Saturday, June 26, 2021

பலே...11 மாவட்டங்கள்..

 தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் 5-7- 2021 வரை நீட்டிப்பு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து , தமிழ்நாட்டில் மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பரவலின் அடிப்படையில் , மாவட்டங்கள் 3 ஆக வகைப்படுத்தப்பட்டு , நடைமுறையில் உள்ள ஊரடங்கு 28- 6- 2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் , தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவல் குறைந்துள்ளதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் இந்த ஊரடங்கை 5-7- 2021 காலை 6- 00 மணி வரை , நீட்டிப்பு செய்து உத்தரவு.

வகை 1 - ( 11 மாவட்டங்கள் ) 1 கோயம்புத்தூர் , நீலகிரி , திருப்பூர் , ஈரோடு , சேலம் , கரூர் , நாமக்கல் , தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டினம் , மயிலாடுதுறை மாவட்டங்கள் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு  நேரத் தளர்வு அளிப்பதுடன் , கூடுதலாக பின்வரும் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகிறது . 

காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை

  • அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் , விளையாட்டு திடல்கள் காலை  நடை பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் . 

காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை...

  • தேநீர்க் கடைகளில்  பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் .
  • சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும்.
  • அழகு நிலையங்கள் , சலூன்கள் ( Beauty Parlour , Saloons , Spas ) குளிர் சாதன வசதி இல்லாமலும் , ஒரு நேரத்தில் 50 சதவிகித வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்க வேண்டும்.
காலை 6.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை...
  • விளையாட்டு பயிற்சி குழுமங்கள் பார்வையாளர்கள் இல்லாமல் , திறந்த வெளியில் போட்டிகள் நடத்தவும் , அனுமதிக்கப்படும் . 
  • இனிப்பு மற்றும் காரவகை விற்பனை செய்யும் கடைகளில் பார்சல் சேவைகள் மட்டும் .
  • மின் வணிகம் ( e commerce ) மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களும் , உணவகங்கள் மற்றும் அடுமணைகளில் ( hotels , restaurants and bakeries ) பார்சல் சேவை மட்டும்.
  • இதர மின் வணிக சேவை நிறுவனங்கள் ( E- commerce ) அனைத்தும்.
காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை..
  • மின் பொருட்கள் , பல்புகள் , கேபிள்கள் , ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள்.
  • ஹார்டுவேர் கடைகள் 
  • கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்.
  • காலணிகள் விற்பனை செய்யும் கடைகள் . 
  • பாத்திரக் கடைகள் , பேன்ஸி , அழகு சாதனப் பொருட்கள் , போட்டோ / வீடியோ , சலவை , தையல் அச்சகங்கள் , ஜெராக்ஸ் கடைகள்.
  • மிக்சி , கிரைண்டர் , தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள் .
  • வாகன விநியோகஸ்தர்களது விற்பனை மற்றும் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் .
  • வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள்.
  • செல்பேசி மற்றும் அதனைச் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்
  • கணினி வன்பொருட்கள் , மென்பொருட்கள் , மின்னனு சாதனங்களின் உதிரிபாகங்கள் ( Computer Hardware , Software , Electronic Appliances Spare Parts ) விற்பனை செய்யும் கடைகள்.
  • கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்.
அரசு அலுவலகங்கள் மற்றும் சில...

100 % பணியாளர்களுடன் செயல்படுவை
  • அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள்.
  • சார் பதிவாளர் அலுவலகங்கள்
  • ஏற்றுமதி நிறுவனங்கள் , ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவிகிதம் பணியாளர்களுடன்.
  • இதர அரசு அலுவலகங்கள் , 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 
  • அனைத்து தனியார் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் , 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 
  • வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் , தானியங்கி பணம் வழங்கும் ( ATM ) சேவைகள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 
  • இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ( SEBI ) மற்றும் அதன் செயல்பாடுகள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 
  • இ- சேவை மையங்கள் வழக்கம் போல இயங்கும் . 
33 % பணியாளர்களுடன் செயல்படுபவை..
  • இதர தொழிற்சாலைகள்  அனுமதிக்கப்படும் . 
  •  வீட்டு வசதி நிறுவனம் ( HFCs ) வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ( NBFCs ) , குறு நிதி நிறுவனங்கள் ( MFIs ) 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் . 
  • கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களின் அலுவலங்கள்.
மேலும் சில..
  • தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் 20 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும் .
  • அனைத்து வகையான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படும் . 
  • பள்ளி , கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகள் அனுமதிக்கப்படும்
  • திரைப்படத் தயாரிப்புக்கு பின்னர் உள்ள பணிகள் அனுமதிக்கப்படும் . 
  • திறந்த வெளியில் , திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 100 நபர்கள் மட்டும் கொரோனா RTPCR பரிசோதனை மேற்கொண்ட பின்னர் பங்கேற்கலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கப்படும் 
  • திரையரங்குகளில் , தொடர்புடைய வட்டாட்சியரின் அனுமதி பெற்று வாரத்தில் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.


No comments:

Post a Comment

back to top

Back To Top