Thursday, July 1, 2021

புதிய தகவல் பள்ளிகளை திறக்க..

 தமிழகத்தில் 10,11,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. எனினும் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.. ஆனால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டன.. பின்னர் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் எடுக்கப்பட்டு வந்தது.

மேலும் 1 முதல் 10-ம் வகுப்பு வரை மற்றும் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதே போல் கொரோனா 2-வது அலை தீவிரம் காரணமாக, 12-ம் வகுப்பு பொது தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. 10 மற்றும் 11-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது..

இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தாலும், பள்ளிகள் திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.. எனினும் நிர்வாக பணிகளுக்காக மட்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.. இந்த சூழலில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளை படிப்படியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரைமரி, நர்சரி, மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் வலியுறுத்தி உள்ளார்.. முதலில் 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளார். மேலும் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகளை திறக்க அரசை வலியுறுத்தி உள்ள அவர், அரசின் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..

கொரோனா தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகு தான் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : daily hunt

No comments:

Post a Comment

back to top

Back To Top