தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை
தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இ - பதிவு இணையதளத்தில் புதிய வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது .
இ - பதிவு புதிய வசதி : தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது . மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 7 வரை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது . இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் சில தளர்வுகளை அறிவித்து ஜூன் 14 வரை அனைத்து கட்டுப்பாடுகளும் நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதில் ஒன்றாக வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் இ - பதிவு செய்து பயணம் செய்யலாம் தெரிவிக்கப்பட்டது . அதற்காக இ - பதிவு இணையதளத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது . அதில் உடனடியாக சென்று பதிவு செய்வதன் மூலமாக அவசர தேவைகளுக்கு பயணம் செய்யலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் தனி நபர் , குழு என மாவட்டங்களுக்கு இடையே செல்லுவோர் பதிவு செய்வதன் மூலமாக செல்லலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது . அந்த இணைப்பு இன்றிலிந்து இ - பதிவு இணையதளத்தில் செயல்படும்.

No comments:
Post a Comment