Thursday, March 31, 2022
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.04.22
திருக்குறள் :
இயல்: நட்பியல்
அதிகாரம்: பகைமாட்சி
குறள் : 864
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது
பொருள்:
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்
பழமொழி :
Against God's wrath, no castle is proof.
அலை கடலுக்கு அணை போடலாமா?
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன்.
2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.
பொன்மொழி :
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை. ___அப்துல் கலாம்
பொது அறிவு :
1. வைரத்தில் மொத்தம் எத்தனை முனைகள் உள்ளன?
ஆறு.
2. "சிவப்பு கிரகம்" என்றழைக்கப்படும் கோள் எது?
செவ்வாய்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
அகத்திக் கீரையை சமைத்துச் சாப்பிட்டால், பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சி ஆகும். சிறுநீர், மலம் தாராளமாக வெளியேறும். அகத்திக் கீரையில் 8 . 4 விழுக்காடு புரதமும் 1. 4 விழுக்காடு கொழுப்பும், 3. 1 விழுக்காடு தாது உப்புக்களும் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக் கீரையில் மாவுச்சத்து,, வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன.
கணினி யுகம் :
ஏப்ரல் 01
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
from Covai Women ICT https://ift.tt/sexmzBD
Wednesday, March 30, 2022
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.03.22
திருக்குறள் :
இயல்: நட்பியல்
அதிகாரம்:பகைமாட்சி
குறள் : 863
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
பொருள்:
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்
பழமொழி :
All are not hunters that blow the horn.
துப்பாக்கி எடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள் அல்ல.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன்.
2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.
பொன்மொழி :
துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை. வெல்வோம், சாதிப்போம், வேதனைகளைத் துடைத்தெறிவோம் எந்தை அருளால் எதுவும் வசமாகும். ___கலாம்
பொது அறிவு :
1. உலோகங்களின் இராஜா என்றழைக்கப்படும் உலோகம் எது?
இரும்பு.
2. எந்த ஒரு அமிலத்தாலும் கரைக்க முடியாத உலோகம் எது?
பிளாட்டினம்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெய்யை வெறும் வயிற்றில் குடித்தால் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்புப்புரை தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும்.
கணினி யுகம் :
மார்ச் 31
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
 விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்க இருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
 விவசாயிகளுக்கு தெளிப்பு நீர் பாசன கருவிகள் வழங்க இருப்பதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் கொண்டுசெல்ல வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதிக்குள் கொண்டுசெல்ல வேண்டும் என தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.  பாரத் நெட் திட்டம் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் ஓராண்டுக்குள் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இ-சேவை மையங்கள் இல்லாத இடங்களில் விரைவில் இ-சேவை மையம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 பாரத் நெட் திட்டம் மூலம் 12,525 கிராம ஊராட்சிகளில் ஓராண்டுக்குள் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் இ-சேவை மையங்கள் இல்லாத இடங்களில் விரைவில் இ-சேவை மையம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்று வெற்றியை தொடர கொல்கத்தா அணியும் முதல் வெற்றியை பெற பெங்களுரு அணியும் களமிறங்குகின்றன. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.
இன்று வெற்றியை தொடர கொல்கத்தா அணியும் முதல் வெற்றியை பெற பெங்களுரு அணியும் களமிறங்குகின்றன. தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூ பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. தற்போது ஜோர்டன் செல்லவுள்ள இந்திய அணி, எகிப்து (ஏப். 5), ஜோர்டன் (ஏப். 8) அணிகளுக்கு எதிராக நட்பு கால்பந்தில் பங்கேற்க உள்ளது. இதற்காக 30 பேர் கொண்ட இந்திய வீராங்கனைகள் அடங்கிய அணி, பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பை தலைமையில் கோவாவில் நேற்று முதல் பயிற்சியை துவங்கியது.
 தற்போது ஜோர்டன் செல்லவுள்ள இந்திய அணி, எகிப்து (ஏப். 5), ஜோர்டன் (ஏப். 8) அணிகளுக்கு எதிராக நட்பு கால்பந்தில் பங்கேற்க உள்ளது. இதற்காக 30 பேர் கொண்ட இந்திய வீராங்கனைகள் அடங்கிய அணி, பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பை தலைமையில் கோவாவில் நேற்று முதல் பயிற்சியை துவங்கியது. Students have to be under the supervision of the school team till they reach the classroom from the bus - order from the School Education Department.
 Students have to be under the supervision of the school team till they reach the classroom from the bus - order from the School Education Department. Farmers will be supplied with spray watering tools for crops says Nilgiris Collector.
