Sunday, February 27, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.02.22

  திருக்குறள் :

குறள் - 816, 
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும். 

பொருள் - அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்

பழமொழி :

Talking more is not wisdom.


அதிகப் பேச்சு அறிவுடைமை அல்ல.

இரண்டொழுக்க பண்புகள் :

1வார்த்தையால் பேசுவதை விட..வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன் 

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

பொன்மொழி :

தன்னம்பிக்கை இல்லாதவன்
வெற்றி பெறுவது கடினம்..
அசைக்க முடியாத
தன்னம்பிக்கை கொண்டவன்
வீழ்வது அரிது....அம்பேத்கர்

பொது அறிவு :

1.உலகின் பெரிய ரயில்நிலையம் எது? 

நியூயார்க் (கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்). 

2. எந்த நாடு ஆண் - பெண் இருவருக்கும் சம ஊதியம் வழங்க சட்டம் இயற்றியுள்ளது?

 ஐஸ்லாந்து.

English words & meanings :

Brief - short, சுருக்கமாக, 

caution - careful - கவனமாக

ஆரோக்ய வாழ்வு :

தினமும் 8- 10 பாதாம் சாப்பிடுவதால் அதில் உள்ள அமினோ அமிலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும். பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் தோலை நீக்கிவிட்டு, தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடை சீராக இருக்கும். பாதாமின் தோலில் உள்ள டேமின் என்ற வேதிப்பொருள், செரிமானத்தை பாதிக்கும் என்பதால் தோலுடன் உண்ண வேண்டாம்.

கணினி யுகம் :

Ctrl+shift+> - increase the font size, 

ctrl+shift +< - decrease the font size

பிப்ரவரி 28


தேசிய அறிவியல் நாள்




தேசிய அறிவியல் நாள் (National Science Dayஇந்தியாவில் பெப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள் மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 - ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது.இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் சிறந்த இயற்பியல் மேதையுமான சர். சி. வி ராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.[3]

சர். சி. வி. இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை (Raman Effect) இந்நாளிலேயே கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்ததுடன் உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

நீதிக்கதை


வளைந்த நாணல்

ஒரு நாள் தென்றல் காற்று வீசியது. தோட்டத்திலுள்ள மரங்கள், புற்களையும், நாணலையும் பார்த்து, சிறு தென்றல் காற்று வீசியதற்கே பலமற்றுப் போய் அசைந்து கொடுக்கிறாயே? என்று ஏளனமாகப் பேசி சிரித்தன. 

அடுத்தநாளே தோட்டத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. சூறைக்காற்று பலமாக வீசியதால் தோட்டத்தில் இருந்த மரங்கள் ஒவ்வொன்றாக முறிந்து விழுந்தன. அப்போது நாணல், மரங்களே! நீங்களும் என்னைப் போல் வளைந்து கொடுக்கப் பழகியிருந்தால் இப்படி வேரோடு சாய்ந்திருக்க மாட்டீர்கள்!

எங்களைப் பார்த்து ஏளனமாக கேலி பேசினீர்களே! நாங்களும் உபயோகமானவர்கள் தான். நாங்கள் ஆற்றுநீர் கரையை அரிக்காமல் தடுப்பதால்தான், நீங்களெல்லாம் கம்பீரமாக நிற்க முடிகிறது. இல்லையேல் கம்பீரமாக நிற்க முடியாது. அதேபோல் உருவத்தில் சிறியதாக இருக்கும் எறும்பு, தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்தால் உருவத்தில் பெரிய யானையாலும் வலியை தாங்கிக் கொள்ள முடியாது என்றது.

நாணல் பேசியதை கேட்டு மரங்களால் எதுவுமே பேச முடியவில்லை. அப்போதுதான் மரங்கள் உருவத்தில் சிறியதாக இருந்த நாணலைப் பார்த்து அலட்சியமாகப் பேசியது தவறு என்பதைப் புரிந்து கொண்டன.

நீதி :
ஒருவரையும் ஏளனமாகப் பேசக்கூடாது.

இன்றைய செய்திகள்

28.02.22

✔கல்வியில் சிறந்த மாநிலம் என்ற பட்டம் போதாது, ‘உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழகம்’ என்ற பட்டத்தைப் பெறவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

✔ மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடலில் இந்தியாவின் முதல் கடல் பசு பாதுகாப்பகம்: ரூ.5 கோடி செலவில் அமைக்க தமிழக அரசு அனுமதி.

