Wednesday, August 25, 2021

தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை..

 ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை ஆசிரியர் , மாணவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை..

செப் .1 - ம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு - ஆசிரியர் , மாணவர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் : தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை என அறிவிப்பு மாணவர்கள் , ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகே கல்லூரிக்கு வரவேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களுக்கு கட்டாய விடுப்பு என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது . தமிழகத்தில் கல்லூரிகள் அனைத்தும் வரும் செப் .7 - ம்தேதி திறக்கப்பட உள்ளன . அதன்படி , அனைத்து வகையான கலை அறிவியல் கல்லூரிகள் பின்பற்றவேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது . அதில் , கூறப்பட்டுள்ளதாவது : மாணவர்கள் , ஆசிரியர்கள் , பணியாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளையும் கட்டயாம் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் . தடுப்பூசி போடாதவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் . தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விவரங்களை அரசு கேட்கும்போது வழங்க ஏற்றவாறு சேகரித்து வைக்கக் கொள்ளவேண்டும் .

கரோனா சிகிச்சை மையமாக உள்ள கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளையே தொடர விரைவில் முடிவு செய்யப்படும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் கூட்டி பெற்றோர்களின் ஆலோசனையைப் பெற்றிருக்க வேண்டும் . தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்குக் கல்லூரியிலேயே தடுப்பூசி போட சுகாதாரத் துறை மூலமாக ஏற்பாடு செய்ய வேண்டும் . நோய்த்தொற்று அறிகுறி உள்ள மான ர்கள் கும் , அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் ஆர்டி - பிசிஆர் சோதனை எடுக்க வேண்டும் .

மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிக்கு வர தேவையில்லை . கல்லூரி வளாகத்தினுள் பயன்படாத பிளாஸ்டிக் கப் , தேநீர் கப் , டயர்கள் , விஷ ஐந்துக்கள் தஞ்சமடையும் இடங்களை உடனே அப்புறப்படுத்த வேண்டும் . நுழைவு வாயில் மற்றும் வெளியேறும் வழிகளில் கண்காணிப்புக் குழு அமைத்து , வழிகாட்டு நடைமுறை பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் . சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது . பள்ளிகளில் அனுமதி இல்லைதமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பால் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன . 

தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் , வரும் செப்டம்பர் 1 - ம் தேதி முதல் 9 , 10 , 11 மற்றும் 12 - ம் வகுப்புகள் சுழற்சி முறையில் இயங்கவுள்ளன . பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் , பள்ளி வளாகத்தைச் சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் . பள்ளிக்கு வரும் மாணவர்களை , வெப்ப பரிசோதனைக்கு பின் , வளாகத்தில் அனுமதிக்க வேண்டும் . கரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் , ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது . அவர்களுக்கு உடனடியாக கரோனா பரிசோதனை செய்யவேண்டும் . அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன . 

இந்நிலையில் , சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 24 மணி நேர கரோனா தடுப்பூசி மையத்தின் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , “ பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் . அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்பது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது . தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்களை மட்டுமேபள்ளிகளுக்குள் அனுமதிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . தடுப்பூசி போடாத ஆசிரியர்களுக்கு பள்ளிகளுக்குள் அனுமதி இல்லை ” என்றார்.

No comments:

Post a Comment

back to top

Back To Top