 Farmers will be supplied with spray watering tools for crops says Nilgiris Collector.  For 10th and 12th students, the exam question papers should reach the centers before the 6th order by the Department of Exams.
 For 10th and 12th students, the exam question papers should reach the centers before the 6th order by the Department of Exams.  Through Bharath Net Scheme 12,525 villages will have net connections within a year says Minister Mano Thangaraj. He also said in Tamil Nade E Sevai will be started soon in places where there are no E Sevai centers.
Through Bharath Net Scheme 12,525 villages will have net connections within a year says Minister Mano Thangaraj. He also said in Tamil Nade E Sevai will be started soon in places where there are no E Sevai centers.  To continue their win Calcutta team and to get their first victory Bangalore team both are playing. Bangalore team selected bowling, Calcutta team bating.
 To continue their win Calcutta team and to get their first victory Bangalore team both are playing. Bangalore team selected bowling, Calcutta team bating.  The Indian hockey team is going to play against Egypt on April 5th and Jordan on 8th in a friendly football match. For this, a team of 30 women players is selected and coach Thomas Tennerby gives them coaching at Goa.
The Indian hockey team is going to play against Egypt on April 5th and Jordan on 8th in a friendly football match. For this, a team of 30 women players is selected and coach Thomas Tennerby gives them coaching at Goa.from Covai Women ICT https://ift.tt/PTfnFOg
Tuesday, March 29, 2022
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.03.22
திருக்குறள் :
இயல்: நட்பியல்
அதிகாரம்: இகல்
குறள் : 860
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு
பொருள்:
மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும் நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெருமகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும்
பழமொழி :
The worth of the thing is best known by the want
உப்பின் அருமை உப்பில்லாவிட்டால் தெரியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாரும் நம்பினாலும் பொய் பொய் தான் ஒருவரும் நம்பாவிட்டாலும் உண்மை உண்மை தான் எனவே எப்போதும் உண்மையே கூறுவேன்.
2.கவனச் சிதறல் என் வாழ்வை கெடுக்கும் எனவே கவனத்தோடு என் காரியங்களைச் செய்வேன்.
பொன்மொழி :
கங்கையில் குப்பைகளையும் அசுத்தங்களையும் எறிந்தாலும் அதன் பவித்ரம் குறைவதில்லை. அதுபோல் குருவின் மகிமை மாறுவதில்லை.____ ராமகிருஷ்ண பரமஹம்சர்
பொது அறிவு :
1. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது?
ஜப்பான்.
2. ஆயிரம் ஏரிகள் உடைய நாடு எது?
பின்லாந்து.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
தினை அரிசி புரதச் சத்து அதிகம்நிறைந்த உணவாகும். தினை தோலின் பளபளப்பு தன்மையை அதிகரித்து இளமைத் தன்மையை காக்க உதவுகிறது. கண்களுக்கு நன்மை அளிக்கும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. கண் மற்றும் முடியின் ஆரோக்கியம் மேம்படும். இதில் கால்சியம், புரதம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம் உண்டு. இதயத்துக்கு பலம் சேர்க்கும் b1 வைட்டமின் தினையில் உண்டு. நினைவுத்திறன் அதிகரிக்கும். முதுமையில் வரக்கூடிய மூளை குறைபாடுகளைத் தடுக்கும்.தினையில் இருக்கும் புரதமானது நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சரி செய்ய உதவுகிறது.
கணினி யுகம் :
மார்ச் 30
 கேட்க); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..
கேட்க); (Vincent Van Gogh, மார்ச் 30, 1853 - சூலை 29|, 1890) ஒரு டச்சு பின்-உணர்வுப்பதிவுவாத ஓவியர். இவரது ஓவியங்களில் சில உலகின் மிகவும் அறியப்பட்டவையும் புகழ் பெற்றவையும் அதிகம் விலையுள்ளவையுமான ஓவியங்களுள் அடங்கும். ஒரு தசாப்தத்தில் 860 எண்ணெய் ஓவியங்கள் உட்பட, வெறும் 2,100 கலைப்படைப்புகளை உருவாக்கியவர். பிரான்சில் வாழ்ந்த கடைசி இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்துவிட்டார். வறுமை மனநோய் போன்றவற்றால் துன்புற்று அவரது வாழ்வு 37 வயதில் தற்கொலையில் முடிந்தது..நீதிக்கதை
இன்றைய செய்திகள்
from Covai Women ICT https://ift.tt/dvLl6G0
 
.png)
.jpg)


