Tuesday, July 13, 2021

துவங்கியது 3ம் அலை ஆய்வாளர் அதிர்ச்சி தகவல்

துவங்கியது 3ம் அலை ஆய்வாளர் அதிர்ச்சி தகவல் - தினமலர்




ஐதராபாத் : நாட்டில் கொரோனா மூன்றாம் அலை துவங்கி உள்ளதாக , ஐதராபாத் ஆய்வாளர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் . தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பல்கலையின் இயற்பியல் துறை நிபுணரும் , முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் விபின் ஸ்ரீவத்சவா , கொரோனா மூன்றாம் அலை தொடர்பாக சில ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் . கடந்த 15 மாதங்களில் புதிய தொற்று பரவல் , இறப்பு தொடர்பான தினசரி பதிவுகளை பகுப்பாய்வு செய்துள்ள அவர் , 4 ம் தேதி கொரோனா மூன்றாம் அலை துவங்கியுள்ளதாக கூறுகிறார் . கடந்த பிப் . , மாதம் நாட்டில் இரண்டாம் அலை துவங்கியபோது பதிவான தொற்று பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை தொடர்பான புள்ளி விபரங்கள் , தற்போதைய நிலையுடன் ஒத்திருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார் .

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படாவிட்டால் , மூன்றாம் அலை வேகம் எடுப்பதை தடுக்க முடியாது என்றும் அவர் எச்சரித்துள்ளார் .


No comments:

Post a Comment

back to top

Back To Top