Saturday, November 30, 2019

நாட்டிலேயே முதல் முறையாக தனியார் ஆசிரியைகளுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு : அரசு உத்தரவு

நாட்டிலேயே முதல் முறையாக தனியார் ஆசிரியைகளுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு : அரசு உத்தரவு


இந்தியாவிலேயே   முதன் முதலாக கேரளாவில் அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் பணிபுரியும்   ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கும் 6 மாதம் பேறுகால விடுப்பு வழங்க   அரசு உத்தரவிட்டுள்ளது.

இது அரசு   பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பெண்   ஊழியர்களுக்கும் பொருந்தும். ஆனால் இந்த சலுகை தனியார் நிறுவனங்களில்  பணியாற்றும் பெண்களுக்கு கிடையாது.

இந்த நிலையில்  இந்தியாவிலேயே  முதன் முறையாக கேரளாவில், தனியார் பள்ளிகளில் பணியாற்றும்  ஆசிரியைகள்  மற்றும் பெண் ஊழியர்களுக்கு 6 மாத கால  சம்பளத்துடன் கூடிய பேறுகால  விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.


write any English words without given stress to kids.



How can we teach to write any English words without given stress to kids?
P.U.P S Ramapuram,Namakkal.

EMIS ONE- TNTP login

தற்போது நாம் பயன்படுத்தும் EMIS ONE app ல். TNTP என்ற கலத்தை ஓபன் செய்ய


💐Username
Last. 8 digit Aathar number

Password
Last 4 digit aathar@year of birth

Click TNTP icon

Go to academic resources

Select class

Select term

Select subject

Select topic

Play video/download PDF.

பயன்படுத்தி கற்பித்தலை மேம்படுத்துவோம்..

எப்போது இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் ...?

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் திட்டமிட்டே மறைக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் தேர்வர்கள் மத்தியில்  எழுந்துள்ளது.



பொதுமாறுதல் கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதால் இந்த சந்தேகம் எழுவதாக ஆசிரியர்கள் கூறினர். மேலும் கோவை,திருப்பூர் மாவட்டங்களிலும் அதிக அளவிலான மாணவர்களை சேர்த்த பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்காமல் வைத்துள்ளனர்.



        அதிக இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள் உபரியாக உள்ளதைப் போன்ற பொய்யான தோற்றத்தை இதன் மூலம் அதிகாரிகள் உருவாக்கி உள்ளதாக தெரிகிறது.வட மாவட்டங்களில் பல பள்ளிகளிலும் ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. ஒரு ஆசிரியர் இரண்டு மூன்று வகுப்புகளை கையாளும் சூழல் உள்ளது.

எனவே இடைநிலை ஆசிரியர் காலியிடங்களை உண்மையாக கணக்கிட்டு பணிநியமனம் செய்ய வேண்டும் என டெட் தேர்வில் தேர்வு பெற்ற ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

NMMS : தேர்வறையில் மாணவர்களுக்கு சில Tips..

தேர்வறையில்  மாணவர்களுக்கு சில Tips...


வினாத்தாளில் கடைசி பக்கத்தில் (Rough work) எழுத வேண்டியவை

🔸 ஆங்கில ALPHABET சார்ந்த வினாக்கள் அதிகம் இடம் பெறுவதால்

ABCDE... எழுதி 1234...
ZXYWV ... எழுதி 1234...

🔸 8 திசைகள் எழுத வேண்டும்

🔸 வர்க்க எண் 20 வரை

🔸கன எண் 10 வரை

🔸பகா எண்கள் 30 வரை

நினைவில் கொள்க :

🔸 காலம் கணக்குகள் மட்டு

🔸BODMAS

🔸 இரு எண் கூடுதல் மூன்றாவது எண்

🔹 மூன்று எண் கூடுதல் நான்காவது எண்

🔸 முதல் எண் - மூன்றாவது எண்
இரண்டாம் எண் - நான்காம் எண் தொடர்பு

🔹 வரிசை கணக்குகளில் இடது , வலது

🔸 கடிகார திசை - கடிகார எதிர் திசை

🔸 வர்க்கம் + 1 / வர்க்கம் - 1

🔹 கனம் + 1 / கனம் - 1

🔸 இரு எண் பெருக்கல் மூன்றாவது எண்

🔹 எண்களின் மடங்கு எ. கா. x 3 , x 4

🔸 எண்களின் அடுக்கு
எ. கா. 2 x 2 , 2 x 2 x 2 , ...

🔹பகா எண்ணின் கூடுதல்

🔸 எண்கள் / எழுத்துகளின் கண்ணாடி பிம்பங்கள்

கவனம் தேவை

🔹 SAT கூற்று காரணம் கேள்விகள்

🔸 பொருத்துக விடைகள் எ. கா
i-a, ii -C , iii - d , iv_ b

🔹 தவறான கூற்று எது ? கேள்வி சரியாக கவனிக்காமல் சரியான 3ல் ஒன்றை டிக் செய்வது

🔸 இயன்றவரை சிந்தித்து விடை தரவும்

🔹 இறுதி 10 நிமிடத்தில் விடுப் பட்ட அனைத்து வினாக்களையும் shade செய்யவும்.

🔸 Minus மதிப்பெண் இல்லை. எனவே அனைத்து கேள்வியும் விடை தருவது அவசியம்.

🔹 ஒவ்வொரு மதிப்பெண்ணும் அவசியம்.


NMMS மாணவர்களுக்கான தேர்வு நேர குறிப்புகள்...

NMMS மாணவர்களுக்கான குறிப்புகள்


🔹 மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையம் சென்று விடுங்கள். பதற்றம் தவிர்கலாம். காலை 8.30 - 9.00

🔸 தேர்வு நேரம் 9.20 - 9.25 தேர்வறை செல்லுதல்

🔹 9.25- 11.00 : MAT

11.00 - 11. 25
இடைவேளை

11. 25 - 1.00 : SAT

🔸 தேர்வு முடிந்தவுடன் *கவனமாக OMR தாளினை தேர்வறை கண்காணிப்பாளரிடம்  வழங்கிய பின்* - இரு வினாத்தாள்களை எடுத்து கொண்டு வெளியே வரலாம்.

🔹 முதல் முறை OMR தாளினை பயன்படுத்துபவர்கள்  விடை பகுதியில் சரியாக வட்டமாக Shade செய்யவும். அதன் மாதிரி கீழே தரப்பட்டுள்ளது.

🔸 கணினி மதிப்பீடு என்பதால் - இரு விடையை Shade செய்தாலோ - அல்லது ஒயிட்னர் மூலம் அழித்து வேறு ஒரு விடை Shade  செய்தாலோ அது தவறாக எடுத்து கொள்ளப்படும்

🔹 OMR தாளில் பெயர் - புகைப்படம் விவரம் பிரிண்ட் செய்யப்படுள்ளது. செய்ய வேண்டியவை - உங்கள் கையெழுத்து இடுதல், அறை கண்காணிப்பாளர் Present shade செய்து கையெழுத்து பெறுதல் மட்டுமே.

🔹 வினாத்தாளில் உட்பகுதிகளில் குறித்தல் கூடாது. இறுதி இரு பக்கம் Rough work செய்து பார்க்க வெள்ளை தாள் இணைக்கபட்டுள்ளது. அதில் செய்து பார்க்கலாம்.

🔸 *OMR தாளினை கருப்பு பால் பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்தி shade செய்ய வேண்டும்.*

🔹 பொதுவாக செய்யும் தவறு : 5 வது கேள்வி தெரியாததால் Shade செய்யாமல் விட்டிருப்போம். 6வது கேள்வி எழுதும் போது 5வது கேள்வியில் shade செய்வோம்.
அடுத்து வரும் அனைத்து வினாக்களும் தவறாக Shade செய்யும் வாய்ப்பினை உருவாக்கும்.

🔸எனவே ஒவ்வொரு வினாவிற்கும் விடையளிக்கும் போது வினா எண் பார்த்து shade செய்யவும்.

🔹 180 வினாக்கள் - 180 நிமிடங்கள். ஒரு வினாவிற்கு 1 நிமிடம். நீண்ட நேரம் ஒரே வினாவை தீர்வு காணாமல் அடுத்த கேள்விக்கு செல்லவும்.

🔸 MAT பகுதி விடையளிக்கும் போது அனைத்து வகையிலும் யோசிக்க முயற்சிக்கவும்.

Friday, November 29, 2019

3ஆம் பருவ புதிய பாடப் புத்தகங்கள் (2019) - வேகமாகத் தரவிறக்கம் செய்ய சிறிய கோப்பு(PDF) வடிவில்..

