வீடு தேடி பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் புதிய திட்டம்..
கற்றல் இடைவெளியை போக்க , எல்கேஜி முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவ - மாணவிகளின் வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தும் ' வீடு தேடி பள்ளிகள் ' என்ற புதிய திட்டத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது . முதற்கட்டமாக இந்த திட்டத்தை சென்னையில் அமல்படுத்த திட்டமிட்டுள்ள தாகவும் கூறப்படுகிறது . இதன்படி , ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணாக்கர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று , அங்குள்ள மாணாக்கர்களை ஒருங்கிணைத்து , தினசரி 2 மணி நேரம் பாடங்கள் நடத்தவும் , கற்றல் குறைபாட்டை போக்க பல்வேறு செயல்முறை நிகழ்ச்சிகள் நடத்தவும் அறிவுறுத்தப்பட உள்ளனர் .
ஆசிரியர்கள் பணி செய்வதை தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிப்பார்கள் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் . அத்துடன் , வீதி வகுப்பறை என்ற பெயரில் தன்னார்வலர்கள் , தொண்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்த பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது . ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரையுள்ள மாணவர் களுக்கு நவம்பர் 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் , அதற்கு முன்னதாக அக்டோபர் மாதமே வீடு தேடிச் சென்று பாடம் நடத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . பள்ளிகள் திறந்த பிறகும் மாலை நேரத்தில் மாணவர்களின் வசிப்பிடம் சென்று பாடம் நடத்தவும் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது .
No comments:
Post a Comment