இளம் எழுத்தாளர்கள் 75 பேருக்கு ரூ.50,000 உதவித்தொகை..
மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அது இளம் எழுத்தாளர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் 75 பேருக்கு, 6 மாதங்களுக்கு, 50,000 உதவித்தொகையுடன் கூடிய பயிற்சியை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவில் கலை, எழுத்து இலக்கிய திறனை அதிகப்படுத்த, சர்வதேச அளவில் இந்தியாவின் எழுத்தாளர்களை ஊக்குவிக்க மத்திய அரசு உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியை அளிக்க முன்வந்துள்ளது.
30 வயதிற்கு உட்பட்ட இந்திய மொழி மற்றும் படைப்புகளில் மிகச் சிறந்த படைப்புகளை வழங்கும் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, இந்திய கலாச்சாரம், பண்பாடு, ஒருமைப்பாடு, இலக்கிய வளம், மொழி வளம், கலைகள் உள்ளிட்டவற்றை வாசிக்கத் தெரிந்த அறிவும், புனைவுகள், அபுனைவுகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் உள்ளிட்டவற்றை படைக்க, இளைஞர்களை தயார்படுத்தும் வகையில், இது அமைய வேண்டும்.
News : News 4 Tamil

No comments:
Post a Comment