புதிய பாடப் புத்தகங்கள் (2019)

                                      


1.முதல் வகுப்பு

தமிழ் & ஆங்கிலம் , CLICK HERE

கணக்கு  சூழ்நிலையியல்,(TM) , CLICK HERE

கணக்கு & சூழ்நிலையியல்,(EM), CLICK HERE

2. இரண்டாம் வகுப்பு

தமிழ் & ஆங்கிலம் Download Here

கணக்கு &சூழ்நிலையியல்,(TM), DOWNLOAD, CLICK HERE

கணக்கு & சூழ்நிலையியல் (EM), CLICK HERE

3.மூன்றாம் வகுப்பு

தமிழ் & ஆங்கிலம் ,CLICK HERE

கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (TM) Click Here

கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (EM), CLICK HERE

4. நான்காம் வகுப்பு

தமிழ் & ஆங்கிலம், CLICK HERE

கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (TM) Click Here

கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல்,(EM), CLICK HERE

5. ஐந்தாம் வகுப்பு

தமிழ் & ஆங்கிலம், CLICK HERE

 கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (TM) click here,

கணக்கு & அறிவியல் & சமூக அறிவியல், (EM) Click Here

Thursday, November 28, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.11.19

திருக்குறள்


அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்:331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

விளக்கம்:

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

பழமொழி

All things come to those who  wait

 பொறுத்தார் பூமி ஆள்வார்

இரண்டொழுக்க பண்புகள்

1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி

ஒன்றாக வருவது தொடக்கம்; ஒன்றாக இருப்பது முன்னேற்றம்; ஒன்றாக வேலை செய்வது வெற்றியாகும்.

✒ ஹென்றி போர்டு

பொது அறிவு

1.ஹிட்லர் பிறந்த நாடு எது?

 ஆஸ்திரியா (1889, ஏப்ரல் 20)

2. 2016ஆம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டிற்கு வந்த ஹிட்லர் பிறந்த வீடு எவ்வாறு மாற்றம் செய்யப்பட உள்ளது?

  காவல் நிலையமாக.

English words & meanings

Rheumatology - branch of medicine devoted to the rheumatic diseases. வாதவியல்-இது வாத நோய்களுக்கானச் சிகிச்சை, நோயறிதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவம் ஆகும்.

Radiate - emit light or heat. ஒளிக் கதிர்களை வீசு

ஆரோக்ய வாழ்வு

 மனித உடலில் உள்ள தேவையற்ற வியர்வை சிறுநீர் வழியாக வெளியேறும். சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம் ,பெருவயிறு, நீர்க்கட்டு ஆகியவை நீங்கும்.

Some important  abbreviations for students

gen. = general

i.e. = that is

நீதிக்கதை

ராமன் மற்றும் பேசும் கிளி

யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன். ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள். கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். இந்தக் கிளி பேசும் கிளி என்றான்.

ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான். ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை. அதை அவன் எடுத்துக்கொண்டு. தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.

அந்த வியாபாரியோ, அந்தக் கிளியை வாங்கி பரிசோதிப்பது போல பாசங்கு செய்து இந்த கிளிக்கு காது கேட்காது. அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டும் அந்த கிளியால் பேச இயலவில்லை என்று சொல்லி வேறு ஒரு கிளியைக் காட்டி இதை வாங்கிக் கொள்ளுங்கள் இது பேசும் என்றான்.

ராமன் மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். அதற்கும் பேசக் கற்றுக்கொடுத்தான். அதுவும் பேசவில்லை. அப்போது ராமனின் நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் ராமன் நடந்ததைக் கூறினான்.

உடனே அந்த நண்பர் அடடா! என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே! அந்த வியாபாரி ஒரு பொய்யன். பொய் சொல்லி வியாபாரம் செய்வதே அவன் பிழைப்பு என்றான்.

ராமன் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான். யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்காமல் நமது அறிவை உபயோகித்து அது சாத்தியமா. என யோசித்து செயல்படவேண்டும்.

வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு

சமூகவியல்

 சென்னையில் உள்ள ரயில் அருங்காட்சியகம் பெரம்பூருக்கு அருகிலுள்ள இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையின்
  (Integral Coach Factory)
 அலங்காரப் பிரிவில் இந்த அருங்காட்சியகம் 16 ஏப்ரல் 2002 அன்று திறக்கப்பட்டது. 6.25 ஏக்கர்  அருங்காட்சியகத்தில் தொழில்நுட்ப மற்றும் பாரம்பரிய கண்காட்சிகள் உள்ளன, இதில் பிரிட்டிஷ் ராஜ்ஜின் நீராவி என்ஜின்கள் உள்ளன.  சேகரிப்பில் சில ரயில்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலானவை.
 மேலும் புதுப்பிக்கப்பட்ட உட்புற கலைக்கூடம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை ஐ.சி.எஃப் நிர்வகித்து பராமரிக்கிறது.

பாரம்பரிய விளையாட்டு -

சிலை - உயிர்:

 வேறு பெயர்கள்- Lock and key; freeze- release.

எண்ணிக்கை- 4 முதல் 15 பேர் வரை

விளையாடும் முறை:
  துரத்தி வரும் ஒரு நபரைத் தவிர மற்றவர்கள் ஓடுவர். அவ்வாறு ஓடும்போது துரத்துபவர்  தொட வந்தால் ஓடுபவர் 'சிலை' என்று சொல்லி  அசையாமல் நிற்க வேண்டும் . இவ்வாறு ஒவ்வொருவராக அசையாமல் நிற்க, ஓடிக் கொண்டிருக்கும் நபர் சிலையாக  நிற்பவரைத் தொட்டு உயிர் கொடுக்கலாம். அவ்வாறு உயிர் கொடுக்க முடியாத சூழலில் கடைசியாக யார் சிலையாக நிற்கிறாரோ, அவர் 'அவுட்' . துரத்தி வரும் நபர் ஓடுபவரை சிலையாக நிற்கும் முன்பே தொட்டு விட்டால் அவர் 'அவுட்' எனக் கருதப்படுவார்.

இன்றைய செய்திகள்

29.11.19

* இயற்கை வளத்தைப் பாதுகாக்க எம்.சாண்ட் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

* மாணவர்களிடையே உடல் வறட்சியை ஏற்படுத்தும் தாகத்தைத் தடுக்கும் விதமாக தினந்தோறும் இரண்டு முறை குடிநீர் இடைவேளை விடப்பட வேண்டும் என்று கோவா அரசு உத்தரவிட்டுள்ளது.

* தமிழகம் முழுவதும் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருவதை அடுத்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நேற்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

* சர்வதேச பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

* ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வா்மா-ஜோதி சுரேகா இணை தங்கம் வென்றது.

Today's Headlines

🌸To save natural resources have to increase the usage of M. Sand ordered Madurai Division Court.

🌸To decrease the dehydration of the students due to thirst the Goa government ordered the schools to break up two times for drinking water.

🌸 Due to the mild shower all over Tamil Nadu the exams due on affiliated colleges of Chennai University are postponed by vice chancellor.

🌸 In international Badminton series Indian Player Kidambi Sriganth advanced to second round.

🌸 In Asian  Archery Competition the Mingled team of Abishek Varma and Jothi Sureka from India won and bagged a Co gold medal.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2Ot5JyV

NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து எவ்வாறு பெறுவது?

NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து எவ்வாறு பெறுவது? மாவட்ட வாரியாக யாரை தொடர்பு கொள்வது? தெரிந்துகொள்வோம்.




அரசுஅலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,


நமது மாத சம்பளத்தில் ரூ 180 பிடிக்கும் NHIS திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " பெற அறிவுறுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால் "www.tnnhis2016.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth...

பழைய கார்டு எண் தெரியாத நண்பர்கள் இதே இணையத்தில் ஐடி கார்டு சர்ச் என்ற பகுதியில் சென்று பெயர், பிறந்த தேதி, பணி ஏற்ற தேதி, ஓய்வு நாள் போன்ற ஏதேனும் 3 தகவல்களை பதிவு செய்து புதிய கார்டு டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு....

நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத் தான்...

1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3 .Coimbatore # 89,Grey Town, Near Nehru Stadium, Gandhipuram, Coimbatore-641018. Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105

5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 .Dindigul #Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 .Erode # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road, Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 .Kanyakumari # D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 .Karur #District Information Centre,District Collector Office,Karur-639005. Mr. Felix 7373703112

11 .Krishnagiri#  3/E11C,2Nd Floor, Opposite. Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 .Madurai#  46,Thomas Complex Ii Nd Floor, Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13. Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 .Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 .Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 .Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17 .Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001 Mr. Parimaleeswaran 7373703119

18 .Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 Rr Sethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 .Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 .Sivagangai # District Collectorate, 1st floor District Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 .Thanjavur #Survey No.163/4, Second Floor, Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 .Theni # L1/786, Gandhiji Road, Zameendar Complex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 .Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 .Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25.

அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி உத்தரவு.

பெற்றோர் - ஆசிரியர் சங்கம் கலைக்க அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு.


மாணவர்களின் பாதுகாவலர் என்ற போலி அடையாளத்துடன், நிர்வாக பதவிகளில் உள்ள, பெற்றோர் - ஆசிரியர் கழகத்தை, உடனடியாக கலைக்க வேண்டும்' என, அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, சென்னையில் நடந்த, முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தில், அவர் பிறப்பித்த உத்தரவு:பெற்றோர் - ஆசிரியர் கழகம் என்பது, பள்ளிகளின் முன்னேற்றம், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் செயல்பட வேண்டும். ஆனால், பல பள்ளிகளில், பல ஆண்டுகளாக, ஒரு சிலரே இந்த பொறுப்புகளில் உள்ளனர்.

