ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு 100 சதவீதம் Covid-19 தடுப்பூசி (covid-19 vaccination) செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள்/வட்டார கல்வி அலுவலர்கள் / அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் கவனத்திற்கு, தங்களது ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து அரசு / நிதி உதவி / சுயநிதி /மெட்ரிக் தொடக்க /நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளில் பணி புரியும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு 100 சதவீதம் Covid-19 தடுப்பூசி (covid-19 vaccination) செலுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே இதுவரை தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்களை சம்மந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு தினசரி அறிக்கை அளிக்க அனைத்துவகை தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மை கல்வி அலுவலர், ஈரோடு.
No comments:
Post a Comment