கடும் உணவுப் பஞ்சத்தால் வாடும் என்று பல நாடுகளின் தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்த நிலையில் தற்போது 

இத்தனை பள்ளிகளாக தமிழ்நாட்டில்....?!

தமிழ்நாடு பள்ளிகளின் UDISE NUMBERS



 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு,அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளின் UDISE NUMBER.

EMIS -இல் வேறு பள்ளியில் படித்த மாணவர்களை நமது பள்ளியில் சேர்க்கும் போது பயன்படும்.

UDISE NUMBERS PDF DOWNLOAD click HERE

அறிமுகம் செய்யலாம்...

 மீண்டும் பள்ளிக்கு போகலாம்...




அரசுப்பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகள் பாடநூலைத் தொட்டு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஒரு ஆண்டு பாடத்தை சிறிதளவு கூட படிக்காமல் அடுத்து வகுப்புக்கு செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே ஊரட‌ங்கு முடிந்து பள்ளிகள் துவங்கும் முன்பு அவர்கள் கடந்த ஆண்டு கற்றிருக்க வேண்டிய முக்கியமான பாடங்களை அவர்களுக்கு அறிமுகம் செய்வது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம். 


குறிப்பாக அறிவியல், கணக்கு பாடங்களை ஜூம் செயலி வழியாக எளிய பரிசோதனைகள்/ புதிர்கள் மூலம் தொடர் வகுப்புகளாக நடத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது. 

3, 4, 5 வகுப்புகளுக்கு தனியாகவும் 6, 7, 8 வகுப்புகளுக்கு தனியாகவும் நிகழ்ச்சிகள் நடக்கும். 


ஆர்வமுள்ள ஆசிரியர்கள் பயிற்சியாளர்களாகவும், வாட்சாப் மூலம் மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களைத் தீர்க்கவும் உதவலாம். 


துளிர் இல்ல, சிட்டுக்கள் மைய பொறுப்பாளர்களாக உள்ள தன்னார்வலர்கள் குழந்தைகள் இந்த வகுப்புகளில் கலந்து கொள்ளவும், ஆசிரியர்களோடு உரையாடி சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளவும் உதவலாம்.


இந்த புத்தாக்க வகுப்புகளில் பங்கேற்க விரும்பும் 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் தன்னார்வலர்களும் இந்த படிவத்தை நிரப்பி அனுப்பவும்.


*Google Form:*


https://forms.gle/f3FuAgox9YdeiQu29


பயிற்சிக்கான zoom இணைப்பும் கருத்துத் தாள்களும் வாட்சாப் மற்றும் மின்னஞ்சல் (Email) மூலமாகவே அனுப்பப்படும். எனவே தங்கள் Email id மற்றும் Whatsapp எண்ணை சரியாக குறிப்பிடவும். 


நன்றி.

அன்புடன், 

தேமொழிச்செல்வி

ஒருங்கிணைப்பாளர்

பகிர்வு: புலனம்



Thursday, June 17, 2021

விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்..

  🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

பத்ம விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்


🏆🏆 *2022-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15 வரை அனுப்பலாம்.


 

 https://padmaawards.gov.in எனும் தளம் வழியாக 

மேலும் படிக்க...

NMMS RESULTS 2020-2021

 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் ( NMMS ) தேர்வு




 21.02.2021 அன்று வட்டார அளவில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்ட்டுள்ளது .

Results Download Here..

உங்கள் டிபியை யார் பார்க்கிறார்கள்...?!

  வாட்ஸ் அப் செயலியில், உங்களது டிபியை யார் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிய புதிய வழிமுறைகள் வெளியாகியுள்ளது.



வாட்ஸ் அப்:

தகவல் பரிமாற்றுதலுக்கு மிக முக்கிய தளமாக இருந்து வருகிறது வாட்ஸ் அப். இந்த செயலி அனைத்து தரப்பு பயனர்கள் மத்தியில் அதிக அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் பயனர்களுக்கு பல முக்கிய வழிமுறைகள் குறித்த தகவல் வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது. அவை அனைத்தும் பயனர்களுக்கு தற்போதைய காலத்தில் தேவைப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.

தற்போது அந்த வகையில் புதிய வழிமுறை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப் கணக்கின் டிபியை யார் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிய தற்போது ஓர் புதிய வழிமுறை வெளியாகியுள்ளது. இது வாட்ஸ் அப் செயலி பயனர்களை சற்று வியக்க வைத்துள்ளது. இதனை கண்டறிவது மிக எளிது. தற்போது அதனை எவ்வாறு கண்டறிவது என்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது. 

எளிய வழிமுறைகள்:

வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது மொபைலில் Whats Tracker என்னும் செயலியை பதிவு செய்ய வேண்டும்

பின்பு இந்த செயலிக்குள் நுழைந்து தங்களது போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

பின்பு இந்த செயலி யாரெல்லாம் பயனர்களின் வாட்ஸ் அப்  டிபியை பார்க்கிறார்கள் என்னும் தகவலை சேகரிக்கும்.


