Wednesday, July 14, 2021

பள்ளிகள் திறப்பு ? தயாராகும் தமிழ்நாடு அரசு !

 ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு ? தயாராகும் தமிழ்நாடு அரசு !

தமிழ்நாட்டில் பள்ளிகளை விரைவில் தொடங்க கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 36,000 என்ற அளவிலிருந்து 2500 என்ற அளவுக்கு குறைந்துள்ளது . 

ஒவ்வொரு நாளும் இதில் சரிவு ஏற்பட்டு வரும் நிலையில் விரைவில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன . இந்நிலையில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி பெற்றோர் , கல்வியாளர்கள் , ஆசிரியர்கள் , பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது .

புதுச்சேரியில் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் . வல்லுனர் குழு அமைத்து , மருத்துவ , உளவியல் நிபுணர்கள் கருத்துக்களுடன் அரசுக்கு அறிக்கை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது . இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது . 

பள்ளிகளைத் திறக்கும் முன் , அனைத்து ஆசிரியர்கள் , பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் . மாணவர்களுக்கும் தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் , தமிழ்நாடு அரசு உரிய வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து , அதை பள்ளிகள் பின்பற்ற உத்தரவிட வேண்டும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment

back to top

Back To Top