எவ்வளவு வயதானாலும், சிலர் தங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில், பெற்றோர் - ஆசிரியர் கழக பதவியில் உள்ளனர். ஏதாவது ஒரு மாணவருக்கு பாதுகாவலராக இருப்பதுபோல் காட்டி, பொறுப்பில் உள்ளனர். இந்த பொறுப்பில் இருப்பதால், தினமும் பள்ளிக்கு வருவது, அங்கு பள்ளியின்செலவில், டீ குடிப்பது, சாப்பிடுவது உட்பட, சுய தேவைகளை பார்த்து கொள்கின்றனர். இந்த பதவியை காட்டி, தங்களின் சுய அலுவல்களுக்கு தேவையானவர்களை, பள்ளிக்கு வர செய்து,சந்தித்து பேசுகின்றனர். ஆசிரியர்களுக்கு தேவையான இடங்களில் கையெழுத்து போட்டு கொடுக்கின்றனர்; பின், வீட்டுக்கு செல்கின்றனர்.
இப்படிப்பட்ட சங்க நிர்வாகிகளை வைத்து, பள்ளியை அடுத்த நிலைக்கு, எப்படி கொண்டு செல்ல முடியும்? பெற்றோர் - ஆசிரியர் கழக விதிகளின்படி, தற்போது படிக்கும் மாணவரின் பெற்றோரே, பொறுப்பில் இருக்க வேண்டும். இதை, கட்டாயம் பள்ளிகள் பின்பற்ற வேண்டும். பாதுகாவலர் என்ற போர்வையில் உள்ளவர்களை நீக்கி, அந்த நிர்வாகத்தை கலைத்து விடுங்கள். தகுதியானவர்களை நிர்வாகிகளாக வைத்து, புதிய நிர்வாகம் ஏற்படுத்துங்கள். பள்ளியின் வளர்ச்சிக்கு, அவர்களை பயன்படுத்துங்கள்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டுள்ளார்.

Wednesday, November 27, 2019

2020 ஆம் ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள்..

👆👆👆அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு, 2020 ஆம் ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் - விடுமுறை நாட்கள் பட்டியல்!





பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.11.19

திருக்குறள்


அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:330

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

விளக்கம்:

வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உழல்வோர், ஏற்கனவே கொலைகள் பல செய்தவராக இருப்பர் என்று முன்னோர் கூறுவர்.

பழமொழி

As the old cock crows, so crows the young.

 மீன் குஞ்சுக்கு நீந்த கற்றுக் கொடுக்கவா வேண்டும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி

எழுத்தாற்றல் என்பது ஒரு வரம் . சமூகத்தின் கண்ணாடியாக எழுத்துக்கள் விளங்குகின்றன.

---- ராஜேஷ்குமார்

பொது அறிவு

1.இரண்டு தேசியக் கொடிகளை கொண்ட நாடு எது?

 ஆப்கானிஸ்தான்.

2.ரோஜாக்களில் இருந்து பன்னீரை தயாரித்து அதன் மூலம் பிரபலமானவர் யார்?

 நூர்ஜஹான்.(அரசர் ஜஹாங்கிரின் மனைவி)

English words & meanings

Quinology – study of quinine. Quinology – study of quinine. கொயினா மருந்து குறித்த ஆராய்ச்சி மற்றும் அறிவியல்.

Quinine -  a medication used to treat malaria. கொயினா, சிங்கோனாபட்டையிலுள்ள மருந்து பொருள். மலேரியா காய்ச்சலுக்கு உகந்த மருந்து.

ஆரோக்ய வாழ்வு

வெப்பத்தினால் வரும் தலைவலி நீங்க சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும்.

Some important  abbreviations for students

mts.  - mountains

Mus. - Museum

நீதிக்கதை

கடவுள் கொடுத்த வரம்

அருண் ஆறாம் வகுப்பு மாணவன். அவனது அப்பா ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அருணின் நண்பன் பிரகாஷின் தந்தையோ பணக்காரர். பிரகாஷிற்கு அவன் தந்தை கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தார். எப்போதும் பிரகாஷிடம் பண நடமாட்டம் இருந்தது.

ஆனால் அருணோ தன்னிடம் பிரகாஷைப் போல் பணமில்லையே என வருந்தினான். தனக்கும் பணம் அதிகம் வேண்டும் என கடவுளை வேண்டினான். கடவுள் அவன் முன்னால் தோன்றி அருண் உனக்கு என்ன வேண்டும் என்று கேள் தருகிறேன். ஆனால் யோசித்துக் கேள் என்றார்.

அருண் உடனே இறைவா. நான் எதைத் தொட்டாலும் பணமாக வேண்டும் என்றான். அதைக் கேட்டு சிரித்த இறைவன் அப்படியே ஆகட்டும் என வரம் கொடுத்து மறைந்தார். உடன் அருண் பக்கத்திலிருந்த புத்தகத்தைத் தொட அது பணக்கட்டாய் மாறியது. அப்பா, அம்மாவைக் கூப்பிட்டு அருண் நடந்ததைச் சொன்னான்.

அருணுக்கு பசி எடுக்க. அம்மா உணவு எடுத்து வந்தார். அருண் உணவில் கை வைக்க அது பணமானது. தண்ணீர் குடிக்க டம்ளரை எடுத்தால் அதுவும் பணமானது. பசியால் வாடிய அருண். அப்போது தான் இறைவனிடம் கேட்ட வரம் தவறு என்று உண்ர்ந்தான். மீண்டும் இறைவனை வேண்டினான்.

இறைவன் தோன்ற, அவரிடம், தனக்கு நடந்ததைக் கூறி தன்னை மன்னிக்கும்படியும் தான் கேட்ட வரம் வேண்டாம் என்றும் கூறினான். உடன் இறைவன் அருணைப்பார்த்து அருண் உன்னைப்போன்ற மாணவர்களுக்கு நல்ல கல்வியறிவும் நோயற்ற வாழ்வும் தான் செல்வம். அவை இருந்தால் வாழ்வில் பணம் சம்பாதிப்பது எளிது என்று கூறி அவனுக்கு அவ்விரண்டையும் அருளினார்.

வியாழன்
அறிவியல் & கணினி

அறிவோம் அறிவியல்

மோட்டார் இல்லாமல் மேலே நீர் ஏறுமா? வாருங்கள் காண்போம்.

தேவையான பொருட்கள் - பால்சன் செடி அல்லது தடித்த கீரை தண்டு, ஒரு டம்ளரில் நீர், சிவப்பு அல்லது வேறு வண்ணம் செயல்பாடு.



            டம்ளரில் நீர் எடுத்து கொள்ளவும் அதில் வண்ணத்தை கலக்கவும். பின்  செடியின் தண்டை அதனுள் வைக்கவும். அப்படியே 8 மணி நேரம் வைக்கவும். இப்பொழுது எடுத்து தண்டை வெட்டி பார்த்தால் தண்டின் உள் பக்கம் உள்ள நிறம் நீங்கள் வைத்த வண்ணத்திற்கு மாறி இருக்கும். அறிவியல் - இதற்கு நுண்புழை இயக்கம் என்று பெயர். முடி அளவு மெல்லிய ஒரு குழாயை நீர் உள்ள பாத்திரத்தில் செருகினால் பாத்திரத்தில் உள்ள நீர் மட்டத்துக்கு மேலாக நீர் அந்தக் குழாயில் ஏறும். (அகலமான குழாயைச் செருகினால், நீர் மட்டம் மிகக் குறைவாகத்தான் ஏறும்.) மெல்லியதாக இருக்கும்போதுதான் நீர் ஈர்ப்பு விசையை எதிர்த்துக்கொண்டு மேல் நோக்கிச் செல்லும். இதையே நுண்புழை இயக்கம் என்கிறோம். அன்றாட வாழ்வில் - தாவரங்கள் மிக நுண்ணிய இழைகளாக தங்களது வேர்களை உருவாக்குகின்றன. இந்த வேர்களும் எங்கெல்லாமோ போய் நீரைத் தேடுகின்றன. நீர் கிடைத்துவிட்டால், இந்த நுண்புழை இயக்கம் காரணமாக, எந்த குழாயின் உதவியும் இல்லாமலேயே, நீர் மேல் நோக்கி உறிஞ்சப்படுகிறது. அது மட்டுமல்ல மண்ணெண்ணெய் அடுப்பில் திரியில் மண்ணெண்ணெய் ஏறுவது நுண்புழை இயக்கம் காரணமாக தான்.

இன்றைய செய்திகள்

28.11.19

* இந்தியாவின் காா்டோசாட் செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி-சி47 ராக்கெட் புதன்கிழமை வெற்றிகரமாக விண்ணில் பாயந்தது.

* 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நேற்று பிற்பகல் நிரம்பியது. அணை பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1396 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

* இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாண அரசு ஸ்மார்ட் போன்களுக்கு குழந்தைகள் அடிமையாவதை தவிர்க்கும் புதிய முயற்சியாக பள்ளிக்குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கியுள்ளது. அதனை வளர்ப்பதில் குழந்தைகள் கவனம் செலுத்தும் போது
தொழில்நுட்ப பாதிப்பில் இருந்து திசைதிருப்ப முடியும்.

* ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 3 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

* ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்திற்கும் விராட் கோலிக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், முதல் 10 இடத்திற்குள் நான்கு இந்தியர்கள் இடம் பிடித்துள்ளனர்.

Today's Headlines

🌸The PSLV-C-47 rocket successfully launched on Wednesday, carrying India's Cartosat satellite and 13 other smaller satellites of US.

 🌸The Papanasam Dam, 143 feet high, was filled yesterday afternoon.  1396 cubic feet of water   per second is opened  for the safety of the dam.

 🌸 The  State Government of West Java, Indonesia has issued chicks to  schoolchildren in an  effort to prevent children from becoming addicted to smart phones.  When they start to concentrate on the growth of the chicks the children
 Can be distracted from technical effects .

 🌸 The Indian team has won 3 bronze medals at the Asian Archery Championships.

  🌸Four Indians in the top 10, with Smith and Virat Kohli in the ICC Test rankings.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2Dl8kEz

5-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகிறது: அமைச்சர் செங்கோட்டையன்

5-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்; அப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகிறது:

அமைச்சர் செங்கோட்டையன்



சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர்  பேசிய அவர்; பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படும் என கூறினார். 5-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்; அப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகிறது.

Block Educational Officer Official Notification 2018-2019

TRB : AEEO/(BEO) Block Educational Officer Official Notification 2018-2019



மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பள்ளியில் சேரலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பள்ளியில் சேரலாம் - அமைச்சர் செங்கோட்டையன்.



சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர்  பேசிய அவர்; பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படும் என கூறினார். 5-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்; அப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகிறது. விஜயதசமியின் போது அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.  ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பள்ளியில் சேரலாம்.

பெற்றோரோ மாணவர்களோ எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. டிசம்பர் மாதத்தில் கூட மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. மாணவர்களுக்கு சிரமம் இருக்கும் வகையில் தேர்வு இருக்காது. மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளி மைதானத்தை முறையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும். அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள், சீருடைகள் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Printed Guide for NMMS

NMMS slip test - 3

Tuesday, November 26, 2019

NMMS Slip test - 2

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.11.19

திருக்குறள்


அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:329

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

விளக்கம்:

பகுத்தறிவை இழந்து செயல்படும் கொலைகாரர்களைச் சான்றோர் உள்ளம், இழிவான பிறவிகளாகவே கருதும்.

பழமொழி

A man of course never wants  weapons.

 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி

முதிர்வு என்பது வயதால் வந்தாலும் மனதளவில் வரவில்லை என்றால் அம்முதிர்வு அளவீட்டில் இடம் பெறுவதில்லை...

------ புட்லிசர்

பொது அறிவு

1. விடுதலைப் போராட்ட வீரர் பகத்சிங் சார்பாக ஆஜரான வக்கீல் யார்?

 ஜவகர்லால் நேரு.

2. இந்தியாவில் மிக இளவயதிலேயே பிரதமராக இருந்தவர் யார்?

 ராஜீவ் காந்தி.

English words & meanings

Parasitology – study of parasites. ஒட்டுண்ணியியல். ஒட்டுண்ணிகள், அவற்றின் வழங்கிகள் அவற்றுக்கு இடையிலான தொடர்பு என்பவை பற்றி ஆராயும் ஒரு துறை ஆகும்.

Plumber -  a person who fits and repairs the pipes. குழாய்-தொட்டி முதலியவற்றைப் பொருத்திச் செப்பனிடுபவர்.

ஆரோக்ய வாழ்வு

சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்ப நோய்கள் ஏதும் ஏற்படாது.

Some important  abbreviations for students

ETA - Estimated time of arrival

ETD - Estimated time of departure

நீதிக்கதை

வேப்பமரமும்... சிறுவனும்

வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான். அதைக் கண்ட மரம் தம்பி ஏன் அழறே என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை. காலையில் எழுந்ததுமே முதலில் பல் தேய்த்துவிட்டு வா என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி என்று கண்டிக்கிறார். பின் குளித்து முடித்து பசிக்கலை என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.

பள்ளிக்கு வந்தாலோ பாடம் படிக்கலைன்னும், பாடம் சொல்லிக் கொடுக்கும்போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க. எல்லாருமே என்னை நாள் முழுக்க திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை என்றான் அழுது கொண்டே.

வேப்பமரம் என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா? என்றது. ஓ... இலை மட்டுமா உன் இலை, குச்சி எல்லாமே ஒரே கசப்பு. சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன். ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.

நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன். அது போல் பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது. ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.

நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பப்படுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.

புதன்
கணக்கு & கையெழுத்து

உரி அடுக்கு பானை

எங்கள் கிராமம் மண்பாண்டங்கள் நிறைந்த ஊர். எல்லோருடைய வீட்டிலும் உரி அடுக்கு பானைகள் இருக்கும் .சுமார் 70 வீடுகள் உள்ள கிராமம். உரி சுமார் 4 அடுக்கு உடையது . எனினும் 9 வீடுகள் ஆளில்லை. 17 வீடுகள் உரி அடுக்கு பயன்படுத்துவதில்லை. எனில்

கேள்வி :
(1)உரி அடுக்கு பயன்பாட்டில் உள்ள வீடுகள் எத்தனை.??
(2) எத்தனை உரி அடுக்கு பானைகள் உள்ளன???

விடை:
(1) 70 - (9+17)
70 - 26= 54

(2) 54 × 4 = 216

கையெழுத்துப்பயிற்சி - 20



இன்றைய செய்திகள்

27.11.19

* முதியோர்களின் அனைத்துத் தேவைகள் மற்றும் குறைகளைத் தெரிவிப்பதற்கு தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது.

தொலைபேசி எண் : 044 - 24350375

செல்பேசி எண் : 93612 72792

* இஸ்ரோவின் கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள், அமெரிக்காவின் 13 நானோ செயள்கைக்கோள் ஆகியவற்றைச் சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி47 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. இதற்கான 26 மணிநேர கவுண்ட் டவுன் இன்று காலை தொடங்கியது.

* தவளைகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அமெரிக்கப் பள்ளிகளில் ஆய்வுக்கு பயன்படுத்தப்பட வருகிறது சிந்தடிக் தவளை. இதனை மறுசுழற்சி செய்தும் பயன் படுத்திக் கொள்ளலாம்.

* தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மூன்று மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* திருப்பதியில் நடந்து முடிந்த தேசிய தடகள விளையாட்டு போட்டியில் தமிழகத்திற்கு 5 தங்க பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 13 பதக்கங்கள் கிடைத்துள்ளது.

* ஸ்காட்டிஷ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றாா் இந்திய இளம் வீரா் லக்ஷயா சென். இது ஓரே ஆண்டில் அவா் வெல்லும் 4-ஆவது பட்டமாகும்.

Today's Headlines

* To inform about the elder citizens needs and problems Tamil Nadu Government released help line numbers
Telephone number - 044 - 24350375
Mobile number - 9361272792.

🌸 With ISRO'S Cartochat - 13 and America's Nano 13 Satellite PSLV - C47 will take off into space by tomorrow. The 26 hours countdown started today morning.

🌸 To protect the Frog species a new synthetic frog is invented and started to be used in the American schools. We can recycle this frog also.

🌸 In next 24 hours there will be heavy rain in three districts says Chennai Metroligical Department.

🌸In Scottish open Tennis match Indian Young player Lakshaya Sen won the match. This is her fourth win.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/37F7qAQ

NMMS Slip Test -1

NMMS  Slip Test Download Put up yours More Effort..

 

 

Science & Social Science model Question Paper Download

 

 

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலப்பேச்சு திறன் வளர்த்தல் பயிற்சி..

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலப்பேச்சு திறன் வளர்த்தல் பயிற்சிக்கான அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வித்துறை - கட்டகங்களின் வாயிலாக பள்ளிகளில் மாணவர்களுக்கு  ஆங்கிலப் பேச்சுத்திறனை வளர்த்தல் .

Spoken English Reg. G.O Download Here. 


ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வருகைப் பதிவு மேற்கொள்ளப் படுவதால், உரிய விதிகளைப் பின்பற்றி RH எடுப்பது நல்லது.

வரையறுக்கப்பட்ட விடுப்பு அரசாணை 

அ. எண்:428, நாள்:16.12.2003 இன் படி வரும் புதன் (27. 11. 2019) கியார்வின் முகைதீன் வரையறுக்கப்பட்ட விடுப்பு இல்லை.அப்பண்டிகை வருகிற டிசம்பர் மாதம் எட்டாம் நாள் (08.12.2019 - ஞாயிறு) கொண்டாடப்படுகிறது.


நாளை (27.11.2019) வரையறுக்கப்பட்ட  விடுப்பு அனுமதிக்கப் படுமா?

 2019 ஆம் ஆண்டுக்கான கியார்வீன் முகைதீன் மத விடுப்பு நாள் எது?

சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் அவர்கள் வெளியிட்டுள்ள, 2019 ஆம் ஆண்டுக்கான் வரையறுக்கப் பட்ட விடுப்பு (RH) பட்டியலின் படி, நாளை (27.11.2019) RH கிடையாது. 

கியார்வீன் முகைதீன் மத விடுப்பு 08.12.2019 ஞாயிற்றுக் கிழமை என்பதால் நாளை (27.11.2019) வரையறுக்கப் பட்ட விடுப்பு எடுக்க அனுமதி இல்லை.

 தற்போது ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் வருகைப் பதிவு மேற்கொள்ளப் படுவதால், உரிய விதிகளைப் பின்பற்றி RH எடுப்பது நல்லது.

தமிழக அரசு வெளியீடு -பணிப் பதிவேடு பதிவு படிவத்தின் வரைவு மாதிரி

பணிப் பதிவேடு பதிவு படிவத்தின் வரைவு மாதிரி

 

 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் அடிப்படை விதிகள் - பணிப் பதிவேடுகளை பராமரித்து வருதல் - பணிப் பதிவேட்டில் பதிவுகளை செய்தல் - முறையான படிவங்கள் வரையறைப்படுத்துதல் - பொதுவான வழிகாட்டி குறிப்புகள் - தமிழில் தமிழக அரசு வெளியீடு!!

EMIS ONE app launched...

EMIS ONE - New mobile student attendance marking app Launched..
மாணவர்கள் வருகைப் பதிவேட்டை மேற்கண்ட செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம்.

முதல் கட்டமாக திருச்சி மாவட்டத்தில் பரிசாத்த முறையில் சோதனை செய்யப்படுகிறது....

Tnschools emis app download here...

ஆசிரியர்கள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரி..

வேலை நேரங்களில் ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுகின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்.

Monday, November 25, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.11.19

திருக்குறள்


அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:328

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

விளக்கம்:

பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.

பழமொழி

Abused patience turns to fury .

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

இரண்டொழுக்க பண்புகள்

1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி

கண் இருந்தாலும் இருளைக் கடக்க ஒரு வெளிச்சம் தேவை. அது போல் கல்வியும் நம் வாழ்வை கடக்க தேவை.

------- மகாத்மா காந்தி

பொது அறிவு

நவம்பர் 25 - இன்று தேசிய சட்ட தினம்

1. 'இந்திய அரசியலமைப்பின் தந்தை' என போற்றப்படுபவர் யார்?
 டாக்டர்.பி்.ஆர்.அம்பேத்கர்.



2. இந்திய விடுதலைக்குப் பின் நாட்டின் முதல் சட்ட  அமைச்சராகப்  பொறுப்பேற்றவர் யார்?
 டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்.

English words & meanings

Oology – study of eggs. முட்டைகள் மற்றும் கூடுகள் குறித்த ஆய்வு.

Octagonal - eight sided.
எண்கோணமான, எட்டுப்பக்கங்களையுடைய

ஆரோக்ய வாழ்வு

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சுரைக்காயை அடிக்கடி உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கணிசமாக குறையும்.

Some important  abbreviations for students

re.    =  regarding, about

sim. =  similar

நீதிக்கதை

நல்ல நண்பன் வேண்டும்


ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் வயல்களில் பயிரிட்டிருந்த தானியங்களை பறவைகள் வந்து நாசம் செய்து கொண்டிருந்தன. அதனால் அவற்றைப் பிடிக்க வலையைக் கட்டியிருந்தான் அவன். அன்று மாலை, அந்த வலையில் பல பறவைகளுடன் ஒரு கொக்கும் மாட்டிக்கொண்டது.

விவசாயி வந்து பறவைகளைப் பிடித்தான். மாட்டிக்கொண்ட கொக்கு விவசாயியைப் பார்த்து ஐயா நீங்கள் பறவைகளைப் பிடிக்கத்தானே வலையைப் போட்டீர்கள். நான் பறவை அல்ல அதனால் என்னை விடுவிக்கவேண்டும் என்று கேட்டது.

அதற்கு விவசாயி நீ சொல்வது உண்மை. ஆனால் நீ கெட்டவர்களுடன் அகப்பட்டாய். கெட்டவர்கள் நட்பு உனக்கு இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து நீயும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றான்.

நாமும் கெட்டவர்கள் நட்பை விட்டொழிக்க வேண்டும். இல்லையேல் என்றேனும் ஒரு நாள் அவர்களுடன் சேர்ந்து நமக்கும் தண்டனை கிடைக்கும்.

செவ்வாய்
English & Art

The 6 Long Vowel Sounds

The six long vowel sounds in English are a, e, i, o, u, and oo.

long a: make and take

long e: beet and feet

long i: tie and lie

long o: coat and toe

long u (pronounced "yoo"): music and cute

long oo: goo and droop

கலையும் கைவண்ணமும் - 40



இன்றைய செய்திகள்

26.11.19

* ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் வேடந்தாங்கல் பறவைகளுக்குத் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

* வீட்டுக்கு வீடு காய்கறித் தோட்டம்; ஊரைச் சுற்றி பழத்தோட்டம் என தன் சொந்த செலவில் ஊரையே பசுமையாக்கி வருகிறார் அமெரிக்கத் தமிழர் நரேந்திரன். இவர் கரூர் மாவட்ட வேப்பங்குடியைச் சேர்ந்தவர்.

* பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

* கோவை மாவட்டம் செஞ்சேரிப்புத்துார் அரசு துவக்கப்பள்ளி மாணவர்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, பனை விதை நடவில் ஈடுபட்டு வருகின்றனர்.

*இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த நடவடிக்கை: இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி அறிவிப்பு.

*  2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு, ஹாக்கி அணிகளின் பிரிவுகளை சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எப்ஐஎச்) வெளியிட்டுள்ளது.

Today's Headlines

🌸 Due to the Medical wastes dumped in the  vedanthangal lake,  birds are in danger of infectious diseases.

 🌸House-to-House Vegetable Garden;  Orchard around the town!  A colourful sight to the visitors - Narendran, an American Tamilian who greened the town at his own expense.  He hails from Veppankudi in Karur district.

 🌸Agriculture Department invites farmers to insure their crops.

 🌸Students of Chenjeriputhur Government Primary School plant palm seeds after the school hours.

 🌸Steps  are taken to host day-night Test in all parts of India: says ICC president Ganguly.

🌸The International Hockey Federation (FIH) has released sections of its hockey teams for the 2020 Tokyo Olympic Games.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2XKXGQV

டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு .

G.O NO: 72 - மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் 3ஆம் தேதி சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் - ஆணை.. 


 

EMIS பதிவு தொடர்பான தகவல்..

EMIS பதிவு தொடர்பாக முதன்மைக்கல்வி அலுவலர் அறிக்கை!! 

 

 

வட்டார / குறு வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு,

இறைவணக்கம் கூட்டத்திற்கு முன்பாக பதிவு செய்தல் தவிர்த்தல்

EMIS பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க சென்னையில் மாவட்டம் வாரியான குழு பள்ளிக்கல்வித்துறையால் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம் மாவட்ட EMIS பணிகளை தொடர்ந்து கண்காணித்து  வருகிறார்கள். அதனடிப்படையில் 22.11.2019 அன்று நமது மாவட்டத்திற்கு உட்பட்ட 4 தொடக்கப் பள்ளிகள் காலை 8 மணிக்கே பதிவு செய்துள்ளனர். இதனை இணை இயக்குநர் அவர்கள் கண்காணித்து வருகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட பள்ளியை பார்வையிடும் ஆசிரியர் பயிற்றுனர் இறைவணக்கம் கூட்டத்திற்கு முன்பாக மாணவர்களின் வருகை யினை பதிவு செய்தல் தவிர்த்தல் வேண்டும் என்ற தகவலினை தெரிவிக்க வேண்டும்.
ஏதேனும் பள்ளிகள் பதிவு செய்தல் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர்,
விழுப்புரம் மாவட்டம்.

தொடக்க நிலை மாணவர்களுக்கான தமிழ்ச் சொற்கள் 1500 - Edited version


 தொடக்க நிலை மாணவர்களுக்கான தமிழ்ச் சொற்கள் 1500
படித்தல் எழுதுதல் பயிற்சி செய்ய பயன்படுத்தலாமே..!
 
படிப்போம்! எழுதுவோம் ... தரவிறக்கம் செய்ய சொடுக்கவும்.

ஆசிரியர் இயக்கங்களுடன் சந்திப்பு - தற்காலிக ஒத்திவைப்பு!!

பள்ளிக் கல்வித்துறை ஆணையர் - ஆசிரியர் இயக்கங்களுடன் சந்திப்பு - தற்காலிக ஒத்திவைப்பு!! 

News from websites.

 

NMMS EXAM DEC 2019 HALL TICKET DOWNLOAD வழிமுறைகள்..

NMMS EXAM DEC 2019 HALL TICKET DOWNLOAD - செய்யும் வழிமுறைகள் 

 தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத் தேர்வு டிசம்பர் 2019 (NMMS Exam) 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.
தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை https://apply1.tndge.org/login 
 www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 22.11.2019 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 
Hall Ticket Download செய்யும் வழிமுறை

NMMS Hall Ticket Download
 
 
 
 
User login 


 
Emis...User name
Password
 
 
Sign in
 
 
Report Section
 
 
  ⬇
 

 
 
 ⬇
 

 

Sunday, November 24, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.11.19

திருக்குறள்


அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:327

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.