இதை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் பயனர்களின் வாட்ஸ் அப் டிபியை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் அவர்களுடன் பெயருடன் மொபைல் நம்பரை தெரியப்படுத்தும்.

App Download Here..


கவனம்-கொரோனா மூன்றாம் அலை‌யா..?

 ‌முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


கொரோனா மூன்றாம் அலை‌



*0 முதல் 20 வயது குழந்தைகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.*

*1. குழந்தைகளை வீட்டில் இருக்க வைக்கவும்.*

*2. வீட்டிற்கு விருந்தாளிகள் வருவதையும் நண்பர்கள் வருவதையும் தவிர்க்கவும்.*

*3. குழந்தைகளை கூட்டமான இடங்களுக்கும் மற்றும் விசேஷங்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டாம்.*

*4. ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளிக்க வைக்க வேண்டும்.*

*5. கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு கழுவ வைக்க வேண்டும்.*

*6. குழந்தைகள் தங்களுடைய மூக்கு, வாய், கண் ஆகியவற்றை கைகளை சுத்தம் செய்யாமல் தொட விட வேண்டாம்.* 

*7.பெரியவர்களை கைகளை கழுவாமல் குழந்தைகளை தொட அனுமதிக்க வேண்டாம்.*

 *8.குழந்தைகள் உபயோகிக்கும் கைபேசி மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.*

*9. ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது குழந்தைகளை சூரிய ஒளியில் விளையாட வைக்க வேண்டும்.*

*10. தினமும் வீடு மற்றும் கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.*

*11. தினமும் பாய் மற்றும் தலையணைகளை சுத்தம் செய்து தலையணை உறைகளை மாற்ற வேண்டும்.*

*12. மிதமான சுடு தண்ணீரில் வாய் கொப்பளிக்க வைக்க வேண்டும்.*

*13. பொதுவான‌ பல் துலக்கிகளை உபயோகிக்க வேண்டாம்.*

*14. தனிமனித இடைவெளி, முக கவசம் மற்றும் கை கழுவும் முறைகளை கற்றுக்கொடுங்கள்.*

*15. கைகுலுக்குவது, முத்தமிடுவது மற்றும் மற்ற எந்த வித முறையிலும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.*

உணவு முறைகள் 

*1. ஒரு நாளைக்கு இரண்டு முட்டை.*

*2.  அவித்த அல்லது ஊறவைத்த பருப்பு* *வகைகள்.*

*3. தினமும் ஒரு டம்ளர் பால் கொடுக்க வேண்டும்.*

*4. பழங்கள் காய்கறிகள் கீரை வகைகள்.*

*இவை* *குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை* *அதிகரிக்கும். முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுங்கள்.*

*வெளி உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.*

 *கடையில் வாங்கும் தின்பண்டங்களை தவிர்த்துவிடுங்கள்.

 மூன்றாம் அலையின் அறிகுறிகள்

1. காய்ச்சல் அல்லது தலைவலி.

2. உடல்வலி.

3. தொண்டை வலி.

4. வரட்டு இருமல். 

5. கால் வலி.

6. கண் வலி. 

*இவைகளெல்லாம் அறிகுறிகள்.*

*அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக காய்ச்சல்* 

*சரிபார்க்கும் தர்மா மீட்டர், பல்ஸ்ஆக்ஸி மீட்டர் மற்றும் டிஷு பேப்பர் வைத்திருக்க வேண்டும்.*

பெற்றோர்கள் மேற்கண்ட அறிகுறிகள் ஏதேனும் குழந்தைகளுக்கு தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யவும் செய்தபிறகு பாஸ்டிவ் என்று வந்தால் தயவுகூர்ந்து அரசு குழந்தைகள் நல மருத்துவரை அணுகவும்.

இக்கட்டுரை மக்களை அச்சமூட்டவோ... புரளி பரப்பவோ அல்ல.. நம்மை கொரானாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு சமூக அக்கறையுடன் பகிரப்பட்டுள்ளன...

பகிர்வு:புலனம்

NEET தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மின்னஞ்சல் மூலம் அனுப்ப நீதிபதி மாண்புமிகு ஏ கே ராஜன் அவர்கள் அறிவிப்பு


 

*NEET தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மின்னஞ்சல் மூலம் அனுப்ப நீதிபதி மாண்புமிகு ஏ கே ராஜன் அவர்கள் அறிவிப்பு*

இனி எல்லாமே EMIS தான்....

EMIS வலை தளத்திலிருந்து மட்டுமே..


ஆசிரியர்கள், மாணவர்கள் ,பள்ளி சார்ந்த எந்த ஒரு விவரங்களையும் முதன்மை கல்வி அலுவலரிடம் நேரடியாக கோரக்கூடாது EMIS வலை தளத்திலிருந்து தகவல்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவு.






back to top

Back To Top