Thursday, August 5, 2021

ஆசிரியர்கள் கணக்கெடுக்க அரசு உத்தரவு.

 அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக்கெடுக்க அரசு உத்தரவு.

 சென்னை : அரசு பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கையை , மாணவர் விகிதத்துக்கு ஏற்ப கணக்கெடுத்து பட்டியல் அனுப்புமாறு , பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது . தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் , மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது . மேலும் , அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு , கற்பித்தல் பயிற்சிகள் வழங்கவும் , ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தவும் , பள்ளி கல்வி இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது . இந்நிலையில் , அரசு பள்ளிகளில் காலியாக மற்றும் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கண்டறிய , கணக்கெடுப்பு பணிகளை , பள்ளிக்கல்வி துறை துவங்கியுள்ளது . பள்ளிக்கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர் பொன்னையா , முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது :

அனைத்து அரசு பள்ளிகளிலும் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களை , ஆக . , 1 ம் தேதி நிலவரப்படி , மாணவர் எண்ணிக்கை விகிதத்தின் படி , கணக்கெடுக்க வேண்டும் . வகுப்பு வாரியாகவும் , தமிழ் , ஆங்கில வழி மாணவர் எண்ணிக்கையிலும் கணக்கிட வேண்டும் . முந்தைய ஆண்டுகளில் உபரியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை , பள்ளி கல்வி துறையிடம் ஒப்படைத்திருந்தால் , அந்த இடங்களை கணக்கில் எடுக்கக் கூடாது . இந்த விபரங்கள் அனைத்தையும் , பள்ளி கல்வி துறையில் , கல்வி மேலாண்மை , ' டிஜிட்டல் ' தளமான , ' எமிஸ் ' வழியாக , ' ஆன்லைனில் ' பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு , அதில் கூறப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment

back to top

Back To Top