Tuesday, July 13, 2021

முதல்வர் அறிவுரை..

அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு முறை கைத்தறி ஆடைகளை உடுத்த முதல்வர் அறிவுரை சார்ந்து செய்தி வெளியீடு!


 நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டும் ” கைத்தறி , கைத்திறன் , துணிநூல் மற்றும் கதர்த்துறை ஆய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரை . 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று ( 13.07 2021 ) தலைமைச் செயலகத்தில் , கைத்தறி , கைத்திறன் , துணிநூல் மற்றும் கதர்த்துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது . கைத்தறி மற்றும் துணிநூல் இக்கூட்டத்தில் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடித் திட்டங்களான வேட்டி , சேலை வழங்கும் திட்டம் மற்றும் பள்ளி மாணாக்கர்களுக்குச் சீருடை வழங்கும் திட்டம் குறித்தும் , நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடும் வகையில் அவர்களுக்குத் தொடர் வேலைவாய்ப்பு அளிப்பது குறித்தும் , அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் நெசவாளர்களுக்குச் சென்றடைய உரிய அறிவுரைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார் துறையின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்தும் . துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இதர நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அணுகுமுறையாக , பாரம்பரியத்தை இளையதலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பது , அனைத்து வயதினருக்கும் ஏற்ற கைத்தறி ஆடைகளை வடிவமைப்பது , ஒருங்கிணைந்த விற்பனை வளாகங்களை உருவாக்குவது கைத்தறியை உயர் வருவாய் பிரிவினரிடம் கொண்டு செல்வதன் மூலம் நெசவாளர்களின் வருமானத்தை உயர்த்துவது , அரசு ஊழியர்கள் வாரம் இரண்டு நாட்கள் கைத்தறி ஆடைகளை உடுத்த அறிவுறுத்துவது , தமிழ்நாட்டின் நெசவிற்கு ஒரு வணிகப் பெயரை ( Branding ) உருவாக்குவது போன்ற அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்

No comments:

Post a Comment

back to top

Back To Top