விளக்கம்:

தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.

பழமொழி

Little wealth, little  care.

 மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. கடலையும் கடல் சார்ந்த பொருட்களையும் பாதுகாப்பேன்.

2. நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.

பொன்மொழி

நம்முடைய செயலில் ,தன்னலம் இன்றி பொதுநலம் இருக்குமாயின் ,ஒரு சமூக வழிகாட்டியாக உயர்கிறோம் .

___மகாத்மா காந்தி

பொது அறிவு

1. 'திரிவேணி சங்கமம் 'என்று அழைக்கப்படும் நகரம் எது?

 அலகாபாத்
 (கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம்).

2. அலகாபாத் நகரில் பிறந்து இந்திய பிரதமரான மூன்று தலைவர்கள்
யாவர்?

 ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி , வி.பி. சிங் .

English words & meanings

Nosology – study of diseases.நோய்ப் பகுப்பியல். நோய்களைக் குறித்த படிப்பு .

 Nascent - just coming into existence. பிறக்கும் நிலையிலுள்ள, முழு வளர்ச்சி எய்தாத

ஆரோக்ய வாழ்வு

சுரைக்காயில் வைட்டமின் பி ,வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இது சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு ஆகிய நோய்களுக்கு சிறந்தது.

Some important  abbreviations for students

POW - Prisoner Of War

RNC - Republican   National Committe

நீதிக்கதை

ஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்

ஒரு நாள், ஏழை விவசாயி ஒருவர் அருகில் உள்ள கிராமத்திற்கு நடந்து சென்றார். அது ஒரு கோடை காலம். வெயில் சுட்டெரித்து விவசாயிக்கு பசி வயிற்றைக்கிள்ளியது. வெயில் காரணமாக தண்ணீர் தாகமும் எடுத்தது. சோர்வடைந்த அவர், சாலை ஓரத்தில் இருந்த மரத்தடியில் நிழலில் ஒதுங்கினார்.

அப்போது அங்கு ஒரு இளைஞன் வந்தான். அவன் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவன். தான் சந்திக்கும் நபர்களிடம் தனது புத்திசாலித் தனத்தையும் சொல்லி பெருமை பேசிக் கொள்வான்.

மேலும் தனக்கு தெரியாதது எதுவும் இல்லை. அப்படி தெரிந்தால் அதை தனக்கு கூறுமாறு பிறரிடம் கேட்பான். அவனது இந்த ஆணவப்பெருக்கை அறிந்த பலரும் அவனைக் கண்டால் ஒதுங்கிச் செல்லத் தொடங்கினார்கள். இதை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னைப்போல சிறந்த கல்வியாளர் யாரும் இல்லை என்ற அகந்தையுடன் இருந்தான்.

அந்த இளைஞன் மரநிழலில் ஒதுங்கி இருந்த விவசாயியை பார்த்தான். உடனே அவரிடம் பேச ஆரம்பித்தான். ஐயா விவசாயி நான் நிறைய படித்திருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும். இருந்தாலும் எனக்கு தெரியாத எதுவும் உங்களுக்கு தெரிந்தால் அதை கூறுங்கள் பார்க்கலாம் என்று ஆணவத்துடன் பேசினான்.

அந்த இளைஞனின் ஆணவம் குறித்து அந்த விவசாயி ஏற்கனவே அறிந்திருந்தார். எனவே அவர் அமைதியாக இருந்தார். அது அந்த இளைஞனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவன் என்னதான் பேசினாலும் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் விவசாயி மௌனம் காத்தார்.

இந்த நிலையில் அந்த இளைஞன் தன்னிடம் இருந்த உணவுப்பொட்டலத்தை பிரித்தான். சாப்பாட்டைப் பார்த்ததும் விவசாயிக்கு பசி அதிகரித்தது. அவர் கண்களில், கொஞ்சம் உணவு கிடைக்காதா? என்ற ஏக்கம் எட்டிப்பார்த்தது. இதை வைத்து அந்த விவசாயியை மடக்க அவன் நினைத்தான்.

இதையடுத்து அந்த விவசாயிடம், ஐயா என்னிடம் உள்ள உணவை நான் பங்கிட்டு கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால் எனக்கு தெரியாத , நான் அறியாத, நான் கற்றுக்கொள்ளாத விஷயம் ஒன்றை நீங்கள் சொல்ல வேண்டும். அப்போது தான் என்னிடம் உள்ள உணவை உங்களுக்கு கொடுக்க முடியும் என்றான்.

விவசாயி கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் அவர் அந்த இளைஞனுக்கு சரியான பதிலடி கொடுத்தால் தான் அடங்குவான் என்று கருதினார். பின்னர் அந்த இளைஞன் நோக்கி, படித்த முட்டாள் தான் பெருமை பேசித்திரிவான் என்றார். தொடர்ந்து அவர், இது தான் இது வரை நீ கற்றுக்கொள்ளாத விஷயம், நான் அறிந்த விஷயம் என்றார்.

விவசாயி கூறிய இந்த பதிலைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டான் அந்த இளைஞன். தற்பெருமை, அகங்காரம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான். தன்னை மன்னிக்கும்படி அந்த விவசாயிடம் கேட்டுக்கொண்டு, தனது உணவை மகிழ்ச்சியுடன் அவரிடம் பங்கிட்டுக்கொண்டான்.

திங்கள்
தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

கிரயம் - விலை           
குதூகலம்    - அக்களிப்பு         
கோஷ்டி  -  குழாம்       
 சக்தி   -   ஆற்றல்           
 சகஜம் - வழக்கம்

இன்றைய செய்திகள்

25.11.19

* தேசிய மருத்துவ பரிசோதனை நாளை (National health Check up) முன்னிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துசெல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

* "சந்திராயன்-2-ன் அறிவியல் குறிக்கோள்கள்
 முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன"- மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டு !

*ரூபிக் க்யூப் புதிரினை  சென்னையைச் சார்ந்த 6 வயது பள்ளி மாணவி சாரா 2 நிமிடம் 7 நொடிகளில் கண்ணை கட்டிக் கொண்டு செய்து சாதனை படைத்தார்.



* தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. CSS எனப்படும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ், இந்த மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன.

* இந்தியா வங்காளதேசத்திற்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் தனது 27 வது டெஸ்ட் சதத்தை அடித்தார் விராட் கோலி.

Today's Headlines

🌸 The Times of India is trying to raise awareness about health among people on behalf of National Health Check-up Day.

 🌸Central minister Jitendra Singh praised that "scientific objectives of Chandrayan-2 have been fully accomplished" .
 
 🌸6-year-old student Sara from Chennai  set a record by bind her eyes and solved Rubik's cube puzzle  in 2 minutes and 7 seconds.

 🌸 Central  Government has approved setting up of new Medical Colleges in 6 States including Tamil Nadu.  These medical colleges are to be set up under the Central Government Assistance Scheme (CSS).

 🌸 virat Kohli score his 27 the century in the first test match against Bangladesh.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2KLJYYM

அனைத்து பாடப் புத்தகங்களும் வீட்டுக்கே கொரியர் மூலம் வந்து விடும்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களும் இ-சேவை மையத்தில் அதற்குரிய தொகையை கட்டினால் அனைத்து பாடப் புத்தகங்களும் வீட்டுக்கே கொரியர் மூலம் வந்து விடும் போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் விலைப்பட்டியலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.





Saturday, November 23, 2019

இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை.

இரண்டாம் பருவத்தேர்வு கால அட்டவணை.


1-2வகுப்புகள் -முற்பகல்

17.12.2019 தமிழ்
18.12.2019 ஆங்கிலம்
20.12.2019 கணக்கு
23.12.2019 சூழ்நிலையியல்

3-5 வகுப்புகள்-பிற்பகல்

17.12.2019 தமிழ்
18.12.2019 ஆங்கிலம்
19.12.2019 கணக்கு
20.12.2019 அறிவியல்
23.12.2019 சமூகவியல்

6,8 வகுப்புகள்- முற்பகல்
7ம் வகுப்பு-பிற்பகல்

13.12.2019 தமிழ்
14.12.2019 உடற்கல்வி, ஓவியம்
16.12.2019 ஆங்கிலம்
18.12.2019 கணக்கு
20.12.2019 அறிவியல்
23.12.2019 சமூகவியல்

24.12.2019 முதல் 01.01.2020 வரை இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை


02.01.2020 மீண்டும் பள்ளி திறப்பு

பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் அனைத்து சங்க கூட்டம் .

பள்ளிக் கல்வி ஆணையர் தலைமையில் அனைத்து சங்க கூட்டம் - தேதி அறிவிப்பு


பள்ளிக் கல்வி புதிய நிர்வாக அமைப்பு



Super Annuation Pay Fixation For CPS Employees.

