Thursday, March 31, 2022
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.04.22
திருக்குறள் :
இயல்: நட்பியல்
அதிகாரம்: பகைமாட்சி
குறள் : 864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
பொருள்:
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்
பழமொழி :
Against God's wrath, no castle is proof.
அலை கடலுக்கு அணை போடலாமா?
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன்.
2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.
பொன்மொழி :
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. ___அப்துல் கலாம்
பொது அறிவு :
1. வைரத்தில் மொத்தம் எத்தனை முனைகள் உள்ளன?
ஆறு.
2. "சிவப்பு கிரகம்" என்றழைக்கப்படும் கோள் எது?
செவ்வாய்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
அகத்திக் கீரையை சமைத்துச் சாப்பிட்டால், பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சி ஆகும். சிறுநீர், மலம் தாராளமாக வெளியேறும். அகத்திக் கீரையில் 8 . 4 விழுக்காடு புரதமும் 1. 4 விழுக்காடு கொழுப்பும், 3. 1 விழுக்காடு தாது உப்புக்களும் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக் கீரையில் மாவுச்சத்து,, வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.
கணினி யுகம் :
ஏப்ரல் 01
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
from Covai Women ICT https://ift.tt/sexmzBD
Wednesday, March 30, 2022
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.03.22
திருக்குறள் :
இயல்: நட்பியல்
அதிகாரம்:பகைமாட்சி
குறள் : 863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
பொருள்:
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்
பழமொழி :
All are not hunters that blow the horn.
துப்பாக்கி எடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள் அல்ல.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன்.
2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.
பொன்மொழி :
துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும். ___கலாம்
பொது அறிவு :
1. உலோகங்களின் இராஜா என்றழைக்கப்படும் உலோகம் எது?
இரும்பு.
2. எந்த ஒரு அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது?
பிளாட்டினம்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும்.
கணினி யுகம் :
மார்ச் 31
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
![🌸](https://fonts.gstatic.com/s/e/notoemoji/14.0/1f338/32.png)
from Covai Women ICT https://ift.tt/PTfnFOg
Tuesday, March 29, 2022
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.03.22
திருக்குறள் :
இயல்: நட்பியல்
அதிகாரம்: இகல்
குறள் : 860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
பொருள்:
மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்
பழமொழி :
The worth of the thing is best known by the want
உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன்.
2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.
பொன்மொழி :
கங்கையில் குப்பைகளையும் அசுத்தங்களையும் எறிந்தாலும் அதன் பவித்ரம் குறைவதில்லை. அதுபோல் குருவின் மகிமை மாறுவதில்லை.____ ராமகிருஷ்ண பரமஹம்சர்
பொது அறிவு :
1. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது?
ஜப்பான்.
2. ஆயிரம் ஏரிகள் உடைய நாடு எது?
பின்லாந்து.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
தினை அரிசி புரதச் சத்து அதிகம்நிறைந்த உணவாகும். தினை தோலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமைத் தன்மையை காக்க உதவுகிறது. கண்களுக்கு நன்மை அளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். இதில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் உண்டு. இதயத்துக்கு பலம் சேர்க்கும் b1 வைட்டமின் தினையில் உண்டு. நினைவுத்திறன் அதிகரிக்கும். முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளைத் தடுக்கும்.தினையில் இருக்கும் புரதமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சரி செய்ய உதவுகிறது.
கணினி யுகம் :
மார்ச் 30
![About this sound](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/Loudspeaker.svg/11px-Loudspeaker.svg.png)
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
from Covai Women ICT https://ift.tt/dvLl6G0