வகை - 2 மற்றும் 3 - ல் உள்ள மாவட்டங்களில் அறிவிக்கப்பட் தளர்வுகள்..
வகை 2 - 23 மாவட்டங்கள்
அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர்,தேனி, தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் விருதுநகர்.
வகை 3 - 4 மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு.
- தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம் , வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் ( Housekeeping ) மற்றும்,
- மின் பணியாளர் ( Electricians ) , பிளம்பர்கள் ( Plumbers ) , கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் ( Motor Technicians ) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் சேவை கோருபவர் வீடுகளுக்குச் சென்று பழுது நீக்கம் செய்ய காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை இ- பதிவில்லாமல் அனுமதிக்கப்படுவர் .
100 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்ட்டவை
- அனைத்து அரசு அலுவலகங்கள்
- வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் , தானியங்கி பணம் வழங்கும் ( ATM ) சேவைகள்
- இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ( SEBI ) மற்றும் அதன் செயல்பாடுகள்
- இதர தொழிற்சாலைகள்
- தீப்பெட்டி தொழிற்சாலைகள்
- தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் .
- வீட்டு வசதி நிறுவனம் ( HFCs ) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ( NBFCs ) , குறு நிதி நிறுவனங்கள் ( MFIs ) 50 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
- உடற்பயிற்சிக் கூடங்கள் , யோகா பயிற்சி நிலையங்கள் , குளிர் சாதன வசதி இல்லாமல் , ஒரே நேரத்தில் 50 % நபர்களுடன் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமாக செயல்படும் நேரத்தில் அனுமதிக்கப்படும் .
- அருங்காட்சியகங்கள் , தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள் , அகழ் வைப்பகங்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும் .
- அனைத்து கடற்கரைகளிலும் , காலை 5 மணி முதல் காலை 9.00 மணி வரை நடை பயிற்சி செய்ய அனுமதிக்கப்படும் .
- திருமணங்களுக்கான பயண அனுமதி , இ - பாஸ் இ- பதிவு இல்லாமல் பயணிக்கலாம் .
- வகை 1- ல் உள்ள மாவட்டங்களுக்கிடையேயும் , 2 , 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை 1 ல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ - பாஸ் பெற்று அனுமதிக்கப்படும் . இதற்கான இ - பாஸ் திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடமிருந்து இணையவழியாக ( https://eregister.tnega.org ) மணமகன்திருமணங்களுக்கான பயண அனுமதி, மணமகன் மணமகள் அல்லது அவர்களது பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் .
- வகை - 1 ல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை- 2 , 3 - ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ பாஸ் பெறவேண்டும் .
- திருமண நிகழ்வுகளில் 50 நபர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் .
- நீலகிரி மாவட்டம் , கொடைக்கானல் , ஏற்காடு , ஏலகிரி , குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக இ- பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்
No comments:
Post a Comment