CPS- பங்களிப்பு ஒய்வூதியத் திட்டத்தில் உள்ளஆசிரியர்கள்- கல்வியாண்டின் இடையில் வயது முதிர்வு காரணமாக ஒய்வுபெறும் போது அவர்களுக்கு மறு நியமனம் வழங்கி தமிழக அரசு உத்தரவு.


Click Here - G.O 170 - 23.10.2014 - Super Annuation Pay Fixation For CPS Employees - pdf

"மக்கள் சாசனம்" - பள்ளிக் கல்விதுறையால் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்கு...

"மக்கள் சாசனம்" - பள்ளிக் கல்விதுறையால் மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் என்னென்ன - தமிழக அரசின்முழு அறிக்கை


Click Here - School Education Makkal Sasanam - Pdf


Thursday, November 21, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.11.19

திருக்குறள்


அதிகாரம்:கொல்லாமை

திருக்குறள்:326

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

விளக்கம்:

கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

பழமொழி

No honest man ever repented of his
honesty .

 மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள்

1. சுத்தம் சுகம் தரும். எனவே எப்போதும் சுய சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பேணுவேன்.

2. என்னுடைய அகமும் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்.

பொன்மொழி

செயலின் வெற்றி தன்னம்பிக்கை தான்  நன்னம்பிக்கை இன்றி தொடங்கும் எந்தச் செயலின் முடிவும் நன்மையாக அமைவதில்லை..

_____சிங்சன்

பொது அறிவு

1.  உலகில் அதிக அளவில் விற்பனை ஆகும் மசாலா பொருள் எது?

மிளகு

2. உலகில் விலை உயர்ந்த மசாலா (நறுமண பொருள்) எது?

குங்குமப்பூ

English words & meanings

Microbiology – study of microscopic organisms. நுண்ணுயிரியல் - இது நுண்ணுயிர் அவை சார்ந்த அனைத்தையும் பற்றிய படிப்பாகும்.

 Magnanimous
- generous and forgiving in nature. பெருங்குணமுள்ள

ஆரோக்ய வாழ்வு

துளசியை நீரில் கொதிக்கவைத்து குடித்து வந்தால் தலைவலி நீங்கும்.

Some important  abbreviations for students

DMV - Division of Motor Vehicles

DNC - Democratic National Committee

நீதிக்கதை

இறைவனுக்கு நன்றி சொல்வோம்

ஒரு ஊரில் காகமொன்று இருந்தது. அது கருப்பு நிறத்தில் இருப்பதை வெறுத்தது. ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது அப்போது நீரில் இரு அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன.

அவற்றைப் பார்த்த காகம் அந்த அன்னப்பறவைகளைப் போல நான் வெள்ளையாக இல்லையே என வருந்தியது. அந்தப் பறவைகளைப்போல நாமும் தண்ணீரில் நீந்தினால் தன் சிறகுகளில் இருக்கும் கரிய நிறம் போய் வெண்மை நிறம் வந்துவிடலாம் என எண்ணியது.

உடனே அன்று முழுதும் அது தண்ணீரில் நீந்தியது. தன் இறகுகளை தேய்த்து தேய்த்து பார்த்தது. அதனால் சில இறகுகளையும் இழந்தது.

அதைப் பார்த்த அன்னப் பறவைகளில் ஒன்று காகத்திடம் இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு உருவம், நிறம் பெற்றவை. அதை மாற்ற நினைத்தால் நடக்காது என அறிவுரை கூறியது. மேலும், கடவுள் எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும் என்றது.

வெள்ளி
சமூகவியல்

சமூகவியல்
உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான்.  உலகின்  மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும்.எப்பொழுதும்
உறைபனி மூடி இருக்கும். இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது.இது பூடான், இந்தியா,  நேபாளம், சீனா மற்றும் பாகிஸ்தான்
ஐந்து நாடுகளில் பரவியுள்ளது.
உலகின்  பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரம்மபுத்திரா உற்பத்தியாகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது.

இன்றைய செய்திகள்

22.11.19

*தாய்லாந்து - லாவோஸ் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவு.

* வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

*ஆசிரியர்களுக்கு QR Code உடன் கூடிய ஸ்மார்ட் கார்டு (Smart Card) தயாரிப்பதற்கான பணியில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

*பழனி தண்டாயுதபாணி கோயிலில் ரோப்கார் சேவை தொடங்கியது.

* மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட  டி20 தொடரை 5 - 0 என்ற கணக்கில் வென்று சாதனைப் படைத்தது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.

* சீனாவில் நடைபெற்று வரும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார்.



Today's Headlines

🌸In the border of Thailand and Laos there is an earthquake measured 6.1 Richter.

🌸 Due to Heat convection waves there is a chance of mild rain in Tamil Nadu and Puduchery says the Metroligical department.

🌸 Smart Cards with QR Code are getting ready for the Tamil Nadu teachers by  the  School Education Department.

🌸In Pazhani Thandaayuthapaani temple started the Rope car service.

🌸 The Indian women's cricket team won the T-20 series in the set of 5-0 and made a record.

🌸 In the World ISSF shooting competition took place in China tamilian Ilavenil Valarivan won the gold medal.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/37qDgRS

Wednesday, November 20, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.11.19

திருக்குறள்

அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:325

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

விளக்கம்:

உலகியல் நிலையை வெறுத்துத் துறவு பூண்டவர் எல்லோரையும்விடக் கொலையை வெறுத்துக் கொல்லாமையைக் கடைப்பிடிப்பவரே சிறந்தவராவார்.

பழமொழி

Shun the wicked, as you would the plague

 துஷ்டனைக் கண்டால் தூர விலகு

இரண்டொழுக்க பண்புகள்

1. சுத்தம் சுகம் தரும். எனவே எப்போதும் சுய சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பேணுவேன்.

2. என்னுடைய அகமும் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்.

பொன்மொழி

நீங்கள் நல்லவர் என்றால் மற்றவர்களுக்கும் நீங்கள் நல்லவர் தான்.சமூகத்திற்கும் நல்ல செயல்களை மட்டுமே செய்பவர் தான்.

___பிராங்க்ளின்

பொது அறிவு

இன்று உலக தொலைக்காட்சி தினம் மற்றும் உலக மீன்பிடி தினம்

1.தொலைக்காட்சியை கண்டுபிடித்தவர் யார்?

 ஜே.எல்.பைர்ட்(1926)

2.மீன்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

ஜப்பான்.

3. நீலப் புரட்சி என்பது எதனைக் குறிக்கிறது ?

 நீலப் புரட்சி என்பது அதிக அளவு மீன் உற்பத்தியை குறிக்கும்

English words & meanings

 Laryngology – study of larynx. தொண்டை மற்றும் குரல்வளை குறித்த படிப்பு.

 Lactic - relating to or obtained from milk. பால்சார்ந்த

ஆரோக்ய வாழ்வு

கிராம்பை அவ்வப்போது கடித்துவந்தால் தலைவலிக்கு சுகமாக இருக்கும்.

Some important  abbreviations for students

HP  - horsepower

h&c - hot and cold

நீதிக்கதை

செய்நன்றி மறவேல்

ஒருநாள் மான் ஒன்று புல் மேய்ந்துக் கொண்டிருக்கையில், வேடன் ஒருவன் கண்களில் சிக்கியது. அவன் மானைக் கொல்ல, அம்பெய்தப் குறி பார்த்தான்.

மான் நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஓடியது. சிறிது தூரம் சென்றதும், ஒரு புதரைப்பார்த்து அதன் பின் ஓடி ஒளிந்தது. மானைத் துரத்தி வந்த வேடன் அதைக் காணாது சுற்றும் முற்றும் தேட ஆரம்பித்தான்.

அவனிடமிருந்து தப்பித்துவிட்டோம் என்ற எண்ணத்தில் புதரில் வளர்ந்திருந்த செடியின் இலைகளை மான் தின்ன ஆரம்பித்தது. அப்போது அச்செடி, மானே! நான் உன்னை வேடனிடமிருந்து காப்பாற்றியுள்ளேன்! ஆனால், நீ எனது செல்வங்களான இலைகளை உண்ணுகிறாய். தயவு செய்து சில நாட்களாவது அவை தாயான என்னிடம் இருக்கட்டும் என கெஞ்சியது.

ஆனால், அதைக் கேட்காத மான் செடியின் இலைகளை உண்ணத் தொடங்கியது. அப்போது, அதனால் சிறு சலசலப்பு உண்டாக, வேடன் மான் அங்கு ஒளிந்திருப்பதைப் பார்த்துவிட்டான். அதன் மீது அம்பை எய்திக் கொன்றான்.

தன்னைக் காத்த செடியின் செய்நன்றியை மான் மறந்ததால் மான் உயிரையே இழக்க நேர்ந்தது. நாமும் நமக்கு ஒருவர் சிறிய உதவியைச் செய்தாலும் அதை மறக்காது, உதவி புரிந்தோர்க்கு நம்மாலான நன்மைகளையே செய்ய வேண்டும்.

வியாழன்
அறிவியல் & கணினி

அறிவோம் அறிவியல்

Boat with baking powder

தேவையான பொருட்கள் :
ஒரு பிளாஸ்டிக் குப்பி, உறிஞ்சு குழல் (straw), ஆப்ப சோடா அல்லது சோடா மாவு, சிவப்பு நிற உணவு கலர், எலுமிச்சை சாறு அல்லது வினிகர்.