✔ ரூ.12,000 கோடி வருவாயைக் கடந்த பதிவுத்துறைக்கு, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்  பாராட்டு தெரிவித்துள்ளார்.

✔ உக்ரைன் நகரங்களுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தாக்குதலை துரிதப்படுத்தி உள்ள நிலையில் கீவ், கார்கிவ் நகரங்களில் இருக்கும் இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

✔ சர்க்கரை, உப்பு அதிகம் உள்ள உணவுகளுக்கு கூடுதல் வரி: நிதி ஆயோக் ஆலோசனை.

✔ ரஷ்ய ராணுவ நடவடிக்கை 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு அறிவுறுத்த வேண்டி உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.

✔ பல்கேரியாவில் நடந்து வரும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.

✔ கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான கார்பந்தயப் போட்டியில் சென்னை வீரர் முதலிடம் பிடித்தார்.

Today's Headlines

 ✔ Chief Minister MK Stalin has advised that the title of 'Best State in Education' is not enough, we need to get the title  'A state Best in Higher Education and Research Education' also. 

 ✔ India's first sea cow sanctuary in the Gulf of Mannar, in the Bagh Strait, approved by the Government of Tamil Nadu at a cost of Rs 5 crore.

 ✔ The Minister of Commercial Taxes and Registration of Tamil Nadu has applauded the registration department for its revenue of Rs 12,000 crore.

 ✔ The Indian embassy in Ukraine has advised Indians in Kyiv and Kharkiv not to leave Ukrainian cities as Russian forces intensify their fight.

 ✔ The extra tax on foods high in sugar and salt: Financial ayog advice.

 ✔ Ukraine has appealed to the International Court of Justice (ICJ) to instruct Russia to end the war as Russian military action reaches its 4th day.

 ✔ India wins bronze at an international boxing tournament in Bulgaria

 ✔ The Chennai player took the first place in the national level car race held in Coimbatore.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


from Covai Women ICT https://ift.tt/HnEbdxO

Saturday, February 26, 2022

ரஷ்யா - உக்ரைன் போர் துவங்க காரணம் | RUSSIA - UKRAINE WAR

ரஷ்யா - உக்ரைன் போர் துவங்க காரணம் | RUSSIA - UKRAINE WAR
In this channel you can watch, Most important General Knowledge ( GK ) questions in Tamil, Top 10 General Knowledge ( GK ) ...

முடிந்தால் கண்டுபிடி _ கணித வினா_ maths puzzle

முடிந்தால் கண்டுபிடி _ கணித வினா_ maths puzzle
In this channel you can watch, Most important General Knowledge ( GK ) questions in Tamil, Top 10 General Knowledge ( GK ) ...

Friday, February 25, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.22

 திருக்குறள் :

பால் : பொருட்பால், 

இயல் : நட்பியல், 

அதிகாரம்:தீ நட்பு 

குறள் எண்:815.

செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. 

பொருள்:
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

பழமொழி :

What is one man's meal is another man's poison.


பூனைக்கு கொண்டாட்டம், எலிக்கு திண்டாட்டம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிலையான வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது எனவே நேர் வழியில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொள்வேன். 

2. என் வாழ்வில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் நன்மைக்கே.எனவே எதைக் குறித்தும் கலங்காமல் முன்னேறி செல்வேன்

பொன்மொழி :

வெற்றி எனும் உயரத்தை
அடைய ஏணியாக
இருக்கும் ஆயுதம் தான்
தன்னம்பிக்கை அதை
எப்போதும் வளர்த்துக் கொள்.....சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு :

1. இந்திய குடியரசின் அதிகாரப்பூர்வ மொழிகள் எத்தனை? 

22 மொழிகள். 

2. 1 டிகிரி தீர்க்க ரேகையைக் கடக்க பூமி எடுத்துக்கொள்ளும் நேரம் எவ்வளவு? 

4 நிமிடம்.

English words & meanings :

Astonished - surprised, மிகுந்த ஆச்சர்யம், 

narrate - tell, சொல்லுதல்

ஆரோக்ய வாழ்வு :

செவ்வாழைப்பழம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பல் வலி, பல்லசைவு போன்ற உபாதைகளையும், விரைவில் குணப்படுத்தும். உடல் எடையை கட்டுப்படுத்தும். 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.





நீதிக்கதை


உருவத்தை பார்த்து பழகாதே

ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.

அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...

ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.

உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.

மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன.

இன்றைய செய்திகள்

26.02.22

✅ தமிழகம் முழுவதும் அஞ்சலகங்களில் ஆதார் சிறப்பு முகாம்.


✅ புதுச்சேரியில் மார்ச் 19-ல் காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு  நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


✅ நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளை சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்தது: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்.

✅ ரஷ்யாவின் தாக்குதலால் விமான போக்குவரத்து நிறுத்தம் - உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள்.

✅ உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷ்யப் படைகள் குவிந்துள்ள நிலையில், உக்ரைன் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

✅ 'மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 மணி நேரமாக தஞ்சம்... எங்களை பிரதமர் மோடி மீட்க வேண்டும்' - உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள்.

✅ ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்.

✅ காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்தியாவின் மீராபாய் ஜானு.

Today's Headlines

✅ Aadhar Special Camp at Post Offices across Tamil Nadu.

 ✅ It has been announced that the written test for the post of a police officer will be held on March 19 in Pondicherry.


✅ Chandrayaan-2 spacecraft detects solar proton events that are not captured by NASA's satellite: information by Indian Space Research Organization

 ✅ Air traffic is stopped due to a Russian attack - now Indians stranded in Ukraine.

 ✅ As Russian forces concentrate north of the Ukrainian capital, Kyiv, Russia has said it is ready for talks if Ukraine stops fighting.

 ✅ 'Asylum at the metro station for 30 hours ... Prime Minister Modi must rescue us' - Indian students stranded in Ukraine.

✅ 2nd ODI against Afghanistan: Bangladesh won the series.

 ✅ India's Mirabai Janu qualifies for Commonwealth Games
 Prepared by

Covai women ICT_போதிமரம்


from Covai Women ICT https://ift.tt/TP5Rr1v

கரப்பான் பூச்சி பால் (cockroach milk )

கரப்பான் பூச்சி பால் (cockroach milk )
In this channel you can watch, Most important General Knowledge ( GK ) questions in Tamil, Top 10 General Knowledge ( GK ) ...

Thursday, February 24, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.02.22

  திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்: நட்பியல்

அதிகாரம்: தீ நட்பு

குறள் எண்: 814

குறள்:
அமரகத் தாற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை

பொருள்:
போர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும்.

பழமொழி :

Better one word in time than two afterward.


வேலை அறிந்து பேசு,நாளை அறிந்து பயணம் மேற்கோள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நிலையான வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது எனவே நேர் வழியில் தான் என் வாழ்க்கை அமைத்துக் கொள்வேன். 

2. என் வாழ்வில் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் நன்மைக்கே.எனவே எதைக் குறித்தும் கலங்காமல் முன்னேறி செல்வேன்

பொன்மொழி :

சிறந்த குறிக்கோளை
அடைவதற்காக மனிதனால்
செய்யப்படும் முயற்சியே
பிற்காலத்தில் மற்றவர்களால்
படிக்கப்படும்
வரலாறாக மாறுகிறது...பரமஹம்சர்


பொது அறிவு :

1. நோபல் பரிசு வழங்கும் நாடு எது? 

ஸ்வீடன். 

2. நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்? 

ரபீந்திரநாத் தாகூர்.

English words & meanings :

Gorgeous - very beautiful, மிகவும் அழகான, 

Spotless - very clean, சிறிதும் அழுக்கற்ற தூய்மை இடம்

ஆரோக்ய வாழ்வு :

பப்பாளியில் வைட்டமின் சி, காப்பர், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள். அஜீரண கோளாறு, மலச்சிக்கல் போன்றவை சரியாகும். அனீமியா என்னும் ரத்தசோகையை தீர்த்து ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். அல்சர், கண்ணெரிச்சல் குணமாக உதவுகிறது. குழந்தைகள் அடிக்கடி பப்பாளி சாப்பிடுவதால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாக இருக்கும்.



நீதிக்கதை


இரண்டு தேவதைகள்!

நயாகரா நீர்வீழ்ச்சி தொடர்ந்து பாய்ந்து கொண்டிருந்தது. நீர்வீழ்ச்சியின் அழகை, இரண்டு தேவதைகள் ரசித்துக்கொண்டிருந்தனர். 