செய்முறை :
குப்பியில் உள்ள மூடியில் சிறு துளை இட்டு அதில் உறிஞ்சு குழலை சொருகவும். குப்பியின் உள்ளே ஆப்ப சோடா போட்டு அதனுடன் சிவப்பு உணவு கலரை சேர்க்கவும்  வினிகரை ஊற்றவும். மூடியை இறுக்க மூடி நீர் நிரம்பிய தொட்டியில் இடவும். தற்போது குப்பி ஒரு ஜெட் படகு போல செல்வதைக் காணலாம்.

அறிவியல் : ஆப்ப சோடா வினிகருடன் வினை புரிந்து CO2 உற்பத்தி செய்யும். இது அதிக விசையுடன் உறிஞ்சு குழல் வழியாக வெளியேறும். இந்த விசை குப்பியை அதி வேகத்தில் அங்கும் இங்கும் இயங்க வைக்கும். சிவப்பு வர்ணம் தொட்டியில் உள்ள நீரில் இருந்து வேறுபடுத்தி அறிய சேர்க்கப் படுகிறது.

கணினி சூழ் உலகு

7-ஆம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் உள்ள இணைய செயல்பாடுகளை எவ்வாற செய்வது என்பதைப் பற்றிய காணொளி....

இன்றைய செய்திகள்

21.11.19

* இரண்டாம் உலகப் போரின் மையப் பேசுபொருளாக விளங்கிய நாஜித் தலைவர் அடால்ஃப் ஹிட்லர் பிறந்த கட்டடத்தை காவல்  நிலையமாக மாற்ற ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது.

* குற்றாலம் பகுதியில் புதன்கிழமை பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதனையடுத்து குற்றாலம் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.

*நாமக்கல்லில், பசுமைத் தாயகம் அமைப்பு சாா்பில், 2 கிலோ நெகிழிக்கு ஒரு கிலோ அரிசி மற்றும் காய்கறி வழங்கும் விழிப்புணா்வு முகாம்  நடைபெற்றது.

* யூரோ 2020 கால்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு டென்மாா்க், ஸ்விட்சா்லாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

* தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் எல். சிவராம கிருஷ்ணன் இந்திய அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக இருக்கிறார்.

Today's Headlines

🌸The Austrian government has decided to convert the birth place where  Nazi leader Adolf Hitler who was the central figure of World War II, into a police station.

 🌸Heavy rains in the Courtallam area caused floods in the Courtallam falls .Bathing was banned due to this .

 🌸 At Namakkal, Green Home Organization  held an awareness camp where they  provide 1 kg of rice and vegetable for 2 kg  of plastics.

 🌸 Denmark and Switzerland teams were qualified for the final of Euro 2020 Football Tournament.

   🌸Mr.Sivarama Krishnan, the Former cricketer of Tamil Nadu is the new chief selector of the Indian selection committee.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2s2ZgSv

Last Pay Certificate - ( LPC)

https://drive.google.com/open?id=17ELSTk20Ot6iHSS0YObN6sRYOyfEnx1J
Click Picture

Relieving Order formats

https://drive.google.com/open?id=1JbmR51mCHugdtLqB4I4hopjotKOYx6x9


வேறு பள்ளிக்கு மாற்றலாகி செல்லும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை ஒப்படைக்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை



சென்னை: 11, 12-ம் வகுப்பு ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றலாகி

Tuesday, November 19, 2019

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.11.19

திருக்குறள்


அதிகாரம்:இன்னா செய்யாமை

திருக்குறள்:324

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.

விளக்கம்:

எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.

பழமொழி

Trust not to a broken staff

மண்குதிரையை நம்பி  ஆற்றில் இறங்காதே

இரண்டொழுக்க பண்புகள்

1. சுத்தம் சுகம் தரும். எனவே , எப்போதும் சுய சுத்தம், சுற்றுப்புற சுத்தம் பேணுவேன்.

2. என்னுடைய அகமும் புறமும் தூய்மையாக இருக்கும் படி பார்த்துக் கொள்வேன்.

பொன்மொழி

நிதானமாக சிந்திக்க வேண்டும்.விவேகமாக  திட்டமிட வேண்டும். விரைவாக செயல்பட வேண்டும்.

---- புலிட்சர்

பொது அறிவு

1.இங்கிலாந்து நாட்டின் முதல் அரசி யார்?
 முதலாம் மேரி.

2. உலகின் முதல் அணு மின்சக்தி நிலையத்தை அமைத்த நாடு எது?    ரஷ்யா

English words & meanings

 Kinematics – study of motion. இயங்கியல். இது   விசையியலின் ஒரு பிரிவாகும். திசைவேகம், முடுக்கம் போன்ற கூறுகளைவிபரிக்கிறது

Keen-Set
Having lot of enthusiasm in some activities. பசியார்ந்த, விருப்பார்வமுள்ள

ஆரோக்ய வாழ்வு

பட்டைப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டால் தலைவலி நீங்கும்.

Some important  abbreviations for students

GMT - Greenwich Mean Time

GPS - Global Positioning System

நீதிக்கதை

சமாதானம் அவசியம்

காட்டில் மான் ஒன்று இறந்து கிடந்தது. அதை ஒரே சமயத்தில் சிங்கம் ஒன்றும், கரடி ஒன்றும் பார்த்தன. கரடி, நான் தான் முதலில் மானைப் பார்த்தேன். ஆகவே அது எனக்குச் சொந்தம் என்றது. ஆனால் சிங்கமோ.... நான் தான் முதலில் பார்த்தேன். ஆகவே இந்த மான் எனக்கேச் சொந்தம் என்றது.

இரண்டும், செத்துக்கிடந்த மான் யாருக்குச் சொந்தம் என நீண்ட நேரம் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தன. அதனால் இரு மிருகங்களும் சோர்வு மேலிட மயங்கின. அப்போது நரி ஒன்று அங்கு வந்து, இறந்து கிடந்த மானையும், அதற்காக சண்டையிட்டுக் கொள்ளும் சிங்கத்தையும். கரடியையும் பார்த்தது. இதுதான் சமயம் என நரி மானைத் தின்றுவிட்டு ஓடியது.

மயக்கம் தீர்ந்ததும் விழித்துக் கொண்ட கரடியும், சிங்கமும், நரி வந்து மானைத் தின்றுவிட்டுப் போனதை அறிந்தன. நாம் இருவரும் சமாதானமாய் போயிருந்தால், மானை பங்குப்போட்டு உண்டிருக்கலாம். நாம் சண்டையிட்டதால் வேறு ஒருவன் புகுந்து நம்மை ஏமாற்றிவிட்டானே என வருந்தின.

புதன்
கணிதம் & கையெழுத்து
சிறு சேமிப்பு

ரமா ஒவ்வொரு மாதமும் 50 ரூபாய் உண்டியலில் போடுவாள். புதுவருடம் மற்றும் பிறந்தநாள் இரு நாட்கள் தலா 100 ரூபாய் போடுவாள்.
பிறந்தநாள் அன்று இரவு சேர்ந்துள்ள தொகையை தன் அம்மாவிடம் கொடுப்பாள். எனில்

கேள்வி: ரமா அம்மாவிடம் கொடுக்கும் தொகை எவ்வளவு??
விடை: 50 × 12 = ₹ 600
           600+200 = ₹ 800
₹800 கொடுப்பாள்.

கையெழுத்துப்
பயிற்சி - 19




இன்றைய செய்திகள்

20.11.19

*பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த சிறப்பு எழுத்தறிவு திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சரிடம், தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.1 லட்சத்திற்கான
 வழங்கி அசத்தியுள்ளார், தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர் உலகராஜ்.

* ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் என்ற விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் வருகிற டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

*சென்னை மாநகர் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* 3 மாதங்களாக நிறுத்தி வைத்திருந்த இந்தியாவுடனான தபால் சேவையை பாகிஸ்தான் மீண்டும் தொடங்கியுள்ளது.

* இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

* ஏடிபி டூா் பைனல்ஸ் போட்டி இறுதிச் சுற்றில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றாா் இளம் வீரா் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ்.

Today's Headlines

🌸The Minister participated in the inauguration of the Special Literacy Project on behalf of the Directorate of Non-School and Adult Education. In that function  a Block Resource Teacher from Tevipatnam gave one Lakh rupees to the minister for the improvement of the school where he studied.

 🌸India-owned CardoSat-3 satellite from the Satish Dhawan space station in Sriharikota, Andhra Pradesh, is scheduled to launch on December 25 at 9.28 am.

 🌸 The Chennai High Court has ordered the Corporation and Police to take action to dispose of the vehicles parked on sidewalks throughout the city.

 🌸Pakistan has resumed postal service with India, which had been suspended for 3 months.

 🌸 India - West Indies won the 4th T20 cricket match between women's teams.

 🌸 Young hero Stefanos Sitzipas won the championship for the first time in the final round of the ATP Tour Finals.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2D3CQm9

back to top

Back To Top