அப்போது, அனீலஸ் என்ற பறவை, அந்த நீர்வீழ்ச்சிக்கு வந்தது. தேவதைகள் இருவரும் அந்தப் பறவையைப் பார்த்து அனீலஸ் பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்க வந்துள்ளது, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை தான் நீராடும் என்று இரு தேவதைகள் பேசிக்கொண்டனர். 

அது நீராடுகிற காட்சியைப் பார்ப்பதற்கு யோகம் செய்தவர்களாக இருக்கிறோம், என்று பெருமைப்பட்டு கொண்டனர். 

அனீலஸ் பறவையோ, தன் அருகே இரண்டு தேவதைகள் இருப்பதைப் பார்த்து நீர்வீழ்ச்சியில் இன்பமாக குளித்தது. 

அந்த நேரத்தில், நீர்வீழ்ச்சியின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நீர் வேகமாகத்தை தாங்காமல் அனீலஸ் பறவை, தடுமாறியபடி நீரில் சிக்கிக்கொண்டது. அதைக் கண்ட தேவதைகள் இருவரும் பயந்தனர். 

அதில் ஒரு தேவதை, அனீலஸ் பறவை ஆபத்தில் சிக்கிவிட்டது. நான் சென்று உடனே காப்பாற்றுகிறேன்! என்றாள். உடனே மற்றொரு தேவதை, வேண்டாம். அனீலஸ்ஸை நானே சென்று காப்பாற்றுகிறேன். அந்த பாக்கியம் எனக்கே கிடைக்க வேண்டும் என்றாள். அதைக் கேட்ட மற்றொரு தேவதையோ, நானே அனீலஸ்ஸைக் காப்பாற்றப் போகிறேன். எக்காரணம் கொண்டும் உன்னை அனீலஸ்ஸைக் காப்பாற்றும்படி விட்டுக்கொடுக்க மாட்டேன்! என்று பிடிவாதமாகக் கூறியது. 

இப்படியே இரண்டு தேவதையும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்தில், கீச்... கீச்... என்ற கீச் குரல் கேட்டது. இரண்டு தேவதைகளும் திடுக்கிட்டு பார்த்தன. அவர்கள் பக்கத்தில் அனீலஸ் பறவை நின்று கொண்டிருந்தது. 

தேவதைகளே! உங்களுக்குள் சண்டை எதற்கு? நான் உயிர் பிழைத்து விட்டேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தால், என் உயிரை இழந்திருப்பேன். நானே முயற்சி செய்து உயிர் பிழைத்து உங்கள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன்! என்றது. 

அதைக் கேட்ட இரண்டு தேவதைகளும், வெட்கத்தில் தலை குனிந்தனர். நமக்குள் போட்டியிட்டு தற்பெருமைப்பட்டுக் கொண்டோமே! இந்தப் பறவைக்கு இருக்கிற அறிவு கூட தேவதைகளான நமக்கு இல்லையே! என்று வருத்தப்பட்டனர். 

நீதி :
பிறரை நம்புவதை விட நாம் நம்மை நம்பினால் வாழ்க்கையில் முன்னேரலாம்.

இன்றைய செய்திகள்

25.02.22

◆உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

◆பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய உதவித்தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் 'பத்திரிக்கையாளர் நலவாரியம்' அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

◆"ரஷ்யா - உக்ரைன் மோதல், மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம்" என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

◆போர் பதற்றம் நிலவும் உக்ரைனில் இருந்து 240 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பினர்.

◆உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும், சர்வதேச அமைப்புகளும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டையே பெரும்பாலான நாடுகளும் கொண்டுள்ளன.

◆நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி; இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்று அசத்தல்.

◆சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய நந்தினி இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

Today's Headlines


◆ The Government of Tamil Nadu has announced the number of liaison officers to assist the families of Tamil Nadu students and migrants stranded in Ukraine.

 ◆  The government of Tamil Nadu has set up a 'Press Welfare Board' to provide welfare grants and welfare assistance to journalists.

◆  "Russia-Ukraine conflict could become a major issue"  India has expressed concern at the Security Council meeting.

 ◆ 240 Indian students return home from war-torn Ukraine

 ◆ Many countries and international organizations have condemned Russia's attack on Ukraine.  Most countries are opposed to Russia's military action.

  ◆ Last ODI against New Zealand; the Indian women's team wins

  ◆ Nandini advanced to the semifinals of the International Boxing Championships to secure the first medal for India.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


from Covai Women ICT https://ift.tt/fmAb70c

back to top